என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹெல்மெட் பேரணி"
- நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கினார்.
- திருக்கோவிலூர் காவல் துறை, திருக்கோவிலூர் போக்குவரத்து துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கினார். தாசில்தார் குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங் களை முழங்கியவாறும் விழிப்புணர்வு பதாகை களை கையில் ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் திருக்கோவி லூர் இன்ஸ்பெக்டர் பாபு, மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இள வழகி, வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு உள்ளிட்ட வர்களும் கலந்து கொண்ட னர். முடிவில் திருக்கோவி லூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.
அதேபோல் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் இன்ஸ் பெக்டர் பாபு, போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் சத்யன், சப்-இன்ஸ் பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர். போதைப் பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பிலிருந்து நான்கு முனை சந்திப்பு, பஸ் நிலையம், ஏரிக்கரை மூலை மற்றும் தெற்கு தெரு வழியாக 5 முனை ரோடு வரை ஹெல்மெட் ஊர்வலம் நடைபெற்றது. அதில் திருக்கோவிலூர் காவல் துறை, திருக்கோவி லூர் போக்குவரத்து துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்