என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறப்பு முகாம்கள்"
- மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது
- வருகின்ற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது
கரூர்:
கிருஷ்ணராயபுரம் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் வரும் 20 வரை அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2, மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணராயபுரம் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் இன்று ( 16-ந் தேதி) கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நாளை (17-ந் தேதி) பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுதாதார நிலையத்திலும், நாளை மறுநாள் (18-ந் தேி) பழைய ஜெயங்கொண்டம் சமுதாயக் கூடத்திலும், வரும் 20-ந் தேதி பாப்பக்காப்பட்டி சமுதாய கூடத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்து கொண்டு மருத்துவச் சான்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ- 4 ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு உதவி உபகரணங்கள், கடனுதவி, திறன் பயிற்சி, பசுமை வீடு வழங்கும் திட்டம், பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பம் அளித்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
- மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள் நடைபெற்றது
- அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதாக அடையாள அட்டைபெறும் வகையில் குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதன்படி முதல் கட்டமாக அரியலூர் குறுவட்டத்துக்கு கலெக்டர் அலுவலக வளாகதில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று (10-ந்தேதி) குவாகம் குறுவட்டத்துக்கு வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 12-ந்தேதியும் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் எலும்புமுறிவு, காது, மூக்கு, தொண்டை, மனநலன், கண், குழந்தைகள் நலன் ஆகிய மருத்துவர்கள் பங்கறே்று மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழ் வழங்குவர். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மட்டும் தங்களது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5, ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்