என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர்"

    • செவிலியர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுவதாக கூறி பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    • செவிலியரை இடமாற்றம் செய்வதாக டாக்டர் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    முக்கூடல்:

    முக்கூடலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    முற்றுகை

    இங்கு பணியாற்றும் செவிலியர் ஒருவர், நோயாளிகளை தரக்குறைவாக பேசுவதுடன் அவர்களுக்கு விரைந்து முதலுதவி சிகிச்சை செய்வதில்லை, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமல் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இந்த முற்றுகை போராட்டத்திற்கு பொன்னரசு தலைமை தாங்கினார். பார்த்திபன், முத்துசாமி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் வனிதா, சிந்துஜா, ராஜலட்சுமி, ஜெனிஷா மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை அங்கு இருந்த மருத்துவரிடம் தெரிவித்து முற்றுகையிட்டனர்.

    கலைந்து சென்றனர்

    உடனே செவிலியரை இடமாற்றம் செய்வதாக டாக்டர் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த பணியாாளர்கள் கூறுகையில், இந்த மருத்துவமனையில் 5 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஒரு ஆண் செவிலியர் மற்றும் ஒரு பெண் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் கூட பணிகள் தாமதமாகலாம் என்றனர்.

    • விருதுநகரில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியருக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்.
    • இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது55). அரசு செவிலியராக பணியில் சேர்ந்த இவர் கடந்த 37 வருடங்களாக கன்னிசேரி புதூர், எம்.ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம உதவி செவிலியராக பணியாற்றி உள்ளார். பணியில் இருந்த போது அர்ப்பணிப்பு சேவையுடன் நோயாளிகளுக்கு மங்கம்மாள் சேவை செய்தார். தற்போது இவர் ஆர்.ரெட்டியபட்டியில் உதவி செவிலியராக உள்ளார்.

    இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது. அதன்படி மத்திய அரசு அவருக்கு தேசிய விருது அளித்தது. இதனை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு சான்றிதழை வழங்கி மங்காம்மாவை பாராட்டினார்.

    அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மங்கம்மாள் தேசிய விருது பெற்று விருதுநகர் மாவட்டத்தை பெருமை அடைய செய்துள்ளார்.

    • உலக செவிலியர் தின விருது வழங்கப்பட்டது.
    • செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முகவை தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலங்களில் பங்காற்றிய செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் அப்துல்லா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நூருல் சமது தலைமை தாங்கினார். செவிலியர் ராஜசேகரன் வரவேற்றார். மருத்துவர் கண்ணகி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக செய்யதம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் சரளா, இந்திராகாந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
    • செவிலியர் தினம் அரசு தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக செவிலியர் தினம் அரசு தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கும் நினைவு பரிசும், இனிப்பும் வழங்கப்பட்டது.மேலும் செவிலியர்கள் நோயாளிகளின் வழியையும் வேதனையும் புரிந்து கொண்டு மிக சிறப்பாக செயல்படுவதாகவும், மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்து பாராட்டினர்.

    இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தலைவர் கலைச்செல்வன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் தாமரைச்செல்வன், பி.ஆர்.ஓ.குமாரசாமி, துணைத் தலைவர் லோகநாதன் மற்றும் முன்னாள் தலைவர்கள், கார்த்திகேயன், ராஜேந்திரன், பொறியாளர்கள் ஹரிஹரன், வில்வநாதன், அன்னை தெரசா கல்வி குழுமத்தின் தாளாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் அரசு மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • செவிலியருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. வாழ்த்து கூறினார்.
    • விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுகந்தி 2023-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நைட்டிங்கேல் விருது பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளதாவது:-

    மருத்துவசேவையில் முழு அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றியமைக்காக விருது பெற்றுள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுதலையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். குறிப்பாக பழங்குடியின தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்க்க செய்து, இறப்பு இல்லாத நிலைக்கு சாதனை புரிந்து பெருமை சேர்த்து உள்ளீர்கள். தங்கள் சேவை இன்னும் உச்சத்தை அடைய வாழ்த்துகிறேன். விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது. இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் வழிகாட்டி செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனைக்கு மெண்டர் செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு தேவையான செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்வதற்கு பதிலாக அங்கு புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து அதில் பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    • நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் நான் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். நான் இந்த மருத்துவமனைக்கு வந்த புதிதிலும் இதே போல மிரட்டி மன உளைச்சலை ஏற்படுத்தினார். பணியின்போதும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் பணியை சரியாக செய்தபோதும் வேண்டுமென்றே கண்டிப்பது போல திட்டிவிட்டு பின் ஏன் என்னிடம் வந்து நீ மன்னிப்பு கேட்கவில்லை என கேட்டு இதேபோன்று தொடர்ச்சியாக துன்புறுத்தி வருகிறார். மேலும் இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    • தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
    • மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் பணிபுரியம் கடைநிலை ஊழியர்களுக்கு இதுவரை 2 ஷிப்ட் என்ற முறைகள் பணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் ( தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

    காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3-வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.
    • மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் இருவரை கைது செய்தனர்.

    பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த கங்காபூரில் ஆர்பிஎஸ் ஹெல்த் கேர் சென்டர் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. முஸ்ரிகராரி காவல் நிலைய வட்டத்திற்குள் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அரங்கேறிய கூட்டு பாலியல் வன்புறவு முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தின் போது மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரை மருத்துவர் குமார், மற்றும் அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுனில் குமார் குப்தா மற்றும் அவதேஷ் குமார் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க செவிலியர் தன் கையில் கிடைத்த பிளேடு கொண்டு மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.

    இதையடுத்து, மூவரிடம் இருந்து தப்பிய செவிலியர் மருத்துவமனையில் மறைந்திருந்து காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் இருவரை கைது செய்தனர். விசாரணையில் மருத்துவர் உள்பட மூவரும் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

    "ஆபத்தான காலக்கட்டத்தில் செவிலியரின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது," என காவல் துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் பாண்டே தெரிவித்தார். 

    • அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர்.
    • செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3 மணியளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • திருமதி நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம்.
    • கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் blood money குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார்.

    இதற்கிடையே தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

     

    இந்நிலையில் நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்துள்ளார். தண்டனை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமதி நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். பிரியாவின் குடும்பத்தினர் நிலைமையை புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர், குறிப்பாக அவரது தாயார் பிரேமா குமாரி, அவரது உயிரைக் காப்பாற்ற இடைவிடாமல் போராடினார்.

    கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

    இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் blood money பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது நிமிஷா குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • நேரம் கடந்துவிட்டது என்று கைகளை கூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்
    • 11 ஆண்டுகளுக்குப் பிறகு யேமன் சிறையில் இருந்த நிமிஷாவை பிரேமா சந்தித்தார்

    ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் தாய் கேரளா மற்றும் மத்திய அரசுகளின் உதவியை நாடியுள்ளார். தனது மகளின் மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்ததையடுத்து செயல்பட அதிக நேரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்துக்குள் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

     தாய் வேண்டுகோள் 

    இந்நிலையில் ஏமனில் இருந்து உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் பேசிய பிரேமா குமாரி, இந்திய அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மகளுக்கு இன்னும் அதிக நேரம் இல்லை, என்று அவர் கூறினார்.

    இந்திய மற்றும் கேரள அரசுகளுக்கும், அவளைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட குழுவிற்கும், இதுவரை வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இது எனது இறுதி வேண்டுகோள். தயவு செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்ற உதவுங்கள். நேரம் கடந்துவிட்டது என்று கைகளை கூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு யேமன் சிறையில் இருந்த நிமிஷாவை பிரேமா சந்தித்தார். "என்னைப் பார்த்தவுடனே ஓடி வந்து மம்மி என்று என்னைக் கட்டிக் கொண்டாள்.இருவரும் அழுதோம்.ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதோம்.இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறேன்.கடைசியாக அவளைப் பார்த்தது திருமணம் ஆனபோதுதான். அவளை விட்டு விடுங்கள் என்று பிரியாவை சந்தித்த பிறகு தாய் குமாரி தெரிவித்தார்.

    2023 டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் குமாரி ஏமன் செல்ல அனுமதிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் blood money பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் மற்றும் அவரது மகளை தூக்கில் இருந்து காப்பாற்றவும் இந்த அனுமதி வழங்கப்பட்டது. 

    நிமிஷா கொலை வழக்கு 

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டு வந்தார்.

     ஒரே வழி

    கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

    இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் blood money பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்து வந்தது.

    தற்போது மரண தண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அழித்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு blood money கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அதை ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும் என்று குமாரி மற்றும் நிமிஷாவின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிமிஷாவை தூக்கிலிருந்து இனி காப்பாற்றுவதற்கான ஒரே வழி இதுவே ஆகும். எனவே மத்திய அரசு இதில் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    ×