என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பூர் உணவுத்திருவிழா"
- உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காலை 9 மணிக்கு நடக்கிறது.
- செப் தாமு பங்கேற்று தனது சமையல் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் காங்கயத்தில் வருகிற 7-ந் தேதி சமையல் போட்டியுடன் திருப்பூர் உணவுத்திருவிழா நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா வருகிற 7-ந் தேதி காங்கயத்தில் நடைபெற உள்ளது. பெண்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள், வணிகர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்ளும் 'உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி' காங்கயத்தில் காலை 9 மணிக்கு நடக்கிறது.
அமைச்சர்கள் என்.எஸ்.என். மண்டபத்தில் 'திருப்பூர் உணவுத் திருவிழாவை தொடங்கி வைக்க உள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்தின் சுவை அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள் என 50 அரங்குகள் இடம்பெறுகிறது.
அனைவரையும் கவரும் விதமாக, உணவு அரங்குகளும், உணவு பாதுகாப்பு குறித்த கிராமிய கலை நிகழ்ச்சிகள், புதிய உலக சாதனைகள், யோகாசனப் பயிற்சிகள், கலைமாமணி சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம், சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் என மேடை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக உலக சாதனை சமையல் கலைஞரான செப் தாமு, பங்கேற்று தனது சமையல் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார். சமையல் போட்டிகளுக்கு நடுவர் பொறுப்பேற்று சிறந்த சுவைகளை தேர்வு செய்கிறார்.
சமையலில் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்இந்திய சமையல், சிறுதானிய சமையல், பால் வகை சமையல், மறந்து போன உணவுகள், சமையல் அலங்காரம் ஆகிய 10 தலைப்புகளில் உணவு வகைகளை தயார் செய்யலாம். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் உணவு வகைகளை வீட்டிலேயே தயாரித்து எடுத்து வரலாம். ஒருவர் எத்தனை போட்டியிலும் பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
சமையல் கலை நிபுணர்கள் முன்னிலையில் மண்டபத்தில் போட்டி நடக்கும். இந்தபோட்டியில் வெற்றி பெறுபவருக்கு திருப்பூரின் அறுசுவை அரசி என்ற பட்டம், பரிசு வழங்கப்படும். சாப்பாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளது.
விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கலெக்டர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்