search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன்"

    • இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்
    • குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தில் ராஜேஷ் குமார் [26] என்பவர் தனது மனைவி குஷ்பு [22], 2 வயது மகன் மற்றும் தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் குஷ்பூவை சந்திக்க அவரது சிறுவயது காதலன் சந்தான் [24] அவர்களது வீட்டுக்குள் நடு இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்.

    குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது. இதை அறிந்த ராஜேஷ் குமார் கோபப்படாமல் தனது மனைவியை அவரது பால்ய கால காதலனுக்கே, முன் நின்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

    தற்போது குஷ்பு , சந்தான் வீட்டில் புது வாழவைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஊடகத்துக்குப் பேட்டியளித்த குஷ்பு தனது காதலை புரிந்துகொண்ட முன்னாள் கணவர் ராஜேஷ் குமாருக்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரிதினும் அரிதான இந்த சம்பவம் ராம் நகர் கிராம மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது தோழியை கிண்டல் செய்ய போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
    • மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியை கிண்டல் செய்ய மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.

    இந்த போலியான கணக்கு மூலம் தனது தோழியிடம் பேசி விளையாடியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசிய மனிஷ் மீது அப்பெண் காதல் வயப்பட்டுள்ளார்.

    காதல் ஏற்பட்ட பிறகு அப்பெண் அந்த நபரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அவளது தோழி 'சிவம் பாட்டீல்' என்ற மற்றொரு போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.

    அந்த போலியான கணக்கில் நான் தான் மனிஷின் அப்பா என்று கூறி, அவள் காதலித்த மனிஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக அவளது தோழியிடம் தெரிவித்துள்ளார்.

    கற்பனையான அவளது காதலன் இறந்த துக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் ஜூன் 12 ஆம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உயிரிழந்த பெண்ணின் மொபைல்போனில் இந்த இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை பார்த்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து, இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான அவளது தோழியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஏற்கனவே திருமணமான சப்னா அவரின் காதலை ஏற்கவில்லை.
    • தன் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை 42 வயது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    42 வயதான சப்னா யாதவ் என்ற பெண்ணை நரேந்திர பஞ்சாபி என்பவர் காதலித்து வந்துள்ளார்.

    ஏற்கனவே திருமணமான சப்னா அவரின் காதலை ஏற்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நரேந்திர பஞ்சாபி அவரை தொந்தரவு செய்ததால் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

    இதனையடுத்து கோபமடைந்த நரேந்திர பஞ்சாபி, பூக்கடையில் வேலை செய்து வந்த அப்பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நரேந்திர பஞ்சாபி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காதலி திருமணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் வரவில்லை.
    • கைதானவர், ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் ஆவார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

    காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் மதுரா தொகுதியில் உள்ள வார்டு எண். 12ன் கவுன்சிலர் ஆவார்.

    கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபருடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.

    இதனால் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் வரவில்லை.

    அதன் பிறகு, காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்த காதலி, அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக தெரிகிறது.

    இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கைதானவர், ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் ஆவார்.


    • பிரபு மாஸ்டர் - ஏ.ஆர்.ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது
    • Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இந்த படத்தை இயக்குகிறார்

    டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என இந்திய சினிமாவில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஏஆர் ரகுமானின் துள்ளலான இசைக்கு காலேஜ் ஸ்டூடென்ட்டாக நடித்த பிரபுதேவாவின் ஸ்டைலான நடன அசைவுகள் பாடல்களை பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்கச் செய்தது.

    இந்த படத்துக்கு பிறகு பிரபு மாஸ்டர் - ஏஆர்ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், ரகுமானும் இணைந்துள்ளனர். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.

    இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் பெயர் குறித்த அபேடேட்டுக்கு ரசிகர்கள் தவம் கிடந்த நிலையில் படத்துக்கு 'மூன் வாக்' என்று பெயரிட்டுள்ளதாக Behindwoods நிறுவனம் டைட்டில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் சிரியுங்கள், பாடுங்கள், உடன் சேர்ந்து நடனமாடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.
    • தடுக்க வந்தவரை தள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார்.

    மகாராஷ்ர மாநிலம் மும்பை அருகே வசாயின் கிழக்கு பகுதியில் பரபரப்பான சாலையில் 28 வயது உள்ள ரோஹித் தனது முன்னாள் காதலி ஆர்த்தி ஸ்பேனரால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் யாதவ், தனது முன்னாள் ஆர்த்தி யாதவ் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டதையடுத்து, ஸ்பேனருடன் அவரைத் துரத்தி கொண்டு சென்றுள்ளார். இந்த தாக்குதல் சாலையின் நடுவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சிசிடிவி காட்சிகளின்படி, ரோஹித் ஆர்த்தியை ஸ்பேனரால் துரத்துவதும், அவரது தலை மற்றும் மார்பில் பலமுறை அடிப்பதும் போல் உள்ளது. அந்த வீடியோவில் ஆர்த்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் அப்போது ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.

    தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ரோஹித்தை தடுக்க முயன்றார். இருப்பினும், தடுக்க வந்தவரைதள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார். இதை அடுத்து அந்த நபர் பின்வாங்கி செல்கிறார். அதைத் தொடர்ந்து யாரும் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை.


    இந்த கொடிய சம்பவத்தை சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியிருக்கிறது. அதில் ரோஹித் கீழே விழுந்து கிடந்த பெண்ணின் உடலில் ஏறி நின்று கொண்டு, ஸ்பேனரை கையில் பிடித்துக்கொண்டு குனிந்து அப்பெண்ணின் முகத்தை பிடித்துக்கொண்டு `எனக்கு ஏன் அப்படி செய்தாய்... ஏன் அப்படி செய்தாய்?' என்று பிணத்துடன் பேசினான். பின்னர் மீண்டும் ஒரு முறை ஓங்கி ஸ்பேனரால் அடித்து விட்டு, ரத்தம் படிந்த ஸ்பேனரை தூக்கிப்போட்டுவிட்டு கூட்டத்தில் நடந்து சென்றான்.

    இது குறித்து சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆறு வருட நீண்ட உறவைத் தொடர்ந்து அவர்கள் பிரிந்ததே இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்று ஊகிக்கப்படுகிறது.

    வசாயின் கிழக்கு சின்ச்பாடா பகுதியில் அதிகாலையில் ஆர்த்தி யாதவ் வேலைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து ரோஹித் கைது செய்யப்பட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
    • டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார்.

    தந்தையர் தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கஞ்வாலா பகுதியில் ரத்தத்தில் தோய்ந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடந்திய விசாரணையில் அப்பெண்ணின் தந்தையே கொலையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.

    அந்த பெண் தனது காதலனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில் அவரது தந்தை தான் பார்த்த மாப்பிளையை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கஞ்வாலா பகுதிக்கு தனது மகளை டாக்சியில் அழைத்து வந்த தந்தை கண்ணாடி அறுக்கும் உபகரணத்தை வைத்து மகளை அறுத்துக் கொன்றுள்ளார்.

    மேலும், டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார். இறுதியில் உண்மை தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கண்ணாடி அறுக்கும் தொழில் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உயிரிழந்தார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி ரெயில் நிலையத்தில் ராணி என அடையாளம் காணப்பட்ட 38 வயது பெண் ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த பதற வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் ராணியும் அவரது லிவ் இன் பார்ட்னர் கிஷோரும் 2வது நடைமேடை நாற்காளியில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிவிட, தான் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி ராணி தண்டவாளத்தில் குதித்து கிஷோரை மிரட்டினார்.

    அப்போது, கேரளா எக்ஸ்பிரஸ் நெருங்கி வருவதை அறியாத ராணி நடைமேடை அருகே சென்று ஏறி தப்பிக்க முயன்றார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் மோதி, ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே ராணி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த காட்சி சிசிடிவியில் பதிவான நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து ஜிஆர்பி கன்டோன்மென்ட்டின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் சமர் பகதூர் கூறுகையில், "ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போதைக்கு, முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகார் வந்தவுடன் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.
    • திருப்பதியில் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

    தமிழ், இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. இவர் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தார் இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற போது ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்தார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.



    இந்தநிலையில், ஜான்வி கபூரும் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வந்தனர்.

    ஷிகர் -ஜான்வி அடிக்கடி நேரில் சந்தித்து வந்தனர். சமீபத்தில் ஜான்வி - ஷிகர் ஜோடியாக திருப்பதி கோவிலுக்கு சென்றனர் .இவர்களது காதலை சமீபத்தில் போனிகபூரும் உறுதிப்படுத்தினார்.

    இந்நிலையில் மும்பையில் 'மைதான்' படத்தின் 'பிரிமியர் ஷோ' வுக்கு ஜான்வி வந்தார். வழக்கம் போல் அழகான தோற்றத்தால் கவர்ந்தார். ஆனால் இம்முறை அனைவரின் பார்வையும் அவர் அழகை விட கழுத்தில் இருந்த நெக்லஸ் மீதே இருந்தது.




    மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஜான்வி தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொள்ள இந்த நகையை அணிந்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் திருமணத்துக்கு ஜான்வி கபூர் தயாராகி வருகிறார். திருப்பதியில் விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஜான்வி திருப்பதி கோவிலில் வைத்து தான் தனது திருமணம் நடைபெறும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுமிக்கு ஆறுதல் கூறிய போட்டோகிராபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக அழைத்துச் சென்றார்.
    • உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி போலீசாரிடம் பேச முடியாத அளவுக்கு பாதிப்பு அடைந்து இருந்தார்.

    திருப்பதி:

    ஒடிசா மாநிலம், காலாஹண்டி மாவட்டம் பனிமுந்திராவை சேர்ந்தவர் 44 வயது காவலாளி.

    இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஞ்சரபாலத்தில் தங்கி இருந்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவரது 17 வயது மகள் துறைமுக குடியிருப்பில் உள்ள கடற்படை அதிகாரி வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்து வந்தார்.

    சிறுமி உள்ளூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி சிறுமி தனது காதலுடன் லாட்ஜிக்கு சென்றார்.

    அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். பின்னர் காதலன் தனது நண்பர்களுக்கு போன் செய்து லாட்ஜிக்கு வர வழைத்தார். சிறுமியை மிரட்டி காதலனின் நண்பரும் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் லாட்ஜில் இருந்து வெளியே வந்த சிறுமி இது குறித்து தனக்கு தெரிந்த போட்டோகிராபர் ஒருவரிடம் கூறினார். சிறுமிக்கு ஆறுதல் கூறிய போட்டோகிராபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக அழைத்துச் சென்றார்.

    பின்னர் அங்குள்ள அறைக்கு அழைத்துச் சென்ற போட்டோகிராபர் மேலும் தனது 7 நண்பர்களை போன் செய்து வர வழைத்தார்.

    8 பேரும் சேர்ந்து சிறுமியை 1 வாரம் அறையில் அடைத்து மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதில் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் அவரை ஒரிசாவில் உள்ள சொந்த ஊரில் விட்டு விட்டு வந்தனர். வேலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது இளம் பெண் தனது சொந்த ஊரில் இருப்பது தெரியவந்தது.

    அவரை மீண்டும் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி போலீசாரிடம் பேச முடியாத அளவுக்கு பாதிப்பு அடைந்து இருந்தார்.

    பின்னர் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த 8 வாலிபர்களை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சூர்யா மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.
    • அதிர்ச்சியடைந்த உறவினர்கள் எடத்துவா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா(வயது33). இவர் கோவளத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

    அதே மருத்துவமனையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்(28) என்பவர் சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார். ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்ததால் சூர்யா மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.

    சம்பவத்தன்று சூர்யா, கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த பெண்ணை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்திருந்தார்.

    இந்நிலையில் அந்த அறைக்கு காதலன் சரத்தை, சூர்யா வரவழைத்துள்ளார். அப்போது அவர், சூர்யா அழைத்து வந்த பெண்ணுக்கு மது கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அதனை இளம்பெண் குடிக்க மறுத்திருக்கிறார். இருந்தபோதிலும் அவரை வலுக்கட்டாயமாக மது கலந்த குளிர்பானத்தை குடிக்கச் செய்திருக்கின்றனர்.

    இதனால் அந்த இளம் பெண், சிறிது நேரத்தில் மயங்கினார். இதையடுத்து அந்த இளம்பெண்ணை மயக்க நிலையிலேயே சரத் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இளம்பெண்ணை சரத் பாலியல் பலாத்காரம் செய்ததை சூர்யா தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்.

    பின்பு சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறார். அதன் பிறகே, தனக்கு நேர்ந்த கொடுமை அவருக்கு தெரியவந்தது. மேலும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை சூர்யா வீடியோ எடுத்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்பு அந்த இளம்பெண், அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுபற்றி எடத்துவா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    சம்பவம் நடந்தது கோவளம் என்பதால், அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கோவளம் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்பு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மது கலந்த குளிர்பானத்தை கொடுத்து மயங்கச் செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் சரத் கைது செய்யப்பட்டார். காதலனுக்கு இளம்பெண்ணை விருந்தாக்கிய சூர்யாவும் கைது செய்யப்பட்டார். பலாத்காரம் செய்ததை வீடியோ படம் எடுக்க பயன்படுத்திய அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இளம்பெண்ணை காதலனுக்கு விருந்தாக்கிய பெண் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கோவளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
    • வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவருக்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் அந்த பெண், தனது கணவரை பிரிந்துசென்றார். அவர் தனது காதலன் சிசுபாலன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண், 7 வயதான தனது இளைய மகளை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் காதலன், பெண்ணின் இளைய மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

    இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, அதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் மூத்த மகள் தாய் மற்றும் சகோதரி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது அவரிடம் தனக்கு நேர்ந்த விஷயங்களை சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அதுபற்றி தனது பாட்டியிடம் கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, பள்ளிக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சிசுபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை நடந்துவந்த போதே, சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமியின் தாய் மீதான வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் அவருக்கு ரூ20ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் இரு மகள்களும் தற்போது காப்பகத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×