search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத யாத்திரை"

    • ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர்.
    • குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயமாக திகழ்வது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடக்கும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    சபரிமலைக்கு வெகு தூரம் பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு குட்லு பகுதியை சேர்ந்தவர்கள் சனத்குமார் நாயக், சம்பத்குமார் ஷெட்டி. சனத்குமார் நாயக் புகைப்பட கலைஞராகவும், சம்பத்குமார் குஷன் தொழிலாளியாகவும் வேலை பார்க்கின்றனர்.

    ஐயப்ப பக்தர்களான இவர்கள் ஆண்டுதோறும் காசர்கோட்டில் இருந்து சபரிமலைக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்த முறை தங்களின் பாதயாத்திரை தூரத்தை அதிகரிக்க முடிவு செய்தனர். பத்ரிநாத்தில் இருந்து தங்களது பயணத்தை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் கேரளாவில் இருந்து பத்ரிநாத்துக்கு சென்றனர்.

    பின்பு அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுடி கட்டி பாதயாத்திரையை தொடங்கினார்கள். அங்கிருந்து நடைபயணமாக அயோத்திக்கு சென்றார்கள். அவர்கள் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்றபடி தங்களின் பாத யாத்திரையை தொடருகிறார்கள்.

    ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர். இரவில் ஏதாவது ஒரு கோவிலில் தங்கும் வகையில் பயண திட்டத்தை வகுத்து, அதன்படி பாத யாத்திரையை தொடர்கின்றனர். குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.

    அங்கிருந்து கேரளாவுக்கு பயணம் செய்கிறார்கள். மொத்தம் 7 மாதங்கள் நடைபயணத்தை தொடர உள்ளனர். மொத்தம் 8ஆயிரம் கிலோமீட்டரை கடந்து சபரிமலைக்கு வந்து சேருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக குட்லுவில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலையணிந்து விரதம் இருந்து வந்த நிலையில் சனத்குமார், சம்பத்குமார் ஆகிய இருவரும் தற்போது பாதயாதத்திரையை தொடங்கியிருக்கின்றனர்.

    • ஆக்ராவில் நடக்கும் ராகுல் காந்தி பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.
    • மார்ச் மாதம் முதல் வாரம் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேசத்துக்கு செல்ல உள்ளது.

    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த பாத யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மொரதாபாத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

    இருவரும் காரின் மேலே அமர்ந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பொதுமக்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தபடியும், கைகளை அசைத்தபடியும் சென்றனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் பலர் ஆர்வமுடன் கை குலுக்கினர். பாதயாத்திரையை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் சம்பல், அம்ரேகா, கத்ரஸ், அலிகர், ஆக்ரா, பதேப்பூர் சிக்கிரி மாவட்டங்களில் நடக்கும் பாத யாத்திரையிலும் பிரியங்கா கலந்துகொள்வார் என தெரிய வந்துள்ளது.

    ஆக்ராவில் நாளை நடக்கும் ராகுல் பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

    இதையடுத்து, மார்ச் முதல் வாரம் ராகுல் காந்தியின் யாத்திரை மத்திய பிரதேசத்துக்குச் செல்ல உள்ளது. அந்த யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் இரவில் மது அருந்தும் நபர்களுடன் நடனமாடுகிறது.
    • ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதியாத்திரையை நடத்தி வருகிறார். இதில் பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் விமர்சனம் செய்து வருகிறார்.

    தற்போது உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    அமேதியில் நடந்த யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறும் போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு சாலையில் கிடப்பதை பார்த்தேன். அங்கு இரவில் வாத்தியங்கள் முழங்குவதையும் மது அருந்திவிட்டு சாலையில் நடனமாடுவதையும் பார்த்தேன். உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் இரவில் மது அருந்தும் நபர்களுடன் நடனமாடுகிறது.

    மறுபுறம் ராமர் கோவிலில் பிரதமர் மோடியும், அம்பானியும், அதானியும் காணப்படுவார்கள். அங்கு நீங்கள் இந்தியாவின் அனைத்து கோடீஸ்வரர்களையும் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் நபரைக் கூட பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    ராகுல் காந்தி பேசிய இடத்தை கங்கை நீரால் பா.ஜனதாவினர் சுத்தப்படுத்தினர்.


    இது குறித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறும் போது, உத்தரபிரதேசத்தின் மீது ராகுல் காந்தியின் மனதில் எவ்வளவு விஷம் இருக்கிறது என்பதை அவரது கருத்து காட்டுகிறது. வயநாட்டில் உத்தரபிரதேச வாக்காளர்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். ராமர் கோவில் விழாவிற்கான அழைப்பை நிராகரித்தார். தற்போது வாரணாசி மற்றும் உத்தரபிரதேச இளைஞர்கள் குறித்து அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். காங்கிரசின் எதிர்காலம் இருளில் உள்ளது, ஆனால் உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. சோனியா காந்தி தனது மகனை நல்ல முறையில் வளர்க்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் அவரிடம் கருத்து எதுவும் கூற வேண்டாம் என்று அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

    ராகுல் காந்தி யாத்திரையை அசாம் முதல்-மந்திரியும் பா.ஜனதாவை சேர்ந்தவருமான ஹிமந்தா சர்மா விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுல் காந்தியின் யாத்திரை எங்கு சென்றாலும் அங்கு காங்கிரசுக்கு தோல்வியே கிடைக்கிறது. தற்போது உத்தரபிரதேசத்திற்கு சென்று இருக்கிறார்கள். அங்கு அகிலேஷ் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யாத்திரை செல்லும் இடமெல்லாம் காங்கிரசுக்கு சரிவு ஏற்படுகிறது.

    பிரதமர் மோடி என்ன செய்கிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். மோடி கட்டிய தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்தியும் பிரியங்காவும் ரோடு ஷோ நடத்துகிறார்கள். ராகுல் காந்தி, இந்த உலகில் பொய்யை தவிர எதுவும் கற்று கொள்ளவில்லை. அவர் பொய்யுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ஹிமர்தா சர்மா கூறினார்.

    • மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டு இருக்கிறார்கள்.
    • சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராகுல் வருகிற 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    லக்னோ:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். தற்போது அவரது நடைபயணம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து வருகிறது.

    இன்று (திங்கட்கிழமை) காலை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் ராகுல் நடைபயணம் சென்றார். அப்போது அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அவர் பேசுகையில், "மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுகிறது. அந்த பணம் பணக்காரர்களின் கைகளில் கொடுக்கப்படுகிறது" என்று பேசினார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராகுல் வருகிற 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். உத்தரபிரதேசத்தில் 22-ந் தேதி முதல் 26-ந்தேதி அவர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

    தற்போது உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் 21-ந்தேதியுடன் ராகுல் நடைபயணத்தை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    • 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
    • அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராமேசு வரத்தில் நடைபயணத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாத யாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வரும் அண்ணாமலை சட்டமன்ற தொகுதி வாரியாக தனது நடைபயணத்தை திட்டமிட்டு உள்ளார். இதன்படி 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

    திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமதி கேட்டு சென்னை மாநகர போலீசில் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் நடைபயணத்துக்கு அனுமதி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, நடை பயணம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி ஆராய்ந்தே முடிவு செய்வோம். இது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீசாரின் கருத்துக்களை கேட்டுள்ளோம். அதன் பிறகே நடைபயணத்துக்கு அனுமதி அளிக்கலாமா? என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் 11-ந் தேதி மாலையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு மடிப்பாக்கம், தி.நகர், கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் மேல் நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட் டிருந்தன. இவற்றில் ஏதா வது ஒரு இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பொதுக்கூட் டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

    அண்ணாமலையின் நடைபயணத்தை காலையில் நடத்திவிட்டு பொதுக்கூட்டத்தை மாலையில் நடத்த முடிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியினர் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • ராகுல் காந்தியின் பாத யாத்திரை தற்போது பீகாரில் நடைபெறுகிறது.
    • மகாத்மா காந்தி படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பாட்னா:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-ம் கட்டத்தை கடந்த 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.

    பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, அதன்பின் மேற்கு வங்காளத்திற்குள் நுழைந்தது. இதையடுத்து, தற்போது மேற்கு வங்காளத்தில் இருந்து பீகாருக்குள் நுழைந்துள்ளது.

    இந்நிலையில், பீகாரில் இன்று 2-வது நாளாக யாத்திரை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    பீகாரின் அராரியா பகுதியில் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப் படத்துக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடக்கும் பேரணியில் இன்று ராகுல் உரையாற்றுகிறார்.

    • ராகுல்காந்தி இன்று காலை பீகார் மாநிலம் கிஷன் கஞ்ச் பகுதியில் நடைபயணத்தில் ஈடுபட்டார்.
    • ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்புகின்றன.

    பாட்னா:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2-வது கட்ட பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவர் இன்று காலை பீகார் மாநிலம் கிஷன் கஞ்ச் பகுதியில் நடைபயணத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய கூட்டணி ஆட்சியில் பல்வேறு மதங்கள் மற்றும் ஜாதிகளை சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்புகின்றன.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    • முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
    • உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.

    இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.

    வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

    புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.

    • ஜனவரி 18-ந்தேதியன்று அசாமில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மாநிலத்தில் குறைந்தது 5 மாவட்டங்கள் வழியாக பயணிப்பார்.
    • இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக செல்லும்.

    கோஹிமா:

    மணிப்பூர் எல்லையில் உள்ள கோஹிமா மாவட்டத்தில் உள்ள குசாமா கிராமத்திற்கு ராகுல் காந்தி தனது கட்சி உறுப்பினர்களுடன் வருகை தந்தார். இந்த யாத்திரையை மணிப்பூர் மாநிலம் தவு பாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தனது பயணத்தின்போது, நாகா கோகோ உள்ளிட்ட நாகா பழங்குடி அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தேவாலய அமைப்புகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கிரிடி தியுனுவோ தெரிவித்தார்.

    ஜனவரி 18-ந்தேதியன்று அசாமில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மாநிலத்தில் குறைந்தது 5 மாவட்டங்கள் வழியாக பயணிப்பார். இன்று (செவ்வாய்க்கிழமை), விஸ்வேமா கிராமத்தில் இருந்து நாகாலாந்து யாத்திரையைத் தொடங்கும் அவர், தலைநகரை அடைந்ததும், இரண்டாம் உலகப்போர் கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்.

    இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக செல்லும். இது 6,713 கி.மீ தூரம், பெரும்பாலும் பஸ்களில் மட்டுமல்லாமல் நடந்தே பயணித்து, மார்ச் 20 அல்லது 21 அன்று மும்பையில் முடிவடையும்.

    • நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியும் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தப்பட்டது.
    • தொடக்க விழா நடக்கும் இடத்தை வேறு பகுதிக்கு காங்கிரஸ் மாற்றி உள்ளது.

    இம்பால்:

    காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார்.

    அதுபோல நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியும் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

    அதன்படி மணிப்பூரில் இருந்து மும்பை வரை ராகுல் நடைபயணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாளை ராகுல் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.

    மணிப்பூர் தலைநகா் இம்பாலில் அமைந்துள்ள ஹப்தா காங்ஜிபங் அரசு மைதானத்தில் நடைபயண தொடக்க விழாவை நடத்த காங்கிரஸ் சாா்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து இம்பால் கிழக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

    தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழுவதைத் தவிா்க்கும் வகையில் அரசு, மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளா்களுடன் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் தனது உத்தரவில் கூறி இருந்தார்.

    மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வசதியாக, நடைபயண தொடக்க நிகழ்வில் பங்கேற்கும் நபா்கள் அனைவரின் பெயா் மற்றும் கைப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே கலெக்டர் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்' என்றும் அவர் கூறி இருந்தார்.

    இந்த நிலையில், தொடக்க விழா நடக்கும் இடத்தை வேறு பகுதிக்கு காங்கிரஸ் மாற்றி உள்ளது. இது தொடர்பாக மணிப்பூா் மாநில காங்கிரஸ் தலைவா் கெய்ஷம் மேகசந்திரா கூறியதாவது:-

    நடைபயண தொடக்க விழாவை ஹப்தா காங்ஜிபங் அரசு மைதானத்தில் நடத்திக்கொள்ள அனுமதிக்கக்கோரி கடந்த 2-ந் தேதி அரசிடம் அனுமதி கடிதம் சமா்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, மாநில முதல்வா் பிரைன் சிங்கை கடந்த 10-ந் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

    இதன் காரணமாக, கடைசி நேரத்தில் இம்பாலி-லிருந்து 34 கி.மீ. தொலைவுக்கு அப்பால் கோங்ஜோம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் மைதானத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு தவுபால் போலீஸ் துணைக் கண்காணிப்பாளா் நேற்று முன்தினம் இரவு அனுமதி வழங்கினாா். நடைபயணத்தை காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜூன காா்கே கொடியசைத்துத் தொடங்கி வைப்பாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் யாத்திரைக்கான 'தொடக்க விழா நிகழ்விடம் மாறியபோதும், நடைபயண வழித்தடத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

    மணிப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும் நடைபயணம், 67 நாட்களில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாக 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மும்பையில் வருகிற மாா்ச் 20-ந் தேதி நிறைவடைய உள்ளது.

    • விவசாயி என்பதால் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க, பெண் வீட்டார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
    • தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாத யாத்திரை செல்வதாக வாலிபர்கள் கூறினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் வாலிபர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை. விவசாயி என்பதால் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க, பெண் வீட்டார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி, கோடஹள்ளி கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கிராமத்தில் இருந்து, 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாத யாத்திரை செல்வதாக கூறினர்.

    சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள், திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற நிலையில் தற்போது சாம்ராஜ்நகர் மாவட்டம் கோடஹள்ளி கிராமத்தில் இருந்தும் வாலிபர்கள் பாத யாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது.

    • பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    தென்காசி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் 2-ம் கட்ட பாதயாத்திரை தென்காசி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய நிலையில் கடையம் பகுதியில் பாதயாத்திரை முடித்துவிட்டு இரவில் தென்காசி கீழப்புலியூரில் இருந்து தென்காசி புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்ற பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தென்காசி ரெயில்வே மேம்பாலத்தில் பாத யாத்திரை சென்று கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டி க்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களின் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து ஒளிர விட்டவாறு உற்சாகமாக கையசைத்து பாதையாத்திரை மேற்கொண்டனர். இது அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

    ×