என் மலர்
நீங்கள் தேடியது "தபால் நிலையம்"
- தபால் நிலையத்தை சாத்தான்குளம் நகரில் உள்ள தெரு பகுதிக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் தலைமை தபால் நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகில் மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் உள்ளன. மேலும் அருகிலுள்ள வாசக சாலை பஜாரில் அனைத்து பஸ்களும் வந்து நின்று செல்கின்றன.
இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ, மாணவிகளும் தபால் நிலையம் சென்று ஊருக்கு திரும்புவதற்கு போக்குவரத்து வசதியாக இருந்தது. இந்நிலையில் இந்த தபால் நிலையத்தை சாத்தான்குளம் நகரில் உள்ள தெரு பகுதிக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதை அறிந்த வர்த்தக சங்கத்தினர், பொது மக்கள், வியாபாரிகள் சாத்தான்குளம் தபால் நிலைய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறை அதி காரிகள் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தை யின் மூலம் தபால் நிலையம் இடம் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது உள்ள கட்டிடத்திலே சீரமைப்பு செய்து வழக்கம்போல் தபால் நிலைய அலுவலக பணிகளை செய்வதற்கு தபால் துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினரும், ஊர் பொதுமக்களும், தபால் நிலைய அதிகாரி அழகையா,அஞ்சலக ஆய்வாளர் செந்தில் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது.
- அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
உடுமலை :
கிராம கோவில் பூசாரிகளுக்கு, தபால் நிலையம் வாயிலாக ஆயுள் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் வாசு கூறியதாவது:-
நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது. தபால் நிலைய ஊழியர்கள், வீடு தேடிச்சென்று ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி, ஓய்வூதியர்களின் ஆயுள் சான்றுகளை டிஜிட்டல் முறையில் வழங்கி வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், கிராமப்புற கோவில்களில் பணியாற்றி, 60 வயது கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகள், வங்கிகள் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.அரசு ஓய்வூதியர்களை போன்று, ஆண்டுதோறும் இவர்களும் ஆயுள் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
அதன்படி, அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.கிராமப்புறங்களில் வசிக்கும் வயதான பூசாரிகள், தொலைவில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று வருவது சிரமமானது.
இதுபோன்றவர்கள், ஆயுள் சான்று பெறுவது என்பது மிகுந்த சிரமமானது. எனவே அரசு ஓய்வூதியர்களை போன்றே கோவில் பூசாரிகளுக்கும் தபால் நிலையம் வாயிலாக, ஆயுள் சான்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து முதியவர்களுக்கு தனி கவுன்டர் வேண்டும் என புகார் மனு
- 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரிசையில் நிற்காமல் சேவை வழங்கும் நடைமுறையை கண்டிப்புடன் தபால் நிலையங்கள் பின்பற்ற வேண்டும்;
திருப்பூர்
தபால்நிலையங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்கள், அனைத்து வகையான பரிவர்த்தனையையும், வரிசையில் நிற்காமல் பெறலாம். இதற்கு தங்கள் வயது சான்றிதழை சமர்ப்பித்தால் போதும் என தபால்துறை தெரிவித்திருந்தது.
ஆனால் பெரும்பாலான தபால்நிலையங்கள், இந்த நடைமுறையை முறையாக பின்பற்றுவதில்லை. இதனால் முதியவர்களுக்கு இப்படி ஒருநடைமுறை இருப்பதேதெரியவில்லை. இந்நிலையில் குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து முதியவர்களுக்கு தனி கவுன்டர் வேண்டும் என புகார் மனுக்கள்தபால்துறைக்கு அதிகம் வருகின்றன.
இதைத்தொடர்ந்து 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரிசையில் நிற்காமல் சேவை வழங்கும் நடைமுறையை கண்டிப்புடன் தபால் நிலையங்கள் பின்பற்ற வேண்டும்; இதுகுறித்து பொதுமக்கள் அறியும் வகையில், அனைத்து தபால்நிலையங்களிலும் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்று தமிழக தபால் வட்டம் அறிவுறுத்தியுள்ளது.
- மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
மதுரை
மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பசுமலை புது அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது59). இவர் மதுரை மீனாட்சி பஜார் தலைமை தபால் அலுவலகத்தில் எம்.டி.எஸ். பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை பத்மநாபன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். பெண் ஊழியர் பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை.
பத்மநாபன் தொடர்ந்து பெண் ஊழியரிடம் தொல்லை செய்து வந்துள்ளார். மனமுடைந்த பெண் ஊழியர் இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியர் பத்மநாபனை போலீசார் கைது செய்தனர்.
- இந்த திட்டத்தில் 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படும்.
- திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
திருப்பூர் :
இந்திய அஞ்சல் துறை சார்பில் மகளிர் மேன்மை சேமிப்புபத்திரம்-2023 என்ற திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தை பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்தி இந்த திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி வரை திருப்பூர் அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் நலன் காக்க சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
- லாக்கர் அறையில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது
- காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி ;
இரணியல் அருகே நெய்யூர் தபால் அலுவலகம் உள்ளது. இதனை நேற்று மாலை பணி முடிந்து ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இங்கு போஸ்ட் மாஸ்டராக கனகபாய் பணி புரிகிறார்.
இன்று காலை தபால் அலுவலகம் திறக்க வந்த போது முன் பக்கத்தில் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது லாக்கர் அறையில் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உயர் அதிகாரிகளுக்கும் இரணியல் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அலுவலக செல்போன் திருட்டு போனது தெரிய வந்தது. தபால் அலுவலகத்தில் சி.சி.டி.வி.காமிரா பொருத்தபட வில்லை. மேலும் அப்பகுதி யில் உள்ள காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- உயர் அதிகாரிகளுக்கும், இரணியல் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார்
- கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே நெய்யூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக கமலாபாய் என்பவர் பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தபால் அலுவலகம் திறக்க வந்த போது முன் பக்கத்தில் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது லாக்கர் அறையில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அவர் உயர் அதிகாரிகளுக்கும், இரணியல் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அலுவலக செல்போன் திருட்டு போனது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.
இதில் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் குற்றவாளி கைரேகையுடன் ஒத்து போனது தெரியவந்தது. அவர் திங்கள் நகர் பறயம் விளை பகுதியை சேர்ந்த வில்சன் (வயது 35) என்பவர் ஆவார். அவரிடம் போலீசார் கோர்ட்டு உத்தரவு பெற்று விசாரணை நடத்தியதில் அவர் தபால் அலுவலகத்தில் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். இதை அடுத்து வில்சனை இரணியல் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
- சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
- பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.
இதுதவிர, தற்பொழுது புதிதாக பெண்களுக்கு என மட்டுமே சிறப்பாக தொடங்கப்பட்டு உள்ள மகிலா சம்மான் சேமிப்பு பத்திரக்கணக்கும் (வட்டி விகிதம் 7.5 சதவீதம், இரண்டு ஆண்டுகள் வரை) தொடங்கும் வசதியும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் உள்ளது.
இதுபோன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தபால் சேவைகளை சேலம் மாநகரில் இயங்கி வரும் முக்கிய தபால் அலுவலகங்களிலும் கொண்டு வருவதற்கான முயற்சி பரிசீலனையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி க்கொள்ளுமாறு சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
- திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்படவில்லை.
- இதனால் பொது மக்கள் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும். இதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு முக்கிய ஊராக விளங்கி வருகிறது. இங்கு பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோவில் உள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி திருப்புவனத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட திருப்பு வனம் பேரூ ராட்சியில் நாள்தோறும் ஆதார் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு வந்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட வில்லை. இதனால் பொது மக்கள் மாணவ-மாணவி கள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஊர்களுக்கும் அல்லது வேறு சேவை மையங்க ளுக்கும் சென்று ஆதார் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
திருப்பு வனம் தபால் நிலையத்தில் ஆதார் மையத்தை செயல்படுத்தி கூடுதலாக அஞ்சல் அலுவலர்களை நியமித்து கூடுதல் நேரத்தில் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது.
- காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது.
ராசிபுரம்:
சேலம் மேற்கு தபால் கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக கூடுதலாக ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. 3 ஷிப்ட் ஆக பிரித்து ஊழியர்களை பணி அமர்த்தி இரவு 8 மணி வரை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்பகல் 2.30- க்கு பிறகும் தபால் நிலையத்திற்கு மக்கள் வந்து சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தலாம்.இனிமேல் ராசிபுரம் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பரிவர்த்தனைகள், விரைவு தபால் பார்சல் சேவை அயல்நாட்டு தபால் சேவை, மணியாடர் சேவை ஆகிய அனைத்தும் இரவு 8 மணி வரை வழங்கப்படும்.இந்த தகவலை சப் - போஸ்ட்மாஸ்டர் ஹெலன் செல்வராணி, உட்கோட்ட ஆய்வாளர் சரவணன், உதவி சப்-போஸ்ட் மாஸ்டர் நிர்மலா, பி.எல்.ஐ. வளர்ச்சி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.
- காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
- வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், ஆக.2-
குமார்நகர் தபால் நிலையம், நிர்வாக காரணங்களுக்காக, காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
தற்போது, இடமாற்றம் செய்யப்பட்டு, வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இன்று (2ம் தேதி) முதல் செயல்படும். புதிய முகவரியில் மக்கள் தபால் சேவையை பெறலாம்.
என திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
- நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
- இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடனடியாக வழங்க வேண்டும். தண்ணீர் இன்றி கருகி பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சேவையா ,விஜயலட்சுமி, பிரபாகர் , முத்துக்குமார், செல்வகுமார் ,கல்யாணி, விஜயலட்சுமி, ராமச்சந்திரன், முகில், ராமலிங்கம் ,மூத்த தலைவர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடகா அரசு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேப்போல் அம்மாபேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு காவிரி நீரை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதேப்போல் மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.