என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத யாத்திரை"

    • கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

    இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறி கொள்கிறேன்.

    நாடு தற்போது பொய் மற்றும் வஞ்சக அரசியலை பார்க்கிறது. பொய் அரசியலுக்கு எதிராக போராடுவோம். கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    காங்கிரசால் நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்பை மாற்ற இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் காங்கிரசின் சித்தாந்தம் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையில் உள்ளது. இது கடினமான நேரம் என்பது எனக்கு தெரியும்.

    உள்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தேர்தல் அதை நிரூபித்தது.

    ராகுல்காந்தி பாத யாத்திரை சிறப்பானது. இது நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ராகுல்காந்தி மக்களிடம் நேடியாக பேசுகிறார். பிளவுபடாத இந்தியாவை விரும்பும் மக்களை அவர் திரட்டுகிறார்.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    • ஒரு வீடியோவில் கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
    • தங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் புகார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த மாதம் 23-ம் தேதி தெலுங்கானாவை அடைந்தார். ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் நேற்றுடன் முடிந்தது.

    இதற்கிடையே, பாத யாத்திரையின் போது காங்கிரஸ் கட்சி கே.ஜி.எப்-2 படப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி வீடியோவாக தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது. இதுதொடர்பாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் தங்கள் அனுமதியின்றி படப் பாடலை பயன்படுத்தியதாக ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் 403, 565, 120 ஆகிய பிரிவுகளின் கீழும், 1957-ம் ஆண்டு காப்புரிமை சட்டம் 63ன் கீழும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில், காங்கிரஸ் கட்சி, பாரத் ஜோடோ யாத்திரை ஆகிய இரு டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    • மகாராஷ்டிராவில் 20-ம் தேதி வரை ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
    • 14 நாட்கள் யாத்திரையில் ராகுல் காந்தி 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானா சென்றார்.

    தெலுங்கானாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் அங்கு அவரது யாத்திரை நிறைவு பெற்றது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தது. இரவில் அவரது பாத யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    மகாராஷ்டிராவில் இன்று காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாத யாத்திரை தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை அவர் மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

    14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார்.

    மகாராஷ்டிராவில் 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதல் பொதுக்கூட்டம் வரும் 10-ம் தேதி நான்டெட் மாவட்டத்திலும், 2-வது பொதுக்கூட்டம் 18-ம் தேதி புல்தானா மாவட்டம் சென்காவ் பகுதியிலும் நடக்கிறது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் முடிந்த பிறகு ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்துக்கு 20-ம் தேதி செல்கிறது.

    • கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரையின் 62-வது நாளில் யாத்திரையின்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் கிருஷ்ணகுமார் பாண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கிருஷ்ண குமார் பாண்டே மராட்டிய மாநில காங்கிரசின் சேவா தள பொதுச்செயலாளர் ஆவார்.

    இந்நிலையில், கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கடைசி நிமிடம் வரை பாண்டே தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்தார் என ராகுல்காந்தி கூறினார்.

    மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி அசோக் சவானும் பாண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • பாஜகவின் இந்துத்துவா கொள்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என மராத்தி எழுத்தாளர் கருத்து.
    • சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமை அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல்

    அவுரங்காபாத்:

    காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை பயணம் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் அவரது பாத யாத்திரைக்கு 250 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அடங்கிய குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த குழுவை சேர்ந்த கணேஷ் தேவி, பிரதிபா ஷிண்டே மற்றும் லக்ஷ்மிகாந்த் தேஷ்முக் உள்ளிட்ட எழுத்தாளர்கள் குழு, கலம்நூரி பகுதியில், ராகுல்காந்தியை சந்தித்து கலந்துரையாடியது. மேலும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் வழங்கியது.

    இது குறித்து பேசிய மராத்தி எழுத்தாளர் லக்ஷ்மிகாந்த் தேஷ்முக், பாஜகவின் இந்துத்துவா கொள்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறினார். சில அரசியல் கட்சிகள் மென்மையான இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இந்த நாடு அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது என்பதால் பிற சமூகங்களை பற்றியும் காங்கிரஸ் பேச வேண்டும் என்று ராகுலிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

    மக்களின் முன்னேற்றம், கண்ணியம் மற்றும் மகிழ்ச்சிக்கு சுதந்திரம் இன்றியமையாதது என்றும், கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் சுதந்திரமான சூழலில் மட்டுமே மலரும் என்றும், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும் தேஷ்முக் கூறியுள்ளார்.

    • சமூக ஊடகங்களில் மட்டுமே பாத யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
    • அத்வானி யாத்திரை குறித்து தேசிய ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன.

    ஜாலாவர்:

    கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை, மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது: 


    தேசிய செய்தி ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால் முக்கிய தேசிய ஊடகங்கள் பாத யாத்திரை குறித்த செய்திகளை புறக்கணித்து விட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் கடமையை நிறைவேற்ற முழுமையாகத் தவறி விட்டன.

    வரலாறு அவர்களை மன்னிக்காது. நாடு முழுவதிலும் சமூக ஊடகங்களில் யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் இணைகிறார்கள். ஆனால் தேசிய ஊடகங்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. சமூக நோக்கத்திற்கும. அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1

    1990-ல் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி யாத்திரை சென்ற போது ஊடகங்கள் அதை பெரிய அளவில் செய்தியாக்கவில்லையா? நடந்ததைச் சொல்வது ஊடகங்களின் கடமை. ராகுல் காந்தி நேர்மறை சிந்தனையுடன் பயணம் செய்கிறார், இது நேர்மறை யாத்திரை, வன்முறை இல்லை, வெறுப்பு இல்லை. இந்த யாத்திரையை எடுத்து கூறி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்த யாத்திரையின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் நிச்சயமாகப் பரவும்
    • ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது.

    ஜெய்ப்பூர்

    வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது.

    நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை இன்று (வெள்ளிக்கிழமை) 100-வது நாளை எட்டுகிறது.

    இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

    ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்தில் ராகுல் காந்தி நேற்று நடத்திய பாதயாத்திரையில் மாநில தடகள வீராங்கனைகள் பலர் அவருடன் நடந்து சென்றனர்.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை 100-வது நாளை எட்டும் நிலையில், ஆதரவு, எதிர்ப்பு என கடந்த சில மாதங்களாக நாட்டில் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.

    ஒருபுறம் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாதுகாப்பு படை வல்லுனர்கள் என ஏராளமான பிரபலங்கள் இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல் காந்தியுடன் நடந்து சென்றும் வருகின்றனர்.

    மறுபுறம் ஆளும் பா.ஜனதா சார்பில் இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பும், குற்றச்சாட்டுகளும் அடிக்கடி எழுந்து வருகின்றன. ராகுல் காந்தியின் தோற்றம், உடைகள் மற்றும் யாத்திரையில் பங்கேற்போர் குறித்து பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை தெரிவிப்பதால் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

    ஆனால் இந்த சலசலப்புகளையும் தாண்டி இந்த யாத்திரையால் கட்சிக்கு நீண்டகால நன்மை விளையும் என கட்சியின் முன்னணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

    கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ஜா கூறும்போது, 'முதலில் இந்த யாத்திரை, ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது. பா.ஜனதா தனது பொய்யான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பயன்படுத்தி அவரை கேலி செய்ய முடியாது. இரண்டாவதாக இந்த வெகுஜன இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களுடன் நேரடியாக இணைந்துள்ளது' என கூறினார்.

    இந்த யாத்திரையின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் நிச்சயமாகப் பரவும் என்று குறிப்பிட்ட சஞ்சய் ஜா, காங்கிரசுக்கு ஊக்கமளிக்கும் அதன் தொண்டர்கள் மூலம் அணிதிரட்டலைத் தக்கவைத்துக் கொள்வதே இனி உள்ள முக்கியப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இந்த யாத்திரை கட்சிக்கு நம்பிக்கையின் ஒளியை அளித்துள்ளதாகவும், சாதாரண தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சய் பாண்டே, எனினும் அது தேர்தல் ஆதாயமாக மாறுமா? என்பதை காலம்தான் சொல்லும் என்றும் தெரிவித்தார்.

    காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் இந்த நோக்கம் நிறைவேறுமா? என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தல்களில் கட்சி பெறும் வெற்றியை பொறுத்து அமையும் என்றுஅரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    • யாத்திரையில் ராகுல் உள்பட தொண்டர்கள் தங்குவதற்கு 64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
    • மீண்டும் கொரோனா வெளிநாடுகளில் வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டார்.

    இந்த யாத்திரை 9 மாநிலங்களை கடந்து 108-வது நாளான நேற்று காலையில் டெல்லியை சென்றது. டெல்லி மாநில எல்லையான பதர்பூர் சென்றதும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து செங்கோட்டையை நோக்கி ராகுல் நடைபயணம் சென்றார். இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழிநெடுக ரோட்டின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றார்கள்.

    சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா உள்பட ராகுல் குடும்பத்தினரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பேரணியில் பங்கேற்றார்கள்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது கட்சியினர் 250 பேருடன் பேரணியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல், கார்கே, கமல் உள்ளிட்டோர் பேசினார்கள்.

    மீண்டும் கொரோனா வெளிநாடுகளில் வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பேரணியில் பங்கேற்றவர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை.

    சோனியா முகக்கவசம் அணிந்து இருந்தார். பிரமாண்ட கூட்டத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருசிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்து வந்தனர்.

    நேற்றைய நடைபயண நிறைவில் ராகுல் பேசும்போது, `2,800 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளேன். நாட்டில் எங்கேயும் நான் வன்முறையை பார்க்கவில்லை.

    இந்த பாதயாத்திரை இந்தியாவை இணைப்பதை தான் நோக்கமாக கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக வெறுப்பு, வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை தான் பரப்பும்' என்றார்.

    நடைபயணத்துக்கு 7 நாட்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மீண்டும் 1-ந்தேதி அவரவர் கண்டெய்னர்களில் வந்து ஆஜர் ஆக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த யாத்திரையில் ராகுல் உள்பட தொண்டர்கள் தங்குவதற்கு 64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது டெல்லியில் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. கண்டெய்னர்களில் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் குளிர் சாதன வசதிகளை அகற்றி விட்டு ஹீட்டர்கள் பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் அடுத்த சில நாட்களில் நிறைவடையும். அதன்பிறகு மீண்டும் பாதயாத்திரையை ராகுல் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

    • தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.
    • தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.

    சென்னை:

    ராகுல்காந்தியின் நடைபயணம் பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி இந்திய மக்களிடம் இருந்து விடை பெற்றுவிட்டது. இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல் இல்லாத கட்சிக்காக ஊர் ஊராக ராகுல் நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடைசியில் மிஞ்ச போவது ஏமாற்றமே.

    கன்னியாகுமரியில் தொடங்கி 9 மாநிலங்களை கடந்து விட்டதாக சொல்கிறார். அவர் சென்றதும் மக்களும் அவரை மறந்து விட்டார்கள்.

    அவர் நடைபயணம் சென்று கொண்டிருக்கும்போது தான் குஜராத்தில் தோல்வி, டெல்லியில் படுதோல்வி என்ற தகவலும் அவருக்கு சென்றது. அந்த நடைபயணத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்தால் வாக்களித்து வெற்றி பெற செய்து இருப்பார்கள்.

    புதிதாக தலைவராக பொறுப்பேற்ற கார்கே அடித்த 'டைமிங்' காமெடி தான். காங்கிரஸ் தலைவர்களின் உண்மையான முகத்தை காட்டியது. உலகமே மீண்டும் கொரோனா வருகிறதே என்ற பீதியில் இருக்கிறது. அதற்காக மத்திய அரசு எடுத்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கை டெல்லியில் ராகுல் நடைபயணத்தை முடக்க செய்யும் சதி வேலை என்கிறார்.

    இப்படித்தான் ஒவ்வொருவரும் ராகுலிடம் நல்ல பெயர் வாங்க அவரை சுற்றி இருந்து ஜால்ரா தட்டுவார்கள். கொரோனா கட்டுப்பாட்டையே அரசியலாக்கும் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. பாராளுமன்றத்துக்குள் செல்லவே முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதே? அதை ஏன் விமர்சிக்கவில்லை.

    மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நமக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம்தான். இதுதான் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. எனவே தமிழ் நாட்டிலும் இனி காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த செப்டம்பர் 7-ந்தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது.
    • ராகுல் காந்தியின் நடைபயணத்தை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த செப்டம்பர் 7-ந்தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா வழியாக டெல்லிக்கு நடைபயணம் சென்றார்.

    ஜனவரி 3 முதல் உத்தரபிரதேசத்தில் இருந்தும், 10-ந்தேதியில் பஞ்சாப்பில் இருந்தும், இறுதியாக காஷ்மீரில் இருந்து 20-ந்தேதியும் பாத யாத்திரையை தொடங்குகிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது.

    சத்திய மூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் இதில் கலந்து கொள்கிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக "அரசியலமைப்பை பாதுகாப்போம்' மற்றும் "கையோடு கை கோர்ப்போம்" ஆகிய மாபெரும் பிரசாரத்தை மக்களிடம் கொண்டு செல்வது சம்பந்தமாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    • ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை டெல்லியில் நடந்தபோது பாதுகாப்பு மீறல் நடந்து உள்ளது.
    • ராகுல் காந்தி பஞ்சாபில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை டெல்லியில் நடந்தபோது பாதுகாப்பு மீறல் நடந்து உள்ளது. டெல்லியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கவில்லை. அடுத்து ராகுல் காந்தி பஞ்சாபில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். பஞ்சாபில் அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி, காஷ்மீர் வரை இந்தியா ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார்.
    • பஞ்சாபில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்புகள் ராகுல் பாத யாத்திரைக்கு இடையூறு செய்வோம் என்று எச்சரித்துள்ளன.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி, காஷ்மீர் வரை இந்தியா ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். இன்று அவரது யாத்திரை உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. அடுத்து பஞ்சாப் மாநிலத்துக்கும் செல்ல உள்ளது.

    இதற்கிடையே பஞ்சாபில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்புகள் ராகுல் பாத யாத்திரைக்கு இடையூறு செய்வோம் என்று எச்சரித்துள்ளன. இதையடுத்து ராகுல் காந்தி யாத்திரைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ×