என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்ரீகாளஹஸ்தி"
- வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நிறைவு விழாவான நேற்று உற்சவ மூர்த்திகளான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு கலச ஸ்தாபனம் செய்து கணபதி பூஜை, புண்ணியாவதனம், வருண பூஜை செய்தனர். கலசத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்து ஹாரத்தி சமர்ப்பித்து வசந்த உற்சவம் நடத்தப்பட்டது.
அதன்பிறகு உற்சவர்களான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தீப, தூப, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். உற்சவர்கள் சப்பரத்தில் எழுந்தருளி சிவன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலூ, கோவல் துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணாரெட்டி மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்