search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடக்கவிழா"

    • இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர்.
    • பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்றைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அச்சாரமாக 1896 ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்ட கிரீஸ் நாட்டை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் முதன்மை வகித்தனர்.

    இரவு சுமார் 12.30 அளவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர். அணிவகுப்பில் இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இல்லாத வகையில் இந்த முறை பிரதான மைதானத்துக்கு வெளியில் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. வாணவேடிக்கைகள் விழாவிற்கு மேலும் ஒளியைக் கூடியது.

     

    நதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடைகளிலிருந்து 3 லட்சம் பேர் இந்த அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.மேலும் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் பால்கனிகளில் இருந்து 2 லட்சம் பேர் விழாவை கண்டுகளித்தனர். விழாவின் போது கடும் மழை பெய்த நிலையிலும் விழா தொடர்ந்து நடைபெற்றது. லேடி காகாவின் இசை நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

    இதனைத்தொடர்ந்து தொடர்க்கவிழாவின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு தொடங்கியது. பிரஞ்சு கால்பந்து ஜாம்பவான் ஜினாதினே ஜின்டேன் முதலில் ஜோதியை ஏந்திய நிலையில் ஜோதியானது ரபேல் நடால், செரினா வில்லாமஸ், நாடியா கோமானேசி என பலர் கைகளுக்கு மாறி இறுதியாகப்  பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து பாரிஸ் ஐபில் கோபுரம் அருகே ராட்சத பலூனில் அமைக்கப்பட்ட  கால்ட்ரனில் [cauldron] ஜோதியை ஏற்றினர்.

     

    • ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தா
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வெங்காய விதைகளையும் அமைச்சர் வழங்கினார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் நகர்ப்புற வேலைதிட்டம், நகர்புற சாலைகள் திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம், செல்லப்பிள்ளை பாளையத்தில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செல்லப்பிள்ளை பாளையம் முதல் கொடுவாய் - நாச்சிபாளையம் ரோடு வரை மற்றும் பொல்லிகாளிபாளையம் ரோடு முதல் வரக்குட்டைபாளையம் வரை தார்சாலை மேம்பாட்டுப்பணி,

    பல்லடம் ஊராட்சி ஒன்றியம் அனுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலணி முதல் வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் பழைய அனுப்பட்டி இரண்டாவது வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.3.06 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலணி இரண்டாவது வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் ரூ.3.52 லட்சம் மதிப்பீட்டில் செங்கோடம்பாளையம் மதுரைவீரன்கோவில் வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.4.31 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் பள்ளி வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் காமநாயக்கன்பாளையம் ஆசிரியர் காலணி மூன்றாம்வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ,

    கரடிவாவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கரடிவாவி கதர்கடை முதல் வீதியில் கான்கிரீட் தளம்அமைக்கும் பணி , சாமளாபுரம் பேரூராட்சியில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற வேலைத்திட்டத்தின் கீழ் வார்டு எண் 1 -ல் சாமளாபுரம் தோட்டத்து சாலை வீதியில் தார் சாலை அமைக்கும் பணி , ரூ.45.24 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புறசாலைகள் திட்டத்தின் கீழ் வார்டு எண் 6 மற்றும் 7-ல் மலைக்கோவில் முதல்பெருமாம்பாளையம் வரை மற்றும் மலைக்கோவில் சுற்றி தார் சாலை அமைக்கும்பணி என மொத்தம் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.

    அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 27பயனாளிகளுக்கு ரூ.80,890 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும்,தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வெங்காய விதைகளையும் அமைச்சர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிகளில் இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார் (பொங்கலூர்), மனோகரன் (பல்லடம்), உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், குருபிரசாத், மகாலட்சுமி, கார்த்திக்குமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது.
    • மாணவர்கள் 135 குறள் ஒப்புவித்தல், நவீன நாடகம், பெருஞ்சலங்கை ஆட்டம். சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

    அவினாசி:

    அவினாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கல்லூரி தமிழ்த் துறை தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். ச.கண்ணப்பன் வாழ்த்துரையாற்றினார்.

    திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் தமிழ்மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். மாணவர்கள் 135 குறள் ஒப்புவித்தல், நவீன நாடகம், பெருஞ்சலங்கை ஆட்டம். சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

    இதில் கல்லூரி பேராசியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்கவிழா நடந்தது.
    • ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன் பெற்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் சார்பில் ஆங்கில இலக்கிய மன்றம் நியோ ஐடோலா-2023 தொடக்கவிழா நடை–பெற்றது. விழாவுக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    இதையடுத்து மாணவ இலக்கிய மன்ற தலைவர், துணைத்தலைவர், செயலா–ளர் மற்றும் அலுவ–லக உறுப் பினர்கள் ஆகியோர் நிய–மனம் செய்யப்பட்டனர். பின்னர் துறைத்தலைவர் முனைவர் எஸ்.பெமினா வாழ்த்துரை வழங்கினார்.

    பின்னர் முழுமையான வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி நிலை என்ற தலைப்பில் ஜெய்ப்பூர் காம்காம் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவன ஆங்கில பேராசிரியர் முனை–வர் ஷாலினி சிறப்பு–ரையாற்றினார்.

    அப்போது அவர் பேசு–கையில், நேர்மறை எண்ணத் தின் பயனை விவரித்தார். மேலும் வாழ்வின் ஒவ் வொரு நிகழ்வும் நேர்ம–றை–யான விளைவு–களையே ஏற்படுத்தும் என்ற ஏற்றமிகு கருத்தினை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். முன்னதாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கே.பி.ஸ்வப்னா வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியை என்.நாகஜோதி நன்றி கூறி–னார்.

    இந்த இலக்கிய மன்றத் தின் தொடர் நிகழ்ச்சியாக மாணவர்களின் தனித்திற–மையை வெளிப்படுத்தும் விதமாக திறனறி விழா நடைபெற்றது. மாணவர்கள் கவிதை, நாடகம், ஆடல், பாடல், மவுன நாடகம் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன்பெற்றனர்.

    • சாந்தி வேடியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • நிகழ்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன

    மொரப்பூர்,

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் சாரண இயக்கத் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    பள்ளியின் இயக்குநர் தமிழ்மணி மற்றம் பவானி தமிழ்மணி முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவினை முதல்வர் சாரதி மகாலிங்கம் மற்றும் மாவட்ட சாரண பயிற்சி தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இவ்விழாவில் தருமபுரி மற்றும் அரூர் சாரண உறுப்பினர்கள், கணேசன், சுந்தரராஜன், ஆறுமுகம், கலையரசன் மற்றும் மலர்கொடி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    மேலும் இவ்விழாவினை பள்ளியின் ஒருங்கிணைப் பாளர் குருமூர்த்தி, பள்ளியின் சாரண ஆசிரியர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவில் சாரண இயக்க பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். நிகழ்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன

    • கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் வழங்கப்பட்டது.
    • பேரூராட்சியில் பணி யாற்றும் துப்புரவு பணியா ளர்களை கவுரவித்தும், மலர்கள் தூவியும் அனைவருக்கும் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், கெலமங்கலத்தில் பா.ஜ.க தொடங்கி 44-வது ஆண்டை முன்னிட்டு கெலமங்கலம் பா.ஜ.க.சார்பாக கொண்டா டப்பட்டது.

    இதில் பாஜக மாவட்ட மேற்கு தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பேரூராட்சியில் பணி யாற்றும் துப்புரவு பணியா ளர்களை கவுரவித்தும், மலர்கள் தூவியும் அனைவருக்கும் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.

    ஒன்றிய தலைவர் சந்துரு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ஸ்ரீனிவாசரெட்டி, மாவட்ட செயலாளர் குரப்பா, ஆனந்த, ஜக்கேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ், ஜெயசங்கர், ராஜான்னா, முனிராஜ், மஞ்சுநாத் ஒன்றிய துணை தலைவர் ரவி போன்ற பலர் கலந்துகொண்டனர்.

    • கல்யாணிபுரம் சமுதாய நலக்கூடம் அருகில் கிராமிய சேவைத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது
    • விழாவில் மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு குறித்து பேசப்பட்டது.

    கடையம்:

    கீழக்கடையம் ஊராட்சிக்குட்பட்ட கல்யாணிபுரம் சமுதாய நலக்கூடம் அருகில் உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் சோகோ நிறுவனம் இணைந்து நடத்திய கிராமிய சேவைத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. நெல்லை மண்டல தலைவர் அண்ணாமலையார் தலைமை தாங்கினார். சோகோ நிறுவனத்தை சேர்ந்த கீர்த்தி வாசன், ராச சுடலைமுத்து, பாலமுருகன், முத்து, அரசு ஈஸ்வரன், பூமிபாலகன், சுடலையாண்டி பிள்ளை ,கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், துணைத் தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கிராமிய சேவைத்திட்டத்தின் நோக்கமாக நோயற்ற வாழ்வு, கல்வியில் மேன்மை சுற்றுப்புற தூய்மை, முதியோரை பாதுகாத்தல், மகளிர் மேம்பாடு குடும்ப அமைதி, கர்ம யோக வாழ்க்கை நெறி, மனிதநேயம், மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு போன்றவை குறித்து பேசப்பட்டது. இதில் சமூக ஆர்வ லர் சந்திரசேகர், வார்டு உறுப்பினர்கள் வீரசுமதி, ஏஞ்சல் மேரி, வசந்த், கவிதா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • கூட்டுறவு பயிற்சி மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான புத்தகங்களை வழங்கப்பட்டது.
    • 2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கவிழா நடந்தது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய கிளையில் 2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கவிழா நடந்தது. விழாவில் கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர்(முழு கூடுதல் பொறுப்பு) டி.பிரபு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பட்டய பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கூட்டுறவு பயிற்சி மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான புத்தகங்களை வழங்கினார். இதில் கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப்பதிவாளரும், முதல்வருமான கிருஷ்ணன், துணைப்பதிவாளர் சரவணன், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான முத்து சிதம்பரம், குன்னூர் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் குமாரசுந்தரம், கோவை துணைப்பதிவாளர் கே.ஆர்.ராஜேந்திரன், விரிவுரையாளர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் கைப்பேசி செயலி தொடக்கவிழா நடைபெற்றது
    • அமைச்சர் சிவசங்கா் தொடங்கிவைத்தார்

    அரியலூா்:

    அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள், பணியாளா்களின் வருகையை முக அங்கீகார முறையில் பதிவு செய்யும் கைப்பேசி செயலி தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து செயலியைத் தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் பேசியது:

    நான் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சராக இருந்தபோது மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தியதன்பேரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியானது மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 32 விடுதிகளில் மாணவா்கள், பணியாளா்களின் வருகையை பதிவு செய்யும் என்றாா்.

    • திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் சமூக பணித்துறை சார்பில் அமிட்டி கிளப் தொடக்க விழா நடைபெற்றது
    • சமூகப் பணித்துறையில் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள் பற்றியும், பேச்சாற்றல், கவனிப்புத்திறன், வாகனம் ஓட்டுதல், நீச்சல் போன்ற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிறப்பு விருந்தினர் அறிவுரை

    திருச்சி:

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் சமூக பணித்துறை சார்பில் அமிட்டி கிளப் தொடக்க விழா கல்லூரி காவேரி அரங்கில் நடைபெற்றது. சமூக பணித்துறை தலைவர் முனைவர் ஜி.மெட்டில்டா புவனேஸ்வரி வரவேற்றார்.

    முன்னாள் மாணவிகளின் தொடர்பு புலத்தலைவர் முனைவர் ஜி.கனகா வாழ்த்துரை வழங்கினார். லுசாகா யூஜின் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.சவரிமுத்து, புனித வளனார் கல்லூரி ஓய்வு பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் ஜாம்பி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சமூக பணித்துறை தலைவர் ஏ.ஆனந்த் ஜெரால்டு செபாஸ்டின் பங்கேற்றார்.

    அப்போது அவர் பேசுகையில், சமூகப் பணித்துறையில் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள் பற்றியும், பேச்சாற்றல், கவனிப்புத்திறன், வாகனம் ஓட்டுதல், நீச்சல் போன்ற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அவர்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவேரி மகளிர் கல்லூரி அமிட்டி கிளப் ஒருங்கிணைப்பாளர் பழ.ராணி வழிகாட்டியாக இருந்து செயல்பட்டார்.

    மேலும் சமூகப் பணித்துறையின் ஏனைய உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ×