என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாரி டிரைவருக்கு அடி-உதை"
- 2 வாலிபர்கள் கைது
கோவை:
மேட்டுப்பாளையம் ஆணைக்கார வீதியை சேர்ந்தவர் செய்யது அன்வர் (வயது23). லாரி டிரைவர்.
இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். இந்த நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் அவர் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த சங்கர் நகர் பகுதியை சேர்ந்த அபாபில் (30) மற்றும் கரிமேடு ஆனந்தன் (30) என்பவர்கள் செய்யது அன்வரிடம் கஞ்சா இருந்தால் கொடு என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் தன்னிடம் கஞ்சா இல்லை என்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் செய்யது அன்வரின் கன்னத்திலும் வயிற்றிலும் மாறி மாறி குத்தினார்.
இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அபாபில் மற்றும் கரிமேடு ஆனந்தன் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் செய்யது அன்வர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிகளிடம் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்