search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புஷ்பா 2"

    • இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள தேதி குறித்த புதிய தகவல் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

     

    புஷ்பா

    புஷ்பா

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஹைதராபாத் மற்றும் வைசாக் படப்பிடிப்பு முடிந்ததாகவும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    புஷ்பா

    புஷ்பா

    இந்நிலையில் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தாளான வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த டீசர் படத்தின் கதைக்களத்தை உணத்தும் விதத்தில் மூன்று நிமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா
    புஷ்பா

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் 10 நாட்கள் தனது கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.


    புஷ்பா

    புஷ்பா

    இந்நிலையில் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஹைதராபாத் மற்றும் வைசாக் படப்பிடிப்பு முடிந்ததாகவும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

     

    புஷ்பா 

    புஷ்பா 


    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.


    புஷ்பா 

    புஷ்பா 

    இந்நிலையில் புஷ்பா-தி ரூல் படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் 10 நாட்கள் தனது கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் புஷ்பா-தி ரூல் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.


    புஷ்பா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய செய்தி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதன்படி, 'புஷ்பா-தி ரூல்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'புஷ்பா' முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் தயாராகி வருகிறது.
    • புஷ்பா 2 படத்தில் பழங்குடி பெண்ணாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவிக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தில் சாய்பல்லவியின் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தன.

     

    புஷ்பா-2

    புஷ்பா-2

    இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பழங்குடி இன பெண் வேடத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சாய் பல்லவி நடித்த முந்தைய படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்துள்ளதால் அவரிடம் பழங்குடி பெண்ணாக நடிக்க பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    சாய் பல்லவி

    சாய் பல்லவி

    புஷ்பா படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தொடங்கி உள்ளனர். புஷ்பா-2 படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். 

    • தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் தயாராகிறது.
    • புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.

     

    புஷ்பா 2

    இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதனை புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

    • தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் தயாராகிறது.
    • புஷ்பா 2 படத்தில் வில்லியாக நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழில் மசாலா படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த பிரியாமணி, அதன் மூலம் நிறைய வருமானமும் பிற படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.

     

    பிரியாமணி

    பிரியாமணி

    நடிகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய் சேதுபதி வில்லன் நடித்து வரவேற்பை பெற்றதால் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதேபோன்று கதாநாயகிகளும் வில்லியாக நடிக்க விரும்புகிறார்கள். தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் திரிஷா நடித்து பெயர் பெற்றிருந்தார்.

     

    பிரியாமணி

    பிரியாமணி

    இந்நிலையில் பிரியாமணியிடம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புஷ்பா 2-ம் பாகம் படத்தில் வில்லியாக நடிக்க படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா-2 படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்கவைக்க முயற்சி நடந்து வருகிறது. விஜய் சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணியை படக்குழு அணுகி உள்ளனர். அவருக்கும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உள்ளதால் விரைவில் ஒப்புக் கொள்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×