என் மலர்
நீங்கள் தேடியது "காதலன்"
- மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
- பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது
உத்தரபிரதேசத்தில் திருமணமான 15 நாட்களில் மனைவி கூலிப்படையினரை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரகதி யாதவ் மற்றும் அனுராக் யாதவ் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலை, அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மார்ச் 19 அன்று, திலீப் வயலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீப் மார்ச் 20 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திலீப்பின் சகோதரர் சஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் திலீப்பின் மனைவி பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது
இருவரும் திலீப்பைக் கொலை செய்ய ராமாஜி சவுத்ரி என்ற காண்டராக்ட் கொலையாளியை நியமித்து, அந்த வேலையைச் செய்ய அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திலீப்பை கொலை செய்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், நான்கு தோட்டாக்கள், ஒரு பைக், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தக் குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார்.
- ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவி எரித்துள்ளனர்.
ராஜஸ்தானின் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவியும் கள்ளகாதலனும் எரித்துள்ளனர்.
மார்ச் 16 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்க்கின்றனர்.
- குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.
அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.
உலக அளவில் லட்சக்கணக்கானோர் டிண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்ப்பதற்காகவே அச்செயலியை பயன்படுத்துவதாக CHEAT EYE ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில், கணவர்களோ காதலர்களோ தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள் அதிகளவில் (62.4%) டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மான்செஸ்டரில் 8.8% பெண்களும், பிர்மிங்கத்தில் 8.3% பெண்களும் காதலர்கள் குறித்து துப்பறிந்துள்ளனர். குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அபிஜீத் வெளியிட்ட வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார்.
- அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், ‘செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்’ என்றும் கூறியிருக்கிறார்.
போபால் :
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அபிஜீத் படிதார் என்ற வாலிபர், மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் வசித்து வந்தார்.
எண்ணெய் மற்றும் சர்க்கரை தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், 'துரோகம் செய்யக்கூடாது' என்று அபிஜீத் கூறுகிறார். பின்னர், படுக்கையில் கிடக்கும் ஒரு உருவத்தின் மீது மூடப்பட்ட போர்வையை விலக்கிக்காண்பிக்கிறார். அதில், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு இளம்பெண் இறந்து கிடக்கிறார்.
அபிஜீத் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். மேலும் தனது காதலியான அப்பெண், தன்னுடைய தொழில் பங்குதாரரான ஜிதேந்திரகுமார் என்பவருடனும் உறவு வைத்திருந்திருக்கிறார். அவரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். ஜிதேந்திரகுமார் சொன்னதன் பேரில்தான் நான் அவளை கொன்றேன் என்று கூறியிருக்கிறார்.
அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், 'செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்' என்றும் கூறியிருக்கிறார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷில்பா ஜாரியா (வயது 22). அவரும் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அந்த பெண், ஜபல்பூரில் உள்ள ஒரு ரிசார்ட் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்ததாக கருதப்படும் அபிஜீத் தலைமறைவாகிவிட்டார். அவர் தான் கொலை செய்த காதலியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில்தான் முதலாவது வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அபிஜீத்தின் தொழில் பங்குதாரராக கருதப்படும் ஜிதேந்திரகுமாரையும், அவரது உதவியாளரான சுமித் படேல் என்பவரையும் பீகாரில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும், கொலையாளி அபிஜீத் பதுங்கியுள்ள இடத்தையும் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவரை மடக்கிப்பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாகவும் மத்தியபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
- போலீசார் இரு தரப்பினரையும் வரவழைத்து பேசினர்.
- திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த சரல்விளையைச் சேர்ந்தவர் அய்யப்பன்.இவரது மகள் அஸ்வினி (வயது 18).
இவர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி அஸ்வினி வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை
இதனைத் தொடர்ந்து அய்யப்பன் தனது மகளை பல இடங்களிலும் தேடி னார். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து மாயமான அஸ்வினியை தேடி வந்தார்.
இந்த நிலையில் அஸ்வினி நேற்று ஒரு வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் வினு (21) என்றும் தாங்கள் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாகவும் அஸ்வினி தெரிவித்தார்.
மேலும் தனக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பா டுகள் செய்யப்பட்டதாக வும் அது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினுவை திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து போலீசார், இரு தரப்பி னரையும் வரவழைத்து பேசி னர்.
- போலீசார் விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா என்பது தெரியவந்தது.
- விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இதை பார்க்கும் பலரும் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன.
அதில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் சுவாரஸ்யமாக வைரல் ஆகின்றன. இதை பார்த்து ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. உலகில் காதலுக்கு மட்டும் அசாத்தியமான விஷயங்களை, கிறுக்குத்தனமான விஷயங்களை செய்ய வைக்கும் ஆற்றல் உண்டு. ஏற்கனவே காதலுக்கு கண் இல்லை என்ற பழமொழி உண்டு.
ஆனால், சமீபகாலமாக காதலுக்கு இடம், பொருள் என்று எதுவுமே இல்லை என்பது போல பல காதலர்கள் செயல்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக இளம் காதலர்கள் படங்களில் வருவது போல வித்தியாசமான சாகசங்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு காதல் ஜோடி ஸ்கூட்டரில் சென்றபடியே ரொமான்சில் ஈடுபட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது. டாம் குரூஸ்-கேமரூன் டயஸ் நடித்த 'நைட் அண்ட் டே' ஹாலிவுட் திரைப்படத்தில் காதலர்கள் ஸ்கூட்டரில் சென்றவாறே ரொமான்சில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதுபோன்று இந்த காதல் ஜோடி லக்னோவின் நெரிசலான பகுதியில் அரங்கேற்றியுள்ளனர். இந்த லக்னோவின் பரபரப்பான சாலையில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இரு சக்கர வாகனத்தில் ஓட்டுபவர் முன்னால் அமர்ந்து இருக்க, பின்னால் உடன் செல்பவர் அமர்ந்திருப்பார். காதலர்கள் கூட வழக்கமாக அப்படித்தான் செல்வார்கள்.
ஆனால், லக்னோவின் அந்த பரபரப்பான சாலையில் ஸ்கூட்டி ஒன்றில் காதலன் ஓட்டிச்செல்ல காதலியோ அவருக்கு முன்னால் அமர்ந்து சாலையின் பின்புறம் நோக்கி அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்கிறார். அதுவும் அந்த காதலி வாகனத்தை ஓட்டிச்செல்லும் தனது காதலனை கொஞ்சிக்கொண்டே செல்கிறார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடனே வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.
காதலர்களின் இந்த ரொமான்ஸ் காட்சியை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 14 வினாடிகள் கொண்ட வீடியோவில், பெண் இரு சக்கர வாகனத்தின் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடிப்பதும், கழுத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாரிக் என்பவர் உத்தரபிரதேச போலீசாருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவசர அவசரமாக வாகனம் ஓட்டியதற்காகவும், பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மைனர் என்பதால் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி லக்னோ கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் விக்கி சர்மா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆபாச செயல்கள் (பிரிவு 294) மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுதல் (பிரிவு 279) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அந்த பெண் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பொதுமக்கள் தங்கள் உயிரையும் மற்றவர்களையும் பணயம் வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- தாய்-தம்பிகள் பாசப்போராட்டம் நடத்தியும் பலனளிக்கவில்லை
- அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வெளியூரில் நர்சிங் படித்து வருகிறார்.
இவரது தந்தை வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் மற்றும் 2 தம்பிகள் ஊரில் வசித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். தினமும் தாயாரி டம் செல்போனில் பேசி வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குடும்பத்தி னருடன் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாயார் அழைத்துப் பார்த்த போது, மாணவியின் போன் சுவிட்ச் ஆப் என தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் கல்லூரிக்கு வந்து விசாரித்தார். அப்போது மாணவி அங்கு இல்லை. மகள் மாயமானது குறித்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திருவட்டார் போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கும் கல்லூரி உள்ள பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மாணவியையும் அவரது காதலனையும் போலீசார் தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அந்த மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவி, காதல னுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் மகள் போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் அறிந்து மாணவியின் தாயார், தனது 2 மகன்களுடன் ேபாலீஸ் நிலையம் வந்தார்.
அவர், தனது மகளை சந்தித்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவரோ மறுத்து விட்டார். காதலனோடு செல்வதி லேயே உறுதியாக இருந்தார். மாணவியை அவரது தம்பி களும் கண்ணீர் மல்க அழை த்துப் பார்த்தனர்.
ஒரு கட்டத்தில் 2 தம்பி களில் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இத்தனை பாசப் போராட்டங்கள் நடந்த பிறகும் மாணவியின் மனம் மாறவில்லை. அவர் மேஜர் என்பதால் போலீசார் வேறு வழியின்றி மாணவியை காதலனுடன் அனுப்பி வைத்தார்.
- மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அணக்காவூர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
செய்யாறு:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி.
இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்றார்.
அப்போது தோழியின் உறவினரான 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். அந்த வாலிபர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதில் மாணவி கர்ப்பமானார். அந்த வாலிபர் கருவை கலைக்குமாறு கூறினார்.
மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். இந்நிலையில் வாலிபர் நேற்று பகல் செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு மாணவியை அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை கோவில் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் பெல்டால் மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்.
மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
பின்னர் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அணக்காவூர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.
- பெரிய கடை வீதி போலீசார் ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.
கோவை,
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள கவரிங் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் சரவணகுமாரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். பின்னர் வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் இளம்பெண் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் பெரியகடை வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.
அதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு கூறிய ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- விடுமுறை முடிந்து வெளிநாடு சென்ற பின்னர் லெனின் கிராஸ், ரிமோலின் விண்ணரசிக்கு செலவுக்கு பணம் அனுப்பினார்.
- காதலன் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என்று ரிமோலின் விண்ணரசி நம்பிக்கொண்டிருந்தார்.
குளச்சல்:
மணவாளக்குறிச்சியை அடுத்த பிள்ளைதோப்பு பகுதியை சேர்ந்தவர் லெனின் கிராஸ் (வயது 29).
என்ஜினீயரிங் படித்துள்ள லெனின் கிராஸ், வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வருகிறார், அவர் ஒரு வாட்ஸ் அப் குழுவும் நடத்தி வந்தார்.
இந்த குழுவில் நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த ரிமோலின் விண்ணரசி (24) என்ற பெண்ணும் இடம் பெற்றிருந்தார். குழுவில் கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம் லெனின் கிராசுக்கும், ரிமோலின் விண்ணரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன்பின்பு வெளிநாட்டில் இருந்து லெனின் கிராஸ் ஊருக்கு வந்ததும், அவர் ரிமோலின் விண்ணரசியை நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்றனர்.
அப்போது ரிமோலின் விண்ணரசியை திருமணம் செய்தவதாக கூறி அவருடன் உல்லாசமாக இருந்தார். விடுமுறை முடிந்து வெளிநாடு சென்ற பின்னர், ரிமோலின் விண்ணரசிக்கு அங்கிருந்து செலவுக்கு பணமும் அனுப்பி கொடுத்தார்.
இதனால் காதலன் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என்று ரிமோலின் விண்ணரசி நம்பிக்கொண்டிருந்தார். லெனின் கிராஸ் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்ற தகவல், அவரது பெற்றோருக்கு தெரியாது.
இதனால் அவர்கள் லெனின் கிராசுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். இந்த தகவல் லெனின் கிராசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கடந்த வாரம் இவர்களின் திருமணம் ஆலயத்தில் நடக்க இருந்தது. இதற்காக லெனின் கிராஸ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது திருமண அழைப்பிதழை கொடுத்தார். அவர்கள் மூலம் இந்த தகவல் பணக்குடியில் இருந்த ரிமோலின் விண்ணரசிக்கு தெரியவந்தது.
பதறிபோன அவர் அங்கிருந்து காதலனின் திருமணம் நடக்க இருந்த ஆலயத்திற்கு விரைந்து வந்தார். திருமண சடங்குகள் தொடங்கும் முன்பு ஆலய பாதிரியாரை சந்தித்து தானும், லெனின் கிராசும் காதலிக்கும் விபரத்தை தெரிவித்தார்.
லெனின் கிராஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றதையும், அங்கு இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களையும் காட்டினார். இதனை பார்த்ததும், ஆலய பாதிரியார், லெனின் கிராசுக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்.
இதையடுத்து ரிமோலின் விண்ணரசி குளச்சல் போலீஸ் நிலையம் சென்று அங்கும் புகார் கொடுத்தார். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனர்.
இதற்கிடையே லெனின் கிராஸ், காதலி ரிமோலின் விண்ணரசியை அருகில் அழைத்து அவரது செல்போனை வாங்கி கொண்டார். பின்னர் அதில் அவர்கள் இருவரும் இணைந்த எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் அழித்து விட்டார்.
அதன்பின்பு அந்த செல்போனை ரிமோலின் விண்ணரசியிடம் கொடுத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் நின்று கொண்டார்.
அதன்பின்பு போலீசார், ரிமோலின் விண்ணரசியிடம் இருவரும் சேர்ந்திருக்கும் படங்களை காட்டுமாறு கூறியபோதுதான், அதில் இருந்த படங்கள் அழிக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே இடிந்து போகாமல் அவர் போட்டோ ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் அழிக்கப்பட்ட படங்களை மீண்டும் மீட்டெடுத்தார். அதனை போலீசாரிடம் காட்டியபோது, லெனின் கிராஸ் அதிர்ந்து போனார். உடனே அவர் ரிமோலின் விண்ணரசியை காதலித்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதன்பின்பு அவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஆலயம் முன்பிருந்த குருசடியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். காதலித்து ஏமாற்றிய காதலனை போராடி கரம் பிடித்த ரிமோலின் விண்ணரசியின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.
கோவை:
திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண்.
இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒற்றர்பாளையத்தை சேர்ந்த 29 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்த இளம்பெண், தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
அப்போது வீட்டில் இருந்த 5 அரை பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு சென்றார். வீட்டில் இருந்த மகள் மாயமானதால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், நேராக அன்னூர் வந்து, தனது காதலனை சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
நேற்று காதலர்கள் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்தபோது, ஏற்கனவே இளம்பெண் மாயமானதாக திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் பெண்ணின் பெற்றோர் கொடுத்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அன்னூர் போலீசார் காதலர்கள் 2 பேரையும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.
அவர்கள் போலீஸ் நிலையம் விரைந்து வந்து, காதலருடன் நின்றிருந்த தங்கள் மகளை பார்த்து அழுதனர். பின்னர் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளிடம் சென்று பேசினர்.
அப்போது அவரிடம், உன்னை எப்படி எல்லாம் வளர்த்தோம். நீ கேட்டதை எல்லாம் நாங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். உனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அப்படி இருக்கையில் நீ இப்படி பண்ணலமா? என கண்ணீர் விட்டு கெஞ்சி பாசப்போரா ட்டம் நடத்தினர்.
முதலில் ஒன்றும் சொல்லாமல் இளம்பெண் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து பெற்றோர் மகளிடம் பேசினர். பெற்றோர் பேசிய பேச்சை கேட்டதும் இளம்பெண்ணின் மனது மாறிவிட்டது.
அவர், தனது பெற்றோரிடம் நான் எனது காதலனை விட்டு, விட்டு உங்களுடனே வந்துவிடுகிறேன். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிய வேண்டாம்.
ஏனென்றால் நகையை எடுத்து கொண்டு சென்றது நான் தான், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அப்படி என்றால் வருகிறேன் என தெரிவித்தார். பெற்றோரும் அதற்கு சம்மதித்தனர்.
இதையடுத்து இளம்பெண் போலீசாரிடம் நான் எனது பெற்றோருடனே சென்று விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் தனது காதல் கணவர் கட்டிய தாலியையும், கழுத்தில் இருந்து கழற்றி காதல் கணவரிடம் கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றுவிட்டார்.
இதையடுத்து போலீசார் வாலிபருக்கு அறிவுரைகளை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
- உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.
- போலீசார் விரைந்து சென்ற , திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம் விசாரித்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுவேதா (வயது 21), பி.காம். பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.
இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்தனர்.
அதன்படி சுவேதாவுக்கும், வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா மகன் எம்.பி.ஏ. பட்டதாரி லோகநாதன் (27) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் பேசி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இருவருடைய திருமணம் நேற்று காலை நடைபெறவிருந்த நிலையில், காதலன் கவியரசனுக்கு சுவேதா செல்போனில் தொடர்பு கொண்டு, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.
உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.
இதனால் காவல் துறையின் உதவி எண் 100-க்கு கவியரசன் தொடர்பு கொண்டு, தனது காதலிக்கு சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க உள்ளனர். எனவே உடனடியாக தடுத்து நிறுத்தி என்னையும், காதலியையும் சேர்த்து வையுங்கள் என தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து காவல் துறை கட்டுப்பாடு அறை மூலமாக வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம், விசாரித்தனர். இதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாழப்பாடி மகளிர் போலீசார், சுவேதாவை மீட்டு காதலன் கவியரசனுடன் சேர்த்து வைத்தனர். மேலும் பாதுகாப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே சமயம் பாதிக்கப்பட்ட மணமகன் தரப்பினர், திருமணம் நிறுத்தப்பட்டதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். திருமணத்துக்கு நிறைய செலவு செய்துள்ளோம், என புகார் கொடுத்தனர். இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.