என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைகள்"

    • ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி தர வேண்டும் மற்றும் தேங்கி நிர்க்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பல கோரிக்கை விடுத்தனர்.
    • பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து மனுக்கள் பெறப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் ஈசான்ய தெரு 6வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் பாலமுருகன் தலைமை வைத்தார் கணக்கர்கள் ராஜகணேஷ் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜ சேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று க்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சீர்காழி ஈசான்ய தெருவில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈசான்ய தெருவில் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர வேண்டும் மழைக் காலம் தொடங்கி விட்டதால் கொசு மருந்து அடிக்க வேண்டும் சீர்காழி நகராட்சி பகுதியில் வார சந்தை செயல்பட்ட வந்த நிலையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நிலையில் தற்போது வரை வாரசந்தை நடைபெறவில்லை உடனடி யாக மக்கள் பயன்பெறும் வகையில் இடத்தை தேர்வு செய்து வார சந்தை அமைத்து தினந் தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கூட்டத்தில் 6வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொ ண்டனர்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம் ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளி, திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    புதிய வகுப்பறை கட்டடங்கள் வேண்டுமென்று பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். புதிய கட்டங்கள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    மேலும், பரமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதையும் விரைந்து நிறைவேற்றுவதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், விசிக ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலை.
    • கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேட்டங்குடி ஊராட்சியைச் சேர்ந்த வேம்படி கிராமத்தில் உள்ள முத்தரையர் தெருவுக்கு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர்கள் சொந்த மனை பட்டா இல்லாமல் 60 குடும்பங்கள் இருந்து வருவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அம்மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் வருவாய் துறை அதிகாரிகளிடம் 15 நாட்களில் 60 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    வேட்டங்குடி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள–வர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்றும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் இருவகொல்லை கிராமத்தில் தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தங்கி உள்ளார்கள்.வேட்டங்குடி, நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

    தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், வழிகாட்டுதல் முறையை பின்பற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் வசதி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஆர்டிஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர் சரவணன், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருண்மொழி, பொறியாளர்கள் தாரா, பலராமன், ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஒன்றியகுழு உறுப்பினர் அங்குதன், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், விவசாய சங்க தலைவர் வில்வநாதன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்.
    • குறைகள் இருப்பின், மேற்கண்ட கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை (வியாழக்கிழமை) நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் 1 மணி வரை தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1, வல்லம் ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடத்தப்பட உள்ளது.

    ஆகவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் புறநகர் பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், மேற்கண்ட கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது மக்கள் குறைகளை தெரிவித்தால் நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்துவேன் என்று அய்யப்பன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
    • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் மற்றும் துணைத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

    நகர் மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கலந்து கொண்டார். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், பேனர்கள் வைக்கவும் ஏற்கனவே உள்ள தடையை அமல் படுத்தவும், மீறுவோர் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    மேலும் திருமணம் மண்டபத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் இரவில் தூங்க முடியாத நிலை உள்ளது. கொசு மருந்து அடித்தாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

    எனவே நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுத்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    உசிலம்பட்டி நகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பொது இடத்தில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் விதித்து பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும். மேலும் வார்டுகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை என்னிடம் தெரிவித்தால் அதற்கு நிதி ஒதுக்கி வேலைகள் நடைபெற செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • விசாரணை திருப்தியில்லாத மனுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் முகாம் நடந்தது.
    • பொது மக்கள் தங்களுக்கு குறை, நிறைகள் இருந்தால் 78068-60806 மற்றும் 0452-2344989 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்

    மதுரை

    மதுரை மாநகரில் காவல் நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் நல்ல முறையில் நடத்தப்ப டுவதை உறுதி செய்யவும், அவர்களது குறைகளை விரைவாக தீர்க்கவும், பொது மக்கள் காவல் நிலையத்தில் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், இவற்றை கண்காணிக்கவும் ''Grievance REdressal And Tracking System'' (GREAT) என்ற திட்டம் 10.10.2022 முதல் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது.

    காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரர்கள் மற்றும் அவர்களது மனு விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் பதிவுகள், உடனுக்குடன் மாநகர காவல் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வர் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    பின்னர் மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து மனுதாரர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் நடத்தப்பட்ட விதம், குறைகள் கேட்கப்பட்டனவா? என்ற விபரம் பெறப்படுகிறது.

    இந்த திட்டம் தொடங்கப்பட்டபிறகு, மதுரை மாநகரக் காவல் நிலையங்களில் இதுவரை 4 ஆயிரத்து 706 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த புகார்தாரர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காவலர்கள் நடத்திய விதம், எடுக்கப்பட்ட நடவடி க்கைகள், விசாரணையின் விபரம் முதலியவற்றை கேட்டபோது 165 பேர் தங்களது மனுக்கள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும், விசாரணையில் திருப்தியில்லை என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து 165 மனுதா ரர்களின் குறைகளை மீண்டும் கேட்டறிந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் இன்று மதுரை மாநகர் ஆயுதப்படை மாரியம்மன் கோவில் திருமண மண்ட பத்தில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.

    மேலும் மனுதாரர்களுக்கு சட்ட ஆலோசகர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    இந்த முகாமில் துணை கமிஷனர்கள் மோகன்ராஜ், சீனிவாச பெருமாள், வனிதா, போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பொது மக்கள் தங்களுக்கு குறை, நிறைகள் இருந்தால் 78068-60806 மற்றும் 0452-2344989 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாநகர ேபாலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • தங்கள் அடையாள அட்டையுடன் 2 பிரதிகளில் மனுக்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    எனவே முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம். தங்கள் அடையாள அட்டையுடன் 2 பிரதிகளில் மனுக்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் ‌‌.

    இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.
    • ரெயிலடி நரிக்குறவர் காலனி பகுதியில் இருப்பிட வசதி குறித்து கேட்டறிந்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடை பெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ நேரில் ஆய்வு செய்தார்.

    மன்னார்குடி ஜெயின தெருவில் உள்ள அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார் .

    இதனை தொடர்ந்து ரயிலடி நரிக்குறவர் காலனி பகுதியில் இருப்பிட வசதி குறித்து நரிக்குறவர் மக்களிடம் கேட்டறிந்தார்.

    நகராட்சி மாடல் நடுநிலைப்பள்ளி, மற்றும் மன்னார்குடி ருக்மணி குளம், தாமரைக் குளம் பகுதிகளில் நடைபெற்று வரும் கரைகள் மேம்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
    • அரசு நலத்திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் இருந்தாலுல் தெரிவிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சி, அரங்கக்குடியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரியாபர்வின் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.

    கிராம நிர்வாக அலுவலர் கவிநிலவரம் முன்னிலை வைத்தனர்.

    ஊராட்சி செயலர் புவனேஸ்வரி வரவேற்றார்.

    அப்போது சுகாதாரமான நீர் வழங்க வேண்டும்.சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    குடி தண்ணீர்களை வீணடிக்க கூடாது.

    சிக்கனமாக பயன்படுத்த கொள்ள வேண்டும்.

    குறைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.

    அரசு நல திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தாலுல் தெரிவிக்கலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பி னர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் வார்டு உறுப்பினர் பார்த்திபன் நன்றி கூறினார்.

    • மாற்றுதிறனாளிகள் குறைகளை மனுவாக எழுதி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
    • அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை வகித்தார்.

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுதிறனாளிகள் குறைகளை மனுவாக எழுதி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    இதைத் தொடர்ந்து அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாற்று திறனாளிகள் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் அதனை உடனடியாக கியூ ஆர் ஸ்கேனில் பதிவு செய்யலாம்.
    • இந்த திட்டம் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளை பெறவும், புகார்களை தெரிவிக்கவும் டிஜிட்டல் மயமாக்கும் ஏற்பாடுகள் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உள்ளாட்சித் துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள வீடுகளில் கியூ ஆர் ஸ்கேன் கோடு ஓட்டும் பணி இன்று தொடங்கியது.

    தஞ்சாவூர் உமா நகர் பகுதியில் வீடு வீடாக கியூ ஆர் ஸ்கேன் கோடு ஒட்டும் பணியை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    அவர் வீடு வீடாக சென்று இந்த ஸ்டிக்கரை ஒட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு உத்தரவுபடி இன்று வீடு வீடாக சென்று கியூ ஆர் கோடு ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.

    மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று கியூ ஆர் கோடு ஓட்டப்படும்.

    அடுத்ததாக இந்த கியூ ஆர் கோடில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், வார்டு எண், வீட்டு எண், கட்டிடம் பயன்பாடு, இருப்பிட விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

    அதன் பிறகு வீட்டில் இருந்தபடியே தங்களது மொபைலில் கியூ ஆர் ஸ்கேன் செய்து அதன் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தலாம்.

    இது தவிர குடிநீர் பிரச்சனை, குப்பைகள் அள்ளாமல் இருப்பது உள்ளிட்ட எந்த வகையான பிரச்சனை இருந்தாலும் அதனை உடனடியாக கியூ ஆர் ஸ்கேனில் பதிவு செய்யலாம்.

    பதிவு செய்த பிறகு அடுத்த சில மணி நேரங்களில் பிரச்சனை தீர்க்கப்படும்.

    நீங்கள் கியூ ஆர் ஸ்கேன் செய்யும் போது உங்களது இருப்பிடம் காண்பிக்கும்.

    மேலும் உங்களது அனைத்து விவரங்களும் எங்களுக்கு தெரிய வரும். இந்தத் திட்டம் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே பயன்பெறலாம்.

    இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து வீடுகளிலும் கியூ ஆர் கோடு ஒட்டும் பணி முடிவடைந்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் இருந்து குறைகளை மனுக்களாக பெற்றனர்.
    • மீதமுள்ள மனுக்கள் உரிய நேரங்களில் விசாரணை செய்ய பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைகள் தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    தஞ்சை சரக காவல்துறை தலைவர் ஜெய்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு ஜவகர் வரவேற்றார்.

    முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை மனுக்களாக பெற்றனர்.

    அந்த முகாமிலேயே மனுக்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

    புகார் மனு கொடுத்த வந்தவர்களிடம் குறைகளை நேரடியாக விசாரணை செய்து அந்த முகாமிலேயே தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் உரிய நேரங்களில் விசாரணை செய்ய பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்கள் குறைகள் தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராமு, தங்கவேல், டி.எஸ்.பி. சஞ்சீவ், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×