என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெத்திலி மீன்"
- விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம்.
- விசைப்படகில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தோட்டுக்கணவாய், புல்லன் இன்று சராசரி விலைக்குதான் போனது.
குளச்சல்:
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடிதொழில் செய்து வருகிறார்கள்.
விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். பைபர் படகுகள் காலையில் சென்று விட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். நேற்று கரை திரும்பிய விசைப்படகுகளில் கணவாய், தோட்டுக்கணவாய், புல்லன் போன்ற மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் அவற்றை ஏலக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். தோட்டுக்கணவாய் மீன் கிலோ ரூ.480-க்கும், சிறிய ரக கணவாய் ரூ.80 முதல் ரூ.90 வரையும் விலை போனது. 35 கிலோ கொண்ட ஒரு பெட்டி புல்லன் மீன்கள் ரூ.1500 வரை விலை போனது.
அதே சமயம் காலையில் ரூ.1300-க்கு விலை போன ஒரு குட்டை நெத்திலி மீன்கள் பின்னர் விலை வீழ்ச்சியடைந்து ரூ.800-க்கு போனது. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர்.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-
விசைப்படகில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தோட்டுக்கணவாய், புல்லன் இன்று சராசரி விலைக்குதான் போனது. பெரிய மாற்றம் எதுவுமில்லை. நெத்திலி மீன்களை பொறுத்தவரை விலை மிக குறைவு. இந்த மீன்கள் முன்பு ரூ.2 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம்
- பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நெத்திலி மீன் சீசன் களை கட்ட தொடங்கியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய பைபர் படகுகளில் அதிக அளவில் நெத்திலி மீன்கள் பிடிபட்ட நிலையில் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குமரி மாவட்டம் குளச்சல், முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நிலவி வந்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில் தற்போது குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2000-க்கும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய நிலையில் அவர்களது படகில் அதிக அளவில் நெத்திலி மீன்கள் பிடிபட்டிருந்தது. இதை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்