என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் பணியாளர்"
- அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் தினமும் 100 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
- கோவில் நிா்வாகத்தினா் சிசிடிவி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
அவிநாசி :
அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் தினமும் 100 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல அன்னதானத்துக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
அப்போது, சுவாமி தரிசனம் செய்ய வந்த தங்கமணி, பாா்வை குறைபாடுள்ள அவரது மகள் இந்திராணி ஆகியோா் அன்னதானம் சாப்பிடச் சென்றுள்ளனா். அதில் தங்கமணிக்கு டோக்கன் கிடைத்ததால் அவா் மட்டும் சாப்பிட அமா்ந்துள்ளாா். இந்திராணி வரிசையில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, இந்திராணி சாப்பிடுவதற்காக சென்றுள்ளாா். உடனே அங்கிருந்த கோவில் பெண் பணியாளா் எஸ்.கலாமணி, டோக்கன் இல்லாமல் சாப்பிட அனுமதியில்லை எனக் கூறியுள்ளாா். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்திராணியை, பணியாளா் கலாமணி தாக்கியதாக புகாா் அளிக்கப்பட்டது.
இது குறித்து கோவில் நிா்வாகத்தினா் சிசிடிவி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், கோவில் பணியாளா் எஸ்.கலாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும் ஆகஸ்ட்10ந் தேதி கோவிலில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கத்தை எழுத்துப் பூா்வமாக அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்