என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 கைதிகள்"
- நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
- இதில் சேலம் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:
சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்த கைதிகள் 15 பேரை, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் சேலம் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். இதில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 41). வழிப்பறி வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனை பெற்று சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிய 7 மாதங்களுக்கு முன்பாகவே நேற்று விடுதலையானார்.
இதேபோல் வேலூர் மாவட்டம் லத்தேரியை சேர்ந்தவர் உசேன் முகமது (39). இவர் வழிப்பறி வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். நன்ன டத்தையால் ஓராண்டுக்கு முன்பாக, நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்