என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளம்பரம்"
- மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்லப்படுகிறது.
- கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மின் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்ல ப்படுகிறது. மேலும் பலர் விளம்பர தட்டிகளையும் மின்கம்பிகளில், கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.
இதுபோல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இணையதள விளம்பரத்தை நம்பி பட்டதாரி பெண் ரூ.1.21 லட்சத்தை இழந்தார்.
- இன்ஸ்டாகிராமில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி நடந்துள்ளது.
ராமநாதபுரம்
ராமேசுவரம் சல்லிமலை தெருவைச் சோ்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சரண்யா (வயது27). இவா் பி.சி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா்.
இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராமிற்கு கடந்த ஜூலை 26-ந் தேதி, இணையதளம் மூலம் பகுதி நேர வேலையில் சேர்ந்தால் வீட்டில் இருந்தபடியே ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை படித்தவர் அதில் இருந்த லிங்கை கிளிக்கை செய்த போது சரண்யாவின் செல்ேபானுக்கு ஏஞ்சலா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது.
அதில் வேலைக்கு சேர நுழைவுக்கட்டணமாக பணம் செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய சரண்யா குறிப்பிட்ட வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 904 வரை செலுத்தியுள்ளாா்.
அதன் பிறகு சரண்யாவின் இணையதள கணக்கில் ரூ.1.86 லட்சம் இருப்பு இருப்பதாக காட்டியுள்ளது. இதனை நம்பி அந்தப் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.
வேலைக்கு சேர நினைப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் அந்த இருப்பு கணக்கை மோசடி நபர்கள் காட்டியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றதப்பட்டதை உணர்ந்த சரண்யா ராமநாதபுரம் சைபா் கிரைம் போலீசில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பொன்தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
- காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது
- போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி செய்யப்பட்டது
அரியலுர்:
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நேற்று தொடங்கியநிலையில், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி,செஸ் பலகை மற்றும் சாலை விதிகளை தொடர்புபடுத்தி, அரிலூர் மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் வெளியிடப்பட்டது. சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் ராணி உள்ளிட்ட சில காய்களுடன் கூடிய ஸெ் பலகையில், செஸ் பலகையோ அல்லது சாலையோ, தவறான சிறிய நகர்வும் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும், தவளான திசையில் வாகனங்களை இயக்ககூடாது என்று அச்சிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்