என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உதவி மேலாளர் கைது"
- அன்னூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணக்குகளை தவறாக காண்பித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை:
கோவை பெரியநாயக்க ன்பாளையம் அருகே உள்ள ஜெய்ஸ்ரீ நகரை சேர்ந்தவர் பிரகாஷ் பாபு (வயது 35). இவர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவரது நிறுவனத்தின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் கல்லாவை திறந்து அதில் இருந்த ரூ. 5 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.இந்த தகவல் கிடைத்ததும் பிரகாஷ்பாபு நிறுவனத்துக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவருக்கு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த தற்போது பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்க்கும் லட்சுமி மில் அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்த ஆனந்தா (30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணக்குகளை தவறாக காண்பித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து பிரகாஷ்பாபு அன்னூரில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து ஆனந்தாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்