search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ சக்கரம்"

    • நோய் நொடிகள் அண்டாது. ஆயுளும் நீடித்திருக்கும்.
    • நல்ல புத்திரர்கள் பெறலாம். செல்வம் கொழிக்கும். இடையூறுகள் யாவும் அகன்றுவிடும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மாங்காட்டு அம்மனை வழிபட்டால் வாழ்க்கை ஒளிபெறும்.

    மனத்தில் அச்சங்கள் அகன்று, தளர்ச்சி நீங்கி அனைத்து வளங்களும் ஏற்படும். புகழ் உண்டாகும்.

    திங்கட்கிழமைகளில் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகள் விலகும்.

    உடல் நலம் குறைவுற்றிருந்தால் உடல் நலம் பெறும். உடல் நலமும் நீண்ட ஆயுளும் உண்டாகும்.

    மாங்கல்ய பாக்கியம் ஏற்படும். சோம வார விரதமிருந்து அம்மனை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும்.

    செவ்வாய்க் கிழமைகளில் அன்னை காமாட்சியை வழிபட்டு வந்தால் அமங்கலங்கள் நீங்கி மங்கலம் உண்டாகும்.

    நீண்ட காலமாகத் திருமணமாகாத கன்னிப் பெண்களின் துயர் நீங்கித் திருமணம் கூடும்.

    செவ்வாய் தோஷம் என்பது வேதனைக்குரியது என்பர்.

    திருமணத் தடங்கல் அல்லது மணந்து வாழும்போது பல அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பர்.

    அத்தகைய சங்கடங்கள் நேராதவாறு தடுத்து அருள்புரிவாள் அன்னை காமாட்சி.

    நோய் நொடிகள், பேய், பிசாசு, மாய மந்திரங்கள் போன்ற தொல்லைகளிலிருந்தும் காத்தருள்வாள்.

    புதன் கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் அறிவு விருத்தியாகும்.

    கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். அதனால் மேன்மையும் பெறலாம்.

    கவிஞர்கள், கலைத்துறையில் ஈடுபட்டவர்கள், ஜோதிடர்கள், வணிகர்கள் போன்றோர் புதன் கிழமைகளில் சென்று பராசக்தியை வழிபட்டு வந்தால் அவர்கள் துறையில் மேம்பட்டு விளங்குவர்.

    வியாழக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தொல்லைகள் யாவும் நீங்கி சிறப்புகள் உண்டாகும்.

    பொன்னும் பொருளும் சேர்ந்து வாழ்க்கையில் உயர்வு ஏற்படும்.

    நோய் நொடிகள் அண்டாது. ஆயுளும் நீடித்திருக்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

    நல்ல புத்திரர்கள் பெறலாம். செல்வம் கொழிக்கும். எத்தகைய இடையூறு இருந்தாலும் யாவும் அகன்றுவிடும்.

    சனிக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் வம்பு வழக்குகள், விரோதிகளின் தொல்லைகள் போன்ற எல்லாமே நம்மை ஒன்றும் செய்யாது காத்தருள்வாள்.

    நீண்ட ஆயுளையும் அளிப்பாள்.

    ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.

    சித்திரா பவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்ற திருவிழாக்கள் மாங்காட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    • அன்னையின் எழில்மிகு நெற்றியில் திரிபுண்டரமான பிறைநிலவாய் திருநீறு.
    • வலக்கால் முன்புறமாக மேல் நோக்கி மடங்கியிருக்கிறது.

    மாமரக்காடு நடுவே பிலத்துவாரம்.

    சுற்றிலும் கொழுந்து விட்டெரியும் பஞ்சாக்னி.

    அதன் நடுவே காமாட்சி.

    அன்னையின் எழில்மிகு நெற்றியில் திரிபுண்டரமான பிறைநிலவாய் திருநீறு.

    கார்மேகம் வியக்கின்ற கார்குழல் அவிழ்ந்து முதுகிலும், தோள்களிலும் கருநுரை வெள்ளமாய்ப் பரவிக்கிடக்கிறது.

    வலக்கரம் உயர்ந்து, சிரத்தின் உச்சியில் ருத்திராட்ச மாலையை விரல்களில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

    இடக்கரம் மார்பு ஊடாக மடிந்து, விரல்களில் சின்முத்திரையுடன் விளங்குகிறது.

    இடக்கால் பெருவிரல் ஊன்ற பஞ்சாக்னியின் வெஞ்சுடர் முனையில் நிற்கிறது.

    வலக்கால் முன்புறமாக மேல் நோக்கி மடங்கியிருக்கிறது.

    கண்மலர்கள் குவிந்துள்ளன. திருவாய்மலர் பஞ்சாட்சரத் திருப்பெயரை உரைத்துக் கொண்டிருக்கிறது. மனமோ யோக தியானத்தில் தவழ்கிறது.

    இதுவே அன்னையின் தவக்கோலம்.

    • ‘க’ என்பது பிரம்மாவைக் குறிப்பதாகும்.
    • அந்த ‘க’வின் பத்தினியான சரஸ்வதியைக் குறிப்பது. ‘கா’

    காமாட்சி என்றால் கருணை வடிவானவள்.

    அன்பே வடிவானவள் என்று பொருள்.

    தன்னை வணங்கும் அடியவர்களை தன் அன்பால் அரவணைப்பவள் காமாட்சி.

    'காம' என்றால் 'ஆசை' (விருப்பம்), 'அட்சி' (ஆட்சி) என்றால் 'கண்' என்றும் 'ரட்சித்தல்' என்றும் 'ஆட்சி செய்தல்' என்றும் பொருள்.

    குழந்தைகளாகிய நம்மீது அன்பைப் பொழியும் கண்களை உடைய தாய்தான் 'காமாட்சி' அருள்மிகு காமாட்சியின் கண்களுக்கு உள்ள விசேஷ சக்தி மிகவும் அலாதியானது. அளவிட முடியாதது.

    'கா'வையும் 'மா'வையும் அட்சங்களாக (கண்களாக) கொண்டவள் எவளோ அவளே காமாட்சி எனப்படுகிறாள்.

    'க' என்பது பிரம்மாவைக் குறிப்பதாகும்.

    அந்த 'க'வின் பத்தினியான சரஸ்வதியைக் குறிப்பது. 'கா' அவ்வாறே,

    'மா' என்பது லட்சுமியைக் குறிப்பதாகும். 'மா' தவன் என்றால் லட்சுமியின் பதி என்பதாகும்.

    இதன்படி பார்த்தால் 'கா' வான சரஸ்வதியையும், 'மா' வான லட்சுமியையும் தன் இரு கண்களாகக் கொண்ட காமாட்சி காருண்யத்தையும், கல்வியையும், செல்வத்தையும் வாரி வாரி மாரியாய் வழங்குபவள்.

    • அண்டினோரைக் காக்கின்ற காமாட்சி!
    • கரும்போடு காட்சிதரும் காமாட்சி!

    மாங்காட்டில் வாழ்பவளே காமாட்சி!

    மகிமையுள்ள தெய்வம் நீயே காமாட்சி!

    பஞ்சாக்நி மத்தியிலே காமாட்சி!

    பரமனுக்குத் தவமிருந்த காமாட்சி!

    காஞ்சியிலே கோயில்கொண்ட காமாட்சி!

    கல்யாணக் கோலம்பூண்டாய் காமாட்சி!

    சங்கரரும் பூஜை செய்த காமாட்சி!

    சக்கரத்தில் உறைந்திட்ட காமாட்சி!

    அர்த்தமேரு அலங்கரிக்கும் காமாட்சி!

    அண்டினோரைக் காக்கின்ற காமாட்சி!

    காஞ்சிமுனி சேவிக்கும் காமாட்சி!

    கண்கண்ட தெய்வமம்மா காமாட்சி!

    பஞ்சலோக வடிவினியே காமாட்சி!

    பக்தர் துயர் தீர்த்திடுவாய் காமாட்சி!

    ஆடிப்பூர தினத்தினிலே காமாட்சி!

    ஆனந்தமாய் வீற்றிருப்பாய் காமாட்சி!

    பங்குனிநல் உத்திரத்தில் காமாட்சி!

    பரமனை நீ மணங்கொண்டாய் காமாட்சி!

    கரும்போடு காட்சிதரும் காமாட்சி!

    கருணையுள்ள தெய்வம் நீயே காமாட்சி!

    கிளியோடு காட்சிதரும் காமாட்சி!

    கிருபை நீயும் செய்திடுவாய் காமாட்சி!

    சாந்தமாக காட்சி தரும் காமாட்சி!

    சந்தானம் தந்திடுவாய் காமாட்சி!

    சூதவனம் கோவில் கொண்ட காமாட்சி!

    சூதுகளை அகற்றிடுவாய் காமாட்சி!

    இடப்புறத்தில் அமர்ந்திட்ட காமாட்சி!

    இன்பமெல்லாம் தந்திடுவாய் காமாட்சி!

    ஆறுவாரப் பூஜை ஏற்பாய் காமாட்சி!

    ஆதிகாமாட்சியும் நீயே காமாட்சி!

    முதல்வாரப் பூஜையிலே காமாட்சி!

    நம் குறைகள் அறிந்திடுவாள் காமாட்சி!

    இரண்டாம் வாரப் பூஜையிலே காமாட்சி!

    இன்னல்களைப் போக்கிடுவாள் காமாட்சி!

    மூன்றாம் வாரப் பூஜையிலே காமாட்சி!

    மூன்றுவரம் தந்திடுவாள் காமாட்சி!

    நான்காம் வாரப் பூஜையிலே காமாட்சி!

    நலன்கள் பல தந்திடுவாள் காமாட்சி!

    ஐந்தாம் வாரப் பூஜையிலே காமாட்சி!

    ஐயங்களைப் போக்கிடுவாள் காமாட்சி!

    ஆறாம்வாரப் பூஜையிலே காமாட்சி!

    நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் காமாட்சி!

    மாவடியில் வசித்தவளே காமாட்சி!

    மனக்குறைகள் தீர்த்திடுவாள் காமாட்சி!

    தாம்பூலம் ஏற்றிடுவாள் காமாட்சி!

    தாயாகக் காத்திடுவாள் காமாட்சி!

    கற்பூரம் ஏற்றிடுவேன் காமாட்சி!

    கலிதெய்வம் நீதானே காமாட்சி!

    புஷ்பமாலை ஏற்றிடுவாள் காமாட்சி!

    புண்ணியங்கள் தந்திடுவாள் காமாட்சி!

    காய்ச்சிட்ட பாலுடனே காமாட்சி!

    கற்கண்டும் ஏற்றிடுவாள் காமாட்சி!

    ஏலக்காய் தேனுடனே காமாட்சி!

    ஏழைகளின் துயர் தீர்ப்பாய் காமாட்சி!

    எலுமிச்சம் பழம் ஏற்பாள் காமாட்சி!

    எம் குறைகள் தீர்த்திடுவாள் காமாட்சி!

    மாலையாக காட்சிதரும் காமாட்சி!

    பாசமுடன் காத்திடுவாள் காமாட்சி!

    மங்களமாய் காட்சி தரும் காமாட்சி!

    மங்களமாய் வாழவைப்பாள் காமாட்சி!

    உத்யோகம் தந்திடுவாள் காமாட்சி!

    உன்னடியே சரணமம்மா காமாட்சி!

    அன்னை உனை வேண்டி நின்றேன் காமாட்சி!

    ஆதரிப்பாய் என்னையும் நீ காமாட்சி!

    மாங்கல்யம் தந்திடுவாள் காமாட்சி!

    மக்களையும் காத்திடுவாள் காமாட்சி!

    மணாளனைத் தந்திடுவாள் காமாட்சி!

    மழலைகளும் தந்திடுவாள் காமாட்சி!

    தூளிகளை ஏற்றிடுவாள் காமாட்சி!

    துன்பங்களைத் துடைத்திடுவாள் காமாட்சி!

    வெற்றிகளைத் தந்திடுவாள் காமாட்சி!

    வேதனைகள் போக்கிடுவாள் காமாட்சி!

    வேழமுகம் நாயகன் தாய் காமாட்சி!

    வேல்முருகன் அன்னையும் நீ காமாட்சி!

    குருநாதர் காட்டிட்ட காமாட்சி!

    குவலயத்தோர் கொண்டாடும் காமாட்சி!

    அகிலாண்ட நாயகியே காமாட்சி!

    அன்பர் குறை தீர்த்திடுவாள் காமாட்சி!

    ஆவின்பால் குடித்தவளே காமாட்சி!

    ஆனந்தம் தந்திடுவாள் காமாட்சி!

    சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் காமாட்சி!

    சீக்கிரமே அருள்தருவாய் காமாட்சி!

    கெஞ்சுகிறேன் உன்னையம்மா காமாட்சி!

    கீர்த்தியுடன் வாழ வைப்பாய் காமாட்சி!

    கரம்கூப்பி வணங்குகிறேன் காமாட்சி!

    வரம் அனைத்தும் தந்திடுவாய் காமாட்சி!

    நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் காமாட்சி!

    நீதிகளைத் தந்திடுவாள் காமாட்சி!

    வறுமைகளை ஓட்டிடுவாள் காமாட்சி!

    வாழ்வு தந்து காத்திடுவாள் காமாட்சி!

    அர்ச்சனைகள் ஏற்றிடுவாள் காமாட்சி!

    அகத்தினிலே குடியிருப்பாள் காமாட்சி!

    குழந்தை நானும் மனம் மகிழ காமாட்சி!

    குமரனுடன் காட்சி தாராய் காமாட்சி!

    அன்னை தந்தை தெய்வம் நீயே காமாட்சி!

    அருள் வடிவாம் குருநீயே காமாட்சி!

    மடிசாரில் காட்சி தரும் காமாட்சி!

    மன வினைகள் தீர்த்திடுவாள் காமாட்சி!

    கடும் தபசு புரிந்திட்ட காமாட்சி!

    கவலைகளைக் களைந்திடுவாள் காமாட்சி!

    காமகோடி ஈஸ்வரியே காமாட்சி!

    காத்திருந்து வரமளிப்பாய் காமாட்சி!

    காஞ்சி முனி வேண்டிநிற்கும் காமாட்சி!

    காலமெல்லாம் காத்தருள்வாய் காமாட்சி!

    • இத்திருமேனி ஏறத்தாழ 15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்
    • தபஸ்காமாட்சியின் இருபக்கமும் இரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளன.

    காமாட்சி ஆலயத்தில் எல்லோருடைய கண்களையும் மனத்தையும் ஒருங்கே கவர்ந்திழுப்பது தபஸ் காமாட்சியின் செப்புத் திருமேனியாகும்.

    பீடத்திலிருந்து ஏறத்தாழ மூன்றடிக்குமேல் உயர்ந்திருக்கும் இத்திருமேனி தமிழ்நாட்டின் சிற்பக் கலைக்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    பஞ்சாக்கினியின் செந்நாச்சுடர் முடியின் மீது தனது இடக்கால் பெருவிரலை ஊன்றி நின்று கொண்டு, வலக் காலை முன்பக்கமாக வளைத்து உயர்த்தி,

    மாலையை ஏந்திக் கொண்டு, இடக் கரத்தால் சின்முத்திரையுடன் மார்பைத் தீண்டிக்கொண்டு தியான யோக நிலையில் உள்ளம் நெடிது அழ,

    அன்னை தவமியற்றும் அற்புதத்தை அழகோவியமாக காட்டுகிறது இந்தப் பஞ்சலோகத் திருமேனி.

    இந்தக் கோலம் ஒரு சில ஆலயங்களில் தூண்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், செப்புச் சிலை வடிவத்தில் இருப்பது இங்கு மட்டும்தான்.

    இத்திருமேனி ஏறத்தாழ 15&ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

    தபஸ்காமாட்சியின் இருபக்கமும் இரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளன.

    ஒன்று அன்னையின் ஏவல் கேட்டு நிற்கும் கிங்கரியின் திருவுருவம், மற்றொன்று கிராம தேவதை.

    • இந்த காமாட்சி பஞ்சலோகத்தால் ஆனதாகும்.
    • ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.

    ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரத்தின் காரணத்தால் அக்னியின் ஆவேசம் படிப்படியாகக் குறைந்து வந்தது.

    இருந்த போதிலும் மக்கள் அம்மனை தரிசிக்கவும் ஆலயத்தில் பிரவேசிக்கவும் அஞ்சினர்.

    அந்த அச்சத்திற்குக் காரணமாய் இருந்தது அங்கிருந்த தவக் காமாட்சி விக்ரகமேயாகும்.

    இதனால் பல ஆண்டு காலம் அம்மன் சன்னிதானம் பிரசித்தியடையாமலேயே இருந்து வந்தது.

    ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மிகவும் பிரபலமாகி பக்தர்கள் பலகோடி சென்று வருவதற்கும் காரணம் இருக்கின்றது.

    ஆதிசங்கரர் வழி வந்த காஞ்சிப் பெரியவர்கள் தன் ஞானத்தால் மக்கள் அங்கு அதிகமாய் செல்லாததின் காரணத்தைக் கண்டு அதையறிந்து மாங்காடு சென்றார்.

    தான் அறிந்ததை நடைமுறைப்படுத்தினார்.

    அதாவது தவக் கோலத்தில் இருந்த காமாட்சியை மூலஸ்தானத்திலிருந்து எடுத்து அதை அக்கோவிலின் இடது புறத்தில் வைத்தார்.

    பின்னர் மூலஸ்தானத்தில் ஓர்கையில் கிளியோடும் மறுகையில் கரும்போடும் கூடிய சாந்தமான காமாட்சியைப் பிரதிஷ்டை செய்தார்.

    இதனால் மாங்காடு மூலஸ்தான அம்மன் "ஆதி காமாட்சி" என்று விளங்குகிறார்.

    இந்த காமாட்சி பஞ்சலோகத்தால் ஆனதாகும்.

    ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.

    சித்ரா பவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்றவை மாங்காட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    • “உரு ஏறத் திரு ஏறும்” என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.
    • ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.

    1960ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் மாங்காட்டிற்கு விஜயம் செய்தார்.

    வேண்டுவார் வேண்டுவதை அருள வல்லதும், ஸ்ரீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான மகா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்தமேரு அங்கு இருந்தும் கூட,

    அதை தரிசித்துப் பயன்பெறுவதிலே மக்கள் அவ்வளவாக ஆர்வம் இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களது கருணை உள்ளம் வேதனை அடைந்தது.

    தான் வழக்கமாகப் படுத்து உறங்கும் கட்டிலுக்கு அடியிலே ஒரு பெரும் புதையல் இருப்பதை அறியாமல்,

    ஒருவன் நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் பிச்சை எடுத்தே வயிறு வளர்த்து வந்தானாம்.

    அதே போல், அள்ள அள்ளக் குறையாத ஓர் அளப்பரும் திருவருட் களஞ்சியம் மாங்காட்டிலே இருந்தும்,

    அதை அறியாமல் மக்கள் தம் குறைகளைப் போக்கிக் கொள்வதற்காக எங்கெங்கோ அலைந்து ஏங்கித் தவிக்கிறார்களே என்று

    ஸ்ரீஅச்சய சாமிகள் இரக்கம் கொண்டார்கள்.

    அங்குள்ள பரம்பரை அர்ச்சகராகிய மறைத்திரு ஏகாம்பர சிவாச்சாரியாரிடத்தில் இது பற்றி உரையாடினார்கள்.

    காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய சாமிகளின் ஆணையை சிரமேற்கொண்டு, அவர்கள் காட்டிய நெறியே நின்று,

    ஆலயத்தினுள்ளே நாள் தோறும் தீவிரமான ஜபயோக சாதனையில் ஈடுபடலானார் ஸ்ரீஏகாம்பர சிவாச்சாரியர்.

    அதன் பலனைத்தான் இன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பெருகி வழிகின்ற பக்தர்களின் கூட்டத்திலே நாம் பார்த்து மகிழ்கிறோம்.

    "உரு ஏறத் திரு ஏறும்" என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.

    அந்த நியதிப்படியே, சிவாச்சார்யரின் ஜபயக்ஞம் ஏறஏற, ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.

    கோவில் அதிகாரிகளால் எளிதில் சமாளிக்க முடியாத அளவுக்கு, இன்னமும் பெருகிக் கொண்டே வருகிறது.

    • ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும்.
    • நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள்.

    குழந்தை பேறு, வேலை வாய்ப்பு போன்றவற்றை தரும் அற்புதமான தலமாகவும் மாங்காடு தலம் திகழ்கிறது.

    திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    வெள்ளி மற்றும் பவுர்ணமியில் ஊஞ்சல் சேவை நடக்கிறது.

    நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள்.

    இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது.

    பவுர்ணமி தோறும் 9 கலசங்களில் 9 சக்திகளை ஆவாசனம் செய்து நடத்தப்படும் நவகலச ஹோமமும், புஷ்பாஞ்சலியும் மிகவும் பிரசித்தம்.

    தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும்.

    ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும்.

    இத்தலத்தில் ஆதியில் அம்மன் புற்றில் இருந்ததாக கருதப்படுகிறது.

    புற்றுருவில் இருந்த அம்மன் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் வட திசையில் திருக்குளம் உள்ளது.

    பிரச்சினைகள் தீர, 18,27,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்ச மாலை சாற்றி வழிபடலாம்.

    புரட்டாசி பவுர்ணமியன்று நடக்கும் நிறைமணி தரிசனத்தில் கலந்து கொண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    • இங்கே அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் திருமணத் தடைகள் நீங்கும்
    • கல்வியில் முதன்மை, தொழில் விருத்தி மற்றும் செல்வ சுக போகமும் கிடைக்கும்.

    நவ கன்னிகைகள் சந்நிதியும் மனதிற்கு அமைதியைத் தருகின்றது.

    அம்மன் தவமிருக்க ஆரம்பிக்கும் பொழுது, தன் தவத்திற்குக் காவலாக எட்டு கன்னிகைகளுக்கு காவல் பணியைக் கொடுத்தாள்.

    அம்மனோடு சேர்த்து ஒன்பது கன்னிகைகளாக கோவிலிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    மாங்காடு காமாட்சி அம்மனின் கோவில் உள் வடிவமைப்பு சுமார் 4,500 சதுர அடி பரப்பளவு உள்ளதாகும்.

    நம் துன்பங்கள் நீங்குவதற்கு மாங்காடு அம்மன் திருவருள் துணைபுரியும்.

    தடைகள் மற்றும் தீமைகளை நீக்கி நலம் நல்குவாள் காமாட்சி அன்னை.

    எதிலும் வெற்றி அடைய வேண்டுமெனில் காமாட்சி அம்மனின் கருணையை மாங்காடு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

    சிவன், விஷ்ணு, பிரம்மன், எமன், இந்திரன் முதலிலிய தேவர்களின் சக்திகளைத் தன்னுள் அடக்கி இருப்பவள் மாங்காடு காமாட்சி.

    இங்கே அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் திருமணத் தடைகள் நீங்கும்.

    கல்வியில் முதன்மை, தொழில் விருத்தி மற்றும் செல்வ சுக போகமும் கிடைக்கும்.

    உடல்ரீதி யான உபாதைகளுக்கும் காமாட்சி அம்மனை தரிசித்து வேண்டிக் கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

    மாங்காடு அம்மன் கோவிலிலில், எலுமிச்சம் பழ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது மட்டு மல்ல; தங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்கிற அளவற்ற, அசைக்க முடியாத நம்பிக்கையூட்டுவதுமாகும்.

    இந்த பூஜை முறையில் எலுமிச்சம் பழத்தை அம்மனாக மனதில் பாவித்து வழிபடுதல் விசேஷம் ஆகும்.

    • ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.
    • பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.

    மாங்காடு தலத்தில் கோவிலிலின் கோபுர வாசலைக் கடந்து, உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது.

    வினைதீர்க்கும் விநாயகரை வணங்கி விட்டு உள்ளே சென்றால் முருகக் கடவுளையும், ஆதிசங்கரரையும் வணங்கலாம்.

    சூரியன், பைரவர், மேலும் ஒரு விநாயகரைத் தரிசித்தபின் துவார பாலகர் நின்றிருக்கும் வழியாகச் சென்றால் சபா மண்டபத்தை அடையலாம்.

    தவம் செய்யும் காமாட்சி அன்னையின் சந்நிதி தனியாக உள்ளது.

    பஞ்சாக்னியில் காமாட்சி அம்மன் நிற்கும் கோலம் தனிச் சிறப்புடையது.

    உள்ளே கருவறையில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.

    ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.

    ஸ்ரீ சக்கரம் கூர்ம (ஆமை) ஆசனத்தில் அமையப் பெற்றுள்ளது.

    கருவறைக்குள் தரிசனம் முடிந்தபிறகு வெளிப் பிராகாரச் சுற்றில் கணபதியையும் சண்டியையும் தரிசனம் செய்யலாம்.

    பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.

    • காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.
    • கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    தெய்வங்கள்கூட மிக்க வைராக்கியத்துடன், தாங்கள் நினைத்ததைச் சாதிக்கின்றனர்.

    ஊண், உணவு, உறக்கம் இழந்து, தவமாய் தவமிருந்து தாங்கள் அடைய வேண்டியதை அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இதற்கு உதாரணமாய்த் திகழும் தெய்வம் மாங்காடு காமாட்சி அம்மன்!

    காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.

    கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    நினைத்ததைச் சாதித்துப் பெற்றாள் இந்த அம்மன்.

    • அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.
    • மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    இதன் நடுவே பத்ரபீடத்தின் மீது பஞ்ச அக்னிகள் சுவாலையுடன் தோன்ற, நடுவே உள்ள சுடரின் பின்புறம் காமாட்சி

    ஒரு மா மரத்தின் முன்புறம் இடது காலை ஊன்றி வலது காலை மேல் தூக்கி வளைத்து ஒற்றைக்காலில் தவம் செய்யும் காட்சி செப்புத் திருமேனியாக காணப்படுகிறது.

    அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.

    வலது கை உத்திராட்ச மாலையை சின் முத்திரையில் பற்றிய நிலையில் உச்சித் தலைமீது காட்டப்பட்டுள்ளது.

    இடது கரம் மார்புக்குக் குறுக்கே தியான கரமாக நீண்டுள்ளது.

    கட்டை விரலும், சுட்டு விரலும் இணைந்து சின் முத்திரை காட்டும் நிலையிலும் ஞானக்கரங்களுடன் தவ நிலையில் தோன்றும் காமாட்சி ஆன உடையாளுடைய திருமேனிகள் காண்பதரிது.

    ஆனால் இங்கு காமாட்சியின் தவக்காட்சி பஞ்சலோகங்களில் வார்க்கப்பட்டு வனப்போடு காட்சியளிக்கிறது.

    அன்னை ஒற்றைக்காலில் நிற்கும் நிலை தியானத்தைச்சுட்டும் கரங்கள், அக்கமாலை ஏந்தி சின் முத்திரை காட்டும் கரம், முகப்பொலிவு, காமரூபினியாக காணப்படும்.

    கண்களின் கனிவு, யாவும் காண்போரை வியக்க வைக்கிறது. சமய வாதிகளைச் சிந்திக்க வைக்கிறது.

    பாமர மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

    ஆன்மீக வாதிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இச்செப்பு வடிவம் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

    ×