search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் 2 பேர் பலி"

    • கண்காணிப்பு காமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
    • 2 பேரும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மலு மிச்சம் பட்டிக்கு நடந்து சென்றனர்.

    கோவை,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நித்தீஸ்குமார் (வயது 24). அவுடேஷ்குமார் (24).

    கடந்த வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர்கள் செட்டிப்பாளையம் அருகே உள்ள சீராபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நித்தீஸ்குமார், அவுடேஷ்குமார் ஆகியோர் நிறுவனத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

    நேற்று இரவு இவர்கள் 2 பேரும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மலு மிச்சம் பட்டிக்கு நடந்து சென்றனர். பொருட்களை வாங்கிய பின்னர் மீண்டும் குடியிருப்புக்கு செல்வதற்காக மலுமிச்ச ம்பட்டி- ஒத்தகா ல்மண்டபம் ரோட்டில் நடந்து சென்றனர்.அப்போது அந்த வழியாக அதி வேகமாக வந்த வெள்ளை கலர் கார் வட மாநில தொழிலாளர்கள் நித்தீஸ்குமார், அவுடேஷ்கு மார் ஆகியோர் மீது ேமாதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே நித்திஸ்குமார், அவுடேஷ்குமார் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக பரிதாபமாக இறந்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவஇடத்து க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காரை தேடி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா க்களில் அடையாளம் தெரியாத கார் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.  

    • வாகனம் மோதி விட்டு நிற்க்காமல் சென்றது.
    • கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே உள்ள பெரிய தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எசேந்திரன் மகன் பாபு என்கிற விக்னேஷ் (வயது 20). பிரகாஷ் (20) மேல்மொணவூரை சேர்ந்தவர் சீனு (22) இவர்கள் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தனர்.

    பைக்குகள் மீது நேற்று வேலூர் வசூர் பகுதியில் நடந்த திருவிழாவில் மேளம் அடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு வேலூரில் இருந்து 2 பைக்குகளில் ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்த போது வேகமாக வந்த வாகனம் ஒன்று 2 பைக்குகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாபு, சீனு இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

    இதனை நேரில் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பிரகாசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பாபு, சீனு ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக வேலூரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். 

    ×