search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மட்டம் உயர்வு"

    • தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது.
    • நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்ட த்தில் பி.ஏ.பி.பாசனத்தி ட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஆழியாறு அணைக்கட்டு 120 அடி உயரம்கொண்டது. இங்கு 3864 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய-புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை கைகொடுக்காததால் ஆழியாறு அணை நிரம்பவில்லை. ஆனால் இந்தாண்டு நவமலை, வால்பாறை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர்நீர்வரத்து உள்ளது.

    அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில் கடந்த 16-ந்தேதி 91 அடி என்ற அளவில் இருந்த நீர்மட்டம் 18-ந்தேதி 100 அடியை தொட்டது. நேற்று காலை 8 மணிக்கு 109.30 அடியாக இருந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு 110 அடியாக உயர்ந்தது.

    ஆழியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2634 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேலும் அணையில் இருந்து 84 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியதை தொடர்ந்து நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில்ஆழியாறு, ஆனைமலை, கோட்டூர், மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடவேண்டுமென ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆழியாறு அணையின் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `ஆழியாறு நீர்மட்டம் 115 அடியை தாண்டியதும் 2-வது கட்ட மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். தொடர்ந்து 118 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து நீர்வரத்தும் அதிகமாக இருந்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும்' என்று தெரிவித்து உள்ளனர்.

    • பலத்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து 7ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

    அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அத்துடன் பலத்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து 7ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 72.34 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. ஒரே நாளில் 8 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திருப்பூர் மாநகரின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி பல்லடத்தில் 4 மில்லி மீட்டர் மழை , தாராபுரம் தாலுக்கா பகுதியில் 4 மி.மீ., , உப்பாறு அணை பகுதியில் 10 மி.மீ., உடுமலைப்பேட்டை பகுதியில் 27 மி.மீ., அமராவதி அணை பகுதியில் 22 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமூர்த்தி அணை பகுதியில் 51 மில்லி மீட்டரும் , மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 10 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 178 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி இருப்பதாகவும், சராசரியாக 8.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் திருப்பூரில் குளுகுளு வானிலை நிலவி வருகிறது. உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரி த்துள்ளதால் இன்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து மழை பெய்த தால் அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அலுவலகங்களுக்கு சென்றனர்.

    கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, சுருளோடு, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையிலும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    பாலமோரில் அதிகபட்சமாக 28.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.76 அடியாக இருந்தது.

    அணைக்கு 475 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 481 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.22 அடியாக உள்ளது. அணைக்கு 401 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.35 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 47.82 அடியாகவும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.20 அடியாக உள்ளது.

    • கோடை மழை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பெய்துள்ளது.
    • விவசாய பணிகளுக்கும் தண்ணீர் திறக்கப் படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பெய்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    நெல்லையில் மீண்டும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படை யெடுத்து வருகின்றனர். பாபநாசம் அகஸ்தியர் அருவி, களக்காடு தலையணை, பணகுடி குத்திரபாஞ்சான் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குளித்து மகிழ குடும்பம் குடும்பமாக சென்று வருகின்றனர்.

    மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் விரைவில் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதால் அதற்கு முன்பே மாஞ்சோலையை பார்வையிட்டு வந்துவிட வேண்டும் என்று அங்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கால்நடைகள் பகல் நேரங்களில் குளம், குட்டைகளில் இருக்கும் தண்ணீருக்குள் தஞ்சம் அடைவதை காண முடிகிறது.

    இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் மூலக்கரைப் பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடுமையான வறட்சியை நோக்கி சென்ற பிரதான அணைகளின் நீர்மட்டம் கோடை மழை காரணமாக வெகுவாக உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ள தோடு, விவசாய பணிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு கோடை மழை நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு பெருமளவு கை கொடுத்து உள்ளது என்றே கூறலாம்.

    கடந்த ஆண்டு இதே நாளில் பிரதான அணை யான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 29.75 அடி மட்டுமே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 74.20 அடியில் உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு 62.15 அடியாக இருந்த நிலையில் தற்போது 83.53 அடியாக உள்ளது. மேலும் சேர்வலாறு அணை நீர்மட்டம் இந்த ஆண்டு இன்று 90 அடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அந்த அணையில் 48.75 அடி மட்டுமே நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாபநாசம் அணை நீர்மட்டம் 2 மடங்கும், சேர்வலாறு அணை நீர் இருப்பு ஒரு மடங்கும் உயர்ந்து இருக் கிறது.

    இதற்கிடையே நீர் போதிய அளவு இருப்பதால் அணைகளில் இருந்து முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு விடும் என்பதால் விவசா யிகள் தற்போது நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளனர். பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், முக்கூடல், அரியநாயகிபுரம், கல்லூர், சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் நெல் நடவுக்காக பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே மழை இல்லை. அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றா லத்தில் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதால் நீண்ட வரிசையில் நின்று குளிக்கின்றனர்.

    கோடை மழையால் பாவூர்சத்திரம், செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பால் விவசாயிகள் கத்தரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், மல்லி இலைகளை பயிரிட்டுள்ளனர். சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் மானாவாரி பயிர்களான உளுந்து, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்று திடீர் சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காடல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 13 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. எட்டயபுரம், விளாத்திகுளத்திலும் லேசான சாரல் அடித்தது.

    • வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் அணைப்பகுதிகளான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், கொடிவேரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் வரட்டு பள்ளம், கல்லு பள்ளம், கும்பரவாணி பள்ளம் ஆகிய பள்ளங்கள் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உள்ளது. அணையிலிருந்து 50 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் டி.என். பாளையம் அருகே கொங்கர் பாளையம் வனப்பகுதியை ஒட்டி குண்டேரிபள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 41.75 அடி யாகும். நேற்று முன்தினம் குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் 101 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக நேற்று முன்தினம் 32 அடியாக இருந்த குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று இரவும் குண்டேரிபள்ளம் அணை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் கொண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து இன்று 37.34 அடியாக உயர்ந்துள்ளது.

    இதேபோல் ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 443 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பவானிசாகர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
    • 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன்மலை அடிவாரம் பாப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. ஏ.குமாரபாளையம், கல்யா ணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக் கன்பாளையம் பகுதியில் 2,000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நேரடி பாசனம் பெறுகின்றன.

    சுற்றுப்புற கிராமங்க ளுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவ மழையால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி 50.52 அடியை எட்டி நிரம்பியது. 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியதும் உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து நடப்பாண்டு மார்ச் மாதத்தில் இருந்து சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜூன் மாத இறுதியில் நீர்மட்டம் 31 அடியாக குறைந்து 68 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே மீதமிருந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் அக்டோபர் 1-ல் நீர்மட்டம் 18.37 அடியாக குறைந்தது. 27.10 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருந்தது.

    நீர்மட்டம் 33.20 அடியாக உயர்வு

    இந்த நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் தற்போது 33.20 அடியாக உயர்ந்துள்ளது. 76.17 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி அணை நிரம்பி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி வரை அணை நிரம்பவில்லை.

    இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நவம்பர் இறுதிக்குள் பருவ மழை கை கொடுக்கும் என்பதால் அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் கரியக்கோ வில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்புமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கண்மாய், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    விருதுநகர்

    வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழைபொழிவு குறைந்ததால் வறட்சி நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவில்லி புத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையை நம்பி விவசாயிகள் மா, பலா, வாழை மற்றும் ஊடு பயிர் களை நூற்றுக் கணக்கான ஏக்கரில் பயிரிட்ட னர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யவுடன் விருதுநகரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப் பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் மாலை நேரங்களில் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அய்யனார் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, செண்பகத்தோப்பு மீன் வெட்டிப்பாறை நீர்வீழ்ச்சி, பேயனாறு, கான்சாபுரம் அத்திக்கோவில் ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    நேற்றும், இன்று அதி காலையும் மலைப்பகுதி களில் அதிக மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக மேற்கண்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதனால் அங்குள்ள கண்மாய், குளங் களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.இதேபோல் வத்திரா யிருப்பு, சதுரகிரி மலை பகுதி யிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீராதாரமாக விளங்கும் பிளவக்கல் அணையில் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 47.56 அடி உயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 28 அடியாகும்.

    திடீரென பெய்து வரும் மழையால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விவசாய பணிகள் தொய்வுடன் நடந்த வந்த நிலையில் மழை காரணமாக விறுவிறுப்படைந்துள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது.
    • லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 122.80 அடியாக உள்ளது.

    நேற்று 1000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1401 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுவதால் லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3182 மி.கன அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் அணையின் நீர் மட்டம் 123 அடியை எட்ட உள்ளது. இம்மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விடும். இதனால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 2-ம் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 55.09 அடியாக உள்ளது. வரத்து 2042 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2733 மி.கன அடி.

    57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.95 அடியை எட்டியதால் அணையில் இருந்து நேற்று முதல் தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 434.30 மி.கன அடியாக உள்ளது.

    126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 114.30 அடியாக உள்ளது. வரத்து 93 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 80.69 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 17.4, தேக்கடி 2.4, உத்தமபாளையம் 0.8, சண்முகாநதி அணை 1, போடி 15.4, வைகை அணை 64, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 95, பெரியகுளம் 90, வீரபாண்டி 4.8, அரண்மனைப்புதூர் 13.8, ஆண்டிபட்டி 31.6, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
    • கீழ்தொட்டபெட்டா ஆகிய அணைகளின் நீா் இருப்பு மிக முக்கியமானது.

    ஊட்டி,

    சுற்றுலா நகரமான ஊட்டியில் மே மாதத்தில் நடைபெறும் கோடை சீசனுக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இவர்கள் இங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பார்கள்.

    தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால் கோடை சீசன் களைகட்டி காணப்படும். அப்படி வருபவர்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும், உள்ளூா் மக்களின் குடிநீா் தேவையை சமாளிக்கவும் பாா்சன்ஸ்வேலி, மாா்லி மந்து, டைகா் ஹில், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா ஆகிய அணைகளின் நீா் இருப்பு மிக முக்கியமானது.

    இங்குள்ள முக்கிய குடிநீா் ஆதாரங்களான 50 அடி கொள்ளளவு கொண்ட பாா்சன்ஸ் வேலி அணை, 23 அடி கொள்ளளவு கொண்ட மாா்லி மந்து அணை, 39 அடி கொள்ளளவு கொண்ட டைகா்ஹில் அணை, 35 அடி கொள்ளளவு கொண்ட கோரிசோலா அணை, 25 அடி கொள்ளளவு கொண்ட மேல் தொட்டபெட்டா, 14 அடி கொள்ளளவு கொண்ட கீழ் தொட்டபெட்டா அணை ஆகியவற்றில் சராசரியாக 90 சதவீத அளவுக்கு நீா் இருப்பு உள்ளது.

    இதனால், வரும் மே மாதம் நடைபெறும் கோடை சீசனில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், தற்போது 3 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் தண்ணீா் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் ஊட்டி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • பைக்காரா, கல்லட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி ஊட்டி, தொடர் மழை எதிரொலியாக நீலகிரியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது

    நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது.

    குறிப்பாக ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணைகளில் சேகரமாகி வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்து வருகிறது. தற்போது தொடர் மழை பெய்வதால் சில அணைகள் நிரம்பும் தருவாயில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. நீலகிரியில் மின்வாரியம் கட்டுப்பாட்டில், 13 அணைகள் உள்ளன. தற்போது 90 சதவீதம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது.

    பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், நீர்மட்டம் 88 அடியாகவும், 210 அடி கொள்ளளவு கொண்ட அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 190 அடியாகவும், போர்த்திமந்து அணையின் மொத்த கொள்ளளவான 130 அடியில், நீர்மட்டம் 115 அடி ஆகவும், 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் 162 அடி ஆகவும் உயர்ந்தது.

    எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவான 184 அடியில் தற்போது நீர்மட்டம் 174 அடி, கெத்தை அணையின் மொத்த கொள்ளளவு 156 அடியில் நீர்மட்டம் 154 அடியாக அதிகரித்து உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட முக்குறுத்தி அணையின் நீர்மட்டம் 16 அடியாகவும், காமராஜ் சாகர் அணையின் கொள்ளளவான 49 அடியில் 42 அடியாகவும், 89 அடி கொள்ளளவு கொண்ட பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 88 அடியாகவும், கிளன்மார்கன் அணையின் கொள்ளளவான 33 அடியில் 26 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

    அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், நிரம்பும் பட்சத்தில் பாதுகாப்பு கருத்தி உபரிநீர் வெளியேற்றப்படும். தொடர் மழையால் பைக்காரா மற்றும் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  

    • ஜூலை 15ல் அமராவதி அணை நிரம்பி மூன்று மாதத்திற்கும் மேலாக உபரி நீர், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.
    • அணைக்கு வினாடிக்கு, 1,134 கனஅடி நீர் வரத்து உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. நடப்பாண்டில், தென்மேற்கு பருவ மழை காரணமாக, ஜூலை, 15ல் அமராவதி அணை நிரம்பி மூன்று மாதத்திற்கும் மேலாக உபரி நீர், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    அணையிலிருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று இரவு, 7:00 மணி நிலவரப்படி, நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 87.34 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,134 கனஅடி நீர் வரத்து உள்ளது.எந்த நேரமும் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளதால், ஆற்றின் கரையோரத்திலுள்ள, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவி டுக்கப்ப ட்டுள்ளது.

    • அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    • அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் மழைப்பொழிவானது கடந்த 15 ஆண்டுகளாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாய கிணறுகள், போர்வெல்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. 30 அடி கிணற்றில் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் ஊற்றெடுத்த நிலை மாறி 100 அடி கிணறு வெட்டினாலும் போதிய தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகி இருந்தது.

    200 அல்லது 300 அடி போர்வெல்லில் கிடைத்து வந்த தண்ணீர் இன்று ஆயிரத்து 500 அடியில் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக மழைப்பொழிவு குறைவு என கருதப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காங்கயம் பகுதியில் கீழ்பவானி பாசனம் பெறும் பகுதிகள் மற்றும் பி.ஏ.பி. பாசன பகுதிகளிலும் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விவசாயிகளின் கிணறுகளில் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியுள்ளது. மேலும் தற்போது காங்கயம் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் தற்போது கிணறுகளின் மேல் திட்டு வரை தண்ணீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ×