என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரைபிள் கிளப்"
- பயிற்சியினை சிறப்பாக மேற்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களாக மாணவ-மாணவிகள் திகழ வேண்டும்.
- பயிற்சி மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு சிறப்பாக அமையும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பில் மேலமெஞ்ஞானபுரத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பில் கோடை கால துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் பேசுகையில், கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக ஆக்கிட மாணவ-மாணவிகள் இப்பயிற்சியினை சிறப்பாக மேற்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களாக திகழ வேண்டும் என்றார்.
பின்னர் மாணவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியினை பார்வையிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார். பயிற்சியாளர் கூறுகையில், இந்த துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது துப்பாக்கி கையாளுதல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு விதிகள், வார்ம் அப், யோகா, மெடிடேஷன் ஆகியவை அளிக்கப்படு கின்றன. துப்பாக்கி சுடும் பயிற்சி மூலம் மாணவர்களுக்கு உடல்நலம், மன ஒருமைப்பாடு, சிந்தனை திறன் மேம்பாடு, தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, விடாமுயற்சி, பார்வை திறன் மற்றும் படிப்பில் மனது ஒருமைப்பாடு ஆகியவை சிறப்பாக அமையும் என கூறினார்.
நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் சக்தி மணிகண்டன், கார்த்திகேயன், டேலிஸ் மைதீன், பிச்சையா, சசி, செந்தமிழ்ச்செல்வன் மற்றும் கிளப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளப்பின் செயலாளர் ரஷீத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு தேசிய கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தென்காசி:
நெல்லை தென்காசி மெயின்ரோட்டில் மேலமெஞ்ஞானபுரம் அருகே அமைந்துள்ள தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பில் நடந்த விழாவில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பாக சான்றிதழ்களையும், பதக்கங்களையும் செயலாளர் ஜே எம். ரஷீத் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். மேலும் கிளப்பின் சார்பாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு தேசிய கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
செயலாளர் ஜே.எம்.ரஷீத் கூறுகையில் 9 வயது முதல் 90 வயது வரை இங்கு பயிற்சி எடுக்கலாம். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவர்களை உருவாக்கி வருகிறோம் என்று கூறினார். தற்பொழுது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருப்பதால் ஆர்வமுள்ள மாணவ மாணவிகளும், பெரியோர்களும் சேர்ந்து பயன் பெறலாம் என்றும் கூறினார்.
விழாவில் கிளப்பின் இலஞ்சி டி.ஆர். ராஜேந்திரன், உறுப்பினர்கள் பொதிகை சில்க்ஸ் மகுது மீரான், இலஞ்சி பிச்சையா, டேலிஸ் வாட்டர் முகைதீன், மணிகண்டன், ஜேசு ரூபன், சசிகுமார், வனத்துறை மாரியப்பன், இந்தியன் ரெயில்வே தங்க மாரியப்பன், வழக்கறிஞர்கள் சிவா மற்றும் மூர்த்தி, டாக்டர் ஹாஜா, ஜெயராஜ், செல்சிட்டி பாலு மற்றும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செயலாளர் ஜே.எம். ரஷீத் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்