என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆலய பெருவிழா"
- இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது.
- அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை
மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட குடும்ப நல்வாழ்வு மைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத் தார். தொடர்ந்து தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெப மாலை வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெறு கிறது.
அருட்தந்தையர்கள், பால் பிரிட்டோ (சமயநல்லூர்) ஜோசப் அந்தோணி (நாகமலைபுதுக்கோட்டை) ஜெயராஜ் ( பாஸ்டின் நகர்) அருளானந்தம் (வடக்கு வட்ட அதிபர்) மரிய மைக்கேல் (சதங்கை) பென டிக்ட் பர்னபாஸ் (மறைப் பணி நிலையம்) சகாயம் (ரட்சகர் சபை ) டேனியல், சந்தியாகு (அருளக குருக்கள்) ஆகியோர் பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்று கிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 24-ந்தேதி (சனிக்கிழமை) மாலை சகாய அன்னை திரு உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கப் பட்டு அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறு கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் சேகர் தலைமையில் பங்கு அருட்பணி பேரவை யினர், துறவற சபையினர், அன்பிய பொறுப்பாளர்கள், பங்கு இறை மக்கள் ஆகி யோர் செய்து வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலய பெருவிழா நடந்தது.
- தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனைத்து பணிக்குழுக்களின் இயக்குநர் பெனடிக்ட் பர்னபாஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப் பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய கூட்டுத் திருப்பலியுடன் விழா தொடங்கியது.
தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது. இறுதிநாளில் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமுஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப்பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. அதனைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்வாக நற்கருணை பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்