என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேசிய கொடி"
- 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
திருப்பூர் :
75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவைக் கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் பேசியதாவது:-
இந்தியா முழுவதும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். ஆகவே, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்