என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனித சங்கிலி"
- மருத்துவ காப்பீட்டு திட்டம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும்.
- போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அப்பாதுரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுகின்ற மருத்துவ காப்பீட்டு திட்டம் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த வேண்டும், நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் தஞ்சாவூரில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அதேபோல அனைத்து கட்சிகள் நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் திரளாக பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் சங்க நிர்வாகிகள் சக்திவேல், சுந்தரபாண்டியன், மாணிக்கம், ஓய்வு பெற்ற பொறியாளர் முருகையன், கண்காணிப்பாளர் வீராசாமி, பரிசோதகர் குணசேகரன், சுப்பிரமணியன், தங்கராசு, மனோகரன், கலியமூர்த்தி, இருதயராஜ், சித்ராசிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- வருகின்ற 11-ந் தேதி நடக்க உள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவானந்தம், கருணாநிதி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலக்குழு உறுப்பினரும், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளருமான சாமிநடராஜன், மத்திய, மாநிலக்குழு முடிவுகள் குறித்து விளக்க பேசினார்.
கூட்டத்தில் பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளார்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பது, கடந்த 8 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் இதில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 11ம்தேதி சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவது, வெற்றி பெற திரளாக பொதுமக்களை கலந்து கொள்ள செய்வது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணத்தால் மிகுந்த விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் கலையரசி, அகஸ்டின், ரெங்கநாதன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், டாக்டர் கருணாகரன், மகேஸ்வரி, சின்னப்பொண்ணு, ரெங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
வேலூர்:
தமிழகம் முழுவதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் வருகிற 11-ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது.
மனித சங்கிலி
வேலூர் மாவட்டத்திலும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் டீக்காராமன், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளங்கோ, சஜன் குமார், ம.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கோபி, பழனி மற்றும் காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் கப்பல் மணி, கணேஷ் தங்கமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் இருந்து திருப்பதி தேவஸ்தானம் வரை வருகிற 11-ந்தேதி மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முடிவு செய்தனர்.
- ராமநாதபுரத்தில் வருகிற 11-ந் தேதி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மனித சங்கிலி நடைபெறுகிறது.
- முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு தலைவரும், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன் பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசை கண்டித்து வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தை, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.முதுகுளத்தூரில் நடை பெறும் போராட்டம் எனது தலைமையிலும், ராமநாதபுரத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, கோபால் தலைமையிலும், பரமக்குடியில் பொறுப்புக் குழு உறுப்பினர் கோட்டை முத்து தலைமையிலும், தொண்டியில் பொறுப்புக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமையிலும், ராமேசுவரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரதிராஜன் தலைமையிலும் நடக்கிறது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
மறுநாள் (12-ந்தேதி) ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும். அதில் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
- அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் வரும் அக்டோபா் 2ந் தேதி 7 இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-
தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் காவல் துறையினா் விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழக மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், தமிழகத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக்கூடாது என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.
காந்தி ஜெயந்தி நாளான அக்டோபா் 2ந் தேதி 50 இடங்களில் ஆா்எஸ்எஸ். அணிவகுப்பு நடத்துவதாக அறிவித்துள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.
ஆகவே சங்பரிவாா்களின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படியில், திருப்பூா் மாவட்டத்தில், திருப்பூா் மாநகரம், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை மற்றும் பல்லடம் ஆகிய 7 இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்குமாறு பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசதந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்தப் போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
வன்முறைப் பின்னணி கொண்டவர்களுக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் வழி காட்டுதலை தந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த நிலையில் சமூக நல்லிணக்கத்தை சிதைக்க முயலும் சங்பரிவார்- சனாதன சக்திகளின் சூழ்ச்சியை கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த மனிதச் சங்கிலியில் அனைத்து தரப்பு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பை அ.தி.ம.மு.க. மனதார வரவேற்கிறது. மனிதச்சங்கிலியில் திரளாக பங்கேற்போம்.
மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை சமூக நல்லிணக்கம், சமூக அமைதி, தமிழக வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாத்திட இந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியில் தமிழகம் முழுவதும் அ.தி.ம.மு.க.வினர் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.
அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய மனுதர்ம வாதிகள் முயற்சிப்பதை முறியடிப்போம். மதவாதம் பேசுபவர்களிடம் இருந்து மக்கள் விலகி இருக்க அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு
- அமைச்சர் காந்தி பங்கேற்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் பள்ளிக்கல்வி துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழகம் போதை பழக்கத்திற்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், டி.எஸ்.பி பிரபு, நகர செயலாளர் பூங்காவனம், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், வினோத், குமார், ஜெய்சங்கீதா அசேன் உள்பட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்