search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னெ–ச்சரிக்கை"

    • மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
    • கொள்ளிடகரையோர கிராமங்களில் 24 மணிநேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட குமாரமங்கலம் முதல் அளக்குடி வரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் ஆதனூர் இடையே கட்டப்பட்டு வரும் கதவணை பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடை–பெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் நிருர்களிடையே பேட்டியளித்தபோது கூறியதாவது; மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு உட்பட்ட குமாரமங்கலம், மணல்மேடு, அளக்குடி, முதலைமேடு, நாதல்படுகை, திட்டுப்படுகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடகரையோர கிராமங்களில் 24 மணிநேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அளக்குடி பகுதியில் கொள்ளிடக் கரையை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு கரையை பலப்படுத்த நிரந்தர தீர்வுகாண்பதற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீரின் வரத்து அதிகரித்தால் தேவைக்கு ஏற்ப மக்களை பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்துகொடுப்பதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர் என்றார்.

    இதில் மாவட்ட கலெக்டர் லலிதா, பொதுபணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×