என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெல் உரங்கள்"
- நெல்லுக்கு கூட்டு உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.
- விவசாயிகள் மழையினை பயன்படுத்தி வயல்களை உழவு செய்து விதைப்பதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி மாத தொடக்கத்தில் இருந்தே மாவட்டம் முழுவதிலும் நல்ல மழை பொழிந்து வருகிறது. விவசாயிகள் இம்மழையினை பயன்படுத்தி வயல்களை உழவு செய்து விதைப்பதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அடியுரமாக பயன்படுத்தப்படும் டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நெல் சாகுபடிசெய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டி.ஏ.பி. உரத்தினையே அடி உரமாக பயன்படுத்து கிறார்கள். டி.ஏ.பி. உரம் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொரு ளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உள்நாட்டில் டி.ஏ.பி. உர உற்பத்தி குறைந்துள்ளது. பெரும்பாலான டி.ஏ.பி. உரங்கள் வெளிநாட்டி லிருந்தே இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
மத்திய அரசின் உரத்துறையானது டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடிஉரமாக இட விவசாயி களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது. அதன்படி 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மணிச்சத்தும் உள்ள 50 கிலோ டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தலாம் என்று மத்தியஅரசு வலியுறு த்தியுள்ளது.
தற்போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடை களில் கூட்டுரம் (காம்ப்ளக்ஸ் உரம்;) 1520 மெ.டன், டிஏபி 590 மெ.டன், யூரியா 1420 மெ.டன் உரமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தனியார் உரக்கடைகளில் சூப்பர் பாஸ்பேட் 55 மெ.டன் தற்சமயம் இருப்பில் உள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சூப்பர் பாஸ்பேட் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் கூட்டுரம் (காம்ப்ளக்ஸ்) உரங்களை நெல்லுக்கு அடி உரமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம், கூறியுள்ள தை விவசாயிகள் பின்பற்றி நெற்பயிரில் இந்த சம்பா பருவத்தில் இதனை நடைமுறைபடுத்தி நல்ல மகசூல் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்