search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 252768"

    • வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தொடர்ந்து புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.
    • பஸ்களின் பெர்மிட்டை ரத்து செய்ய வேண்டும்.

    அவினாசி :

    திருப்பூரிலிருந்து ஒரு தனியார் பஸ் கோவை நோக்கி புறப்பட்டது. அதில் ஏறிய ஒரு பயணி தெக்கலூருக்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு பஸ் கண்டக்டர் தெக்கலூரில் பஸ் நிற்காது. எனவே பஸ்சை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த பயணி மறுப்பு தெரிவித்து ஏன் தெக்கலூரில் நிற்காது என்று கேள்வி எழுப்பி யுள்ளார். தொடர்ந்து நான் பஸ்சை விட்டு இறங்க முடியாதுஎன்று கூறியுள்ளார். இதனால் கண்டக்டர்மற்றும் பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த மற்றொரு தனியார் பஸ் கண்டக்டர் டிரைவர் ஒருவரும் சேர்ந்து கொண்டு பயணியை இறங்குமாறு வற்புறுத்திஅவரை வலுக்கட்டாயமாக பஸ்சில் இருந்து இறக்கி விட்டு ள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து அந்த பயணி தெக்கலூரில் உள்ள தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தெக்கலூரில் ஒன்று திரண்டு பஸ் பயணியை இறக்கி விட்ட தனியார் பஸ் மற்றும் அதற்கு துணை நின்றதாக கூறப்படும் 2 தனியார் பஸ்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அவினாசி போலீசார் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இனிமேல் அனைத்துபஸ்களும் தெக்கலூரில்நின்று செல்லும் என்று கூறி பஸ்சை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது பொதுமக்கள் நீண்ட காலமாக இதே நிலைதான் நடக்கிறது. இது பற்றி பலமுறை போராட்டம் நடத்தியும்,வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தொடர்ந்து புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெக்கலூரில் நிற்காமல் செல்லும் இந்த பஸ்களின் பெர்மிட்டை ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்என்று கூறினார்கள். அவர்களிடம் உறு தியாக நடவடிக்கை எடுக்கப்படும்என்று போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர்.

    இதனால் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. தெக்கலூருக்குள் பஸ்கள்செல்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினைஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நிரந்தர தீர்வு காண சம்பந்த ப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டுமெனசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார்.
    • திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி அடுத்த அம்மாபாளையத்தில், கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார். அவரிடம், கண்டக்டர் அவிநாசி, தெக்கலுாருக்குள் பஸ் செல்லாது என கூறி இறங்க சொன்னார். செல்வி இறங்குவதற்குள் அஜாக்கிரதையாக டிரைவர் பஸ்ஸை நகர்த்தியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த செல்வி பலியானார். பல்வேறு சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் பஸ்ஸை இயக்கிய கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் படி கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அவிநாசி வந்த நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடம், பொதுமக்கள் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அதில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் கோவையிலிருந்து செல்லும் பஸ்களும், சேலம், ஈரோடு, திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் பயணிகளை இறக்கி, ஏற்றி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.பி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசி அடுத்த தெக்கலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பார்த்திபன் பொருளாளர் குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    விசைத்தறி தொழிலுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நாளை 16-ந்தேதி, கோவை, எஸ்.என்.ஆர்., கல்லூரி வளாகத்தில், நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது.

    அவினாசி :

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அந்த வகையில், அவினாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய கொடி விற்பனை மையம் தொடங்கிதுவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அ. இலட்சுமணன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மதுமிதா, அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவுலின் ஆரோக்யராஜ், தெக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதமணி மணியன், துணைத்தலைவர் பாலாமணி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

    ×