search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உர"

    • தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருக்கின்றனர்.
    • தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருக்கின்றனர்.

    இதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 1382 மெட்ரிக் டன், டி.ஏ.பி 937 மெட்ரிக் டன், பொட்டாஷ் 979 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 334 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4165 மெட்ரிக் டன், அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும். ரசாயன உரங்களின் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் விவரங்கள் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக மானிய விலை உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க அவர்களை கட்டயாயப்படுத்த கூடாது. "ஓ" படிவம் அனுமதி இன்றி உர விற்பனை செய்தல் கூடாது.

    உர விற்பனையாளர்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியலை உடன் வழங்கிட வேண்டும். உரக்கட்டுப்பாட்டு சட்ட விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை நிலையத்தின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×