என் மலர்
நீங்கள் தேடியது "உறுதி"
- நகர்மன்ற தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
- நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம்.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், திருத்துறைப்பூண்டி நகராட்சி இணைந்து தேசிய ஒற்றுமை தின பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம் என்றார்.
நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சிற்றரசு, நகராட்சி அலுவலர்கள், மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் திருலோகசந்தர், அலுவலர் கனகதுர்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- குமரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் தகவல்
- நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
நாகர்கோவில்:
குமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல விதை சில தரங்களை கொண்டது ஆகும். இனத்தூய்மை, புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வையே தரமான விதை யாகும். இந்த விதை தரங்கள் அனைத்தும் உடைய விதையே அதிக மகசூலுக்கு காரணி யாக அமையும். விதை யின் தரத்தினை அறியவே விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதிக அளவு முளைப்புத் திறனும் சரியான அளவு ஈரப்பதத்துடனும் காணப்படுவதே தரமான விதையாகும். இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விற்பனைக்கு வழங்கப்படுவதே சான்று செய்யப்பட்ட விதைகளாகும். எனவே சான்று செய்யப்பட்ட விதைகளை வாங்குவதன் மூலம் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் தங்களிடமுள்ள விதைகளை விதை பரிசோ தனை நிலையத்திற்கு அனுப்பி, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வற்றை உறுதி செய்வதன் மூலமும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தரம் உறுதி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாவட்டம் என்ற சூழலை உருவாக்குவேன் என பெரம்பலூர் புதிய எஸ்.பி. சியாமளாதேவி உறுதி அளித்துள்ளார்
- பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டாக பணியில் இருந்த மணி, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு துணை கமிஷன–ராக பணியாற்றி வந்த ச.ஷியா–மளா தேவி பெரம்ப–லூர் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டாக நியமிக்கப்பட் டார். இதையடுத்து பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பெரம்ப–லூர் மாவட்ட 6-வது பெண் போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப் பிடத்தக்கது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய–தாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பங்களை தடுத்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக–வும் பாதுகாப்பான மாவட் டம் என்ற சூழலை உரு–வாக்குவேன். சாலை விபத் துகள், போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்ட–மாகவும் மாற்றுவேன். ரவுடிகள், சமூக விரோ–திகளை ஒடுக்கப்பட்டு பொதுமக்கள் அமைதியாக வாழும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுப் பேன் என்றார். இதையடுத்து வாரந் தோறும் புதன்கிழ–மைக–ளில் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு மனு விசாரணை மற்றும் குறைதீர்க்கும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த போலீஸ் சூப்பி–ரண்டு ச.ஷியாமளா தேவி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெற்ற–தோடு, அவர்களிடம் குறை–களையும் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி புகார் மனுக்கள் அளிக்க வருகை தரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி பிரச்சி–னைகளை தீர்த்து வைக்கு–மாறும், அவர்களுக்கு குடிநீர், பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களை வழங்குமாறும் போலீசா–ருக்கு அறிவுரைகள் வழங்கி–னார்.
- பிரதமருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
- மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ்குமார் உள்பட 5 மீனவர்கள் சவுதி அரே பியா நாட்டின் கத்திப் என்ற பகுதியில் அரே பிய முதலாளிக்கு சொந் தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் சவுதி அரேபிய கடலுக் குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட் டனர். இதில் ராஜாக்கமங் கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தனது இடது கண் ணில் குண்டடிப்பட்டும், காது தொண்டை பகுதி யிலும் குண்டடிக்காயம் பட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வயர் லெஸ் மற்றும் மீனவர் கள் பிடித்து வைத்தி ருந்த மீன்களையும், மீனவர் கள் பயன்படுத்திக் கொண்டி ருந்த செல்போன் அனைத் தையும் ஈரான் கடற்கொள் ளையர்கள் கொள்ளைய டித்து சென் றுள்ளனர். இது சம்பந்த மாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பிரதம ருக்கும், இந்திய வெளியு றவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டுள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக குமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சவுதி அரேபிய கடலில் ஈரான் கடற்கொள்ளையர் சுட் டதில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்ற மீனவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். அவ ருக்கு அவர் பணி புரிந்த நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வெளிநாடுகளில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுப டுகின்ற மீனவர்கள் அச்ச மின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு உத்தரவா தம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுக ளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த சம்பவத் திற்கு முற்றுப்புள்ளி வைக் கும் விதத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைவர் செஹானஸ் ஆபிதா உறுதியளிக்கப்பட்டது.
- கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்டரங்கில் நகர சபை தலைவர் செஹானஸ் ஆபிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகரசபை துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் முன்னிலை வகித்த னர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 1 கோடி தகுதி வாய்ந்த குடும்ப தலைவி களுக்கு மாதந்தோ றும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்திதற்கு 2023-24-ம் ஆண்டில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி யதற்கு நகர்மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
14-வது வார்டு உறுப்பினர் முஹம்மது ஹாஜா சுகைபு:- புதிய பஸ் நிலையம் பின்புறமாக கழிப்பறைகள் சேதம் அடைந்துள்ளதால் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் அதை தவறாக பயன்படுத்துவதால் உடனடியாக கழிப்பறையை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
18-வது வார்டு உறுப்பினர் ஷக்கீனா :- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பேவர் பிளாக் கற்கள் போடப்பட்டு ஒரு இடத்திற்கு மட்டும் கற்கள் போடாததால் அந்தப்பகுதி மக்கள் என்னிடம் பலமுறை கேள்வி கேட்டு வருகின்றனர். நான் நகர் மன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை சரி செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ஆகையால் உடனடியாக கற்கள் போட்டு தர வேண்டும் என்றார்.
20-வது வார்டு உறுப்பி னர் சேக் உசைன்:- கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதி யில் முறையாக கால்வாயை சீர் செய்வதற்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
24-வது வார்டு உறுப்பினர் சித்திக் :- எங்கள் வார்டுக்குட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினைகள் அதிகம் காணப்படுவதால் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். வெளிப்பகுதியில் கால்வாய் நீரோட்டம் அதிகரித்து வருவதால் அதை சரி செய்வதற்கு எங்கள் பகுதியில் முறையாக குழாய்கள் அமைத்து தர வேண்டும் என்றார்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றி தரப்படும் என்று தலைவர் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி பொறியாளர் அருள், நகராட்சி அலுவ லர்கள் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
- மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். மின் கம்பம் மாற்றியமைக்க தாமதமாவதாக கூறியதையடுத்து மின்சாரத்துறை உதவி பொறியாளரை நேரில் அழைத்து உடனடியாக மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார். அதனைத் தொடர்ந்து பாலத்திற்கு வெள்ளை அடிக்கும் பணியை பார்வையிட்டார். ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் இந்த மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென சட்ட மன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.
எனவே பணிகளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக முடித்து கொடுக்க எம்.எல்.ஏ. ஆலோசனைகள் கூறினார். அதன்படி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மின்சாரத்துறை பொறி யாளர், நெடுஞ்சாலை துறை உதவிப்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.
- ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
- முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சு.கொளத் தூர், தேவபாண்ட லம், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட சிறுவங்கூர், உலகங்காத்தான், உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட எலவனசூர் கோட்டை, களமருதூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள், நெடுஞ்சா லைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாதாவது:-
தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இதேபோல் பெண்கள் கல்லூரி படிப்பை நல்லமுறையில் கற்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் கணக்கில் மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறார்.
மேலும், விவசாயிகள் நலன் காக்க இதுவரை ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் துயர் துடைத்துள்ளார். தொடர்ந்து நடப்பாண்டிலும் கிட்டத்திட்ட 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழஙகப்படும் என பட்ஜெட்டில் அறி வித்துளார். இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக மக்களைத் தேடி செய்து வருகிறார்கள். அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 631 கோரிக்கை மனுக்களும், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 866 மனுக்களும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 888 மனுக்களும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 385 மனுக்கள் பெறப்பட்டன. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். தீர்வு காணப்படாத மனுக்கள் தொடர்பாக மனுதாரர் களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படும் என கூறினார் முன்னதாக அமைச்சர் மாடாம்பூண்டியில் இருந்து மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை வரை செல்வதற்கான மகளிர் இலவச பஸ்சினையும், கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லும் புதிய பஸ்சினைனையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் கருனாநிதி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலை) பழனி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்திரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட ஆவின் சேர்மேன் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் செந்தில், ஒன்றிய குழு தலைவர்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டையில் நடந்த விழாவில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை தாசில்தார் ராஜ், மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சரவணன், உதவி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நந்தகோபால், நகர மன்ற கவுன்சிலர்கள் டேனியல் ராஜ் செல்வகுமார், ரமேஷ் பாபு, மாலதி ராமலிங்கம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..
- ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழப் போரில் சிங்கள அரசாங்கம், ராணுவத்தால் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 1.5 லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டனர்.
போரில் படுகொலை செய்ய ப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் எதிரில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசாங்கம், ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஈழப் போரின் போது காணாமல் போன சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் உள்ளிட்ட பல்லாயி ரக்கணக்கா னோரின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஈழத் தமிழர்கள் உரிமைகளை பெற்றிட துணை நிற்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாநகரத் துணைச் செயலாளர் முத்துக்குமரன், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற தலைவர் போராசிரியர் பாரி, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டத் தலைவர் சேவியர், ஆதித்தமிழர் இளைஞர் பேரவை பொறுப்பாளர்கள் பிரேம்குமார் நிவாஸ், சிவா மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கணபதி, சத்யா, வெண்ணிலா , கண்ணன், தங்கராசு, ரெஜினால்டு ரவீந்திரன், செல்வம், மனோகர், தாமரைச்செ ல்வன், கஸ்தூரி, கோதண்ட பாணி, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உறுதி அளித்தார்
- பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டராக ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காக வேளாண்மை, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், இருப்பிடம், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் ஆகியவைகளுக்கு முக்கியத்தும் வழங்கி, மக்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அனைத்தும், அனைவருக்கும் தங்குதடையின்றி தகுதியுடைய நபர்களுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.2005ம் ஆண்டு குருப்-1 தேர்வில் வெற்றி பெற்ற ஆனிமேரி ஸ்வர்ணா, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வருவாய் கோட்டாட்சியராகவும், கருர் மாவட்டம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் உறுப்பினர் செயலாளராகவும், டாஸ்கோ மற்றும் சிட்கோ பொதுமேலாளராகவும், பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
- விவசாயிகளின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்.
- கலெக்டர் ஆஷா அஜித் உறுதியளித்தார்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொ ருட்டும், வேளாண் தொழி லை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற் கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொ ள்ளும் பொருட்டும், மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மை துறை இணை இயக்குநர் தனபாலன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் முதல்நிலை அரசு அலுவ லர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
- மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பல் வேறு துறைகள் சார்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்கு டன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை பொதுப் பணித்துறை, வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர்கள் விஜயலெட்சுமி (பேரூராட்சிகள்), சாந்தி (கிராம ஊராட்சிகள்) உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வைகை வறண்டதால் திருநகரில் விநியோகம் பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி பொதுமக்கள் கடந்த பத்து நாள்களாக குடிநீன்றி அவதிபடுகின்ற–னர்.
சோழவந்தான் பகுதியை அடுத்த பன்னியான் சித்தை–யாபுரம் பகுதியில் வைகை ஆற்றில் 5 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், அமைதிசோலை நகர், நெல்லையப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இப்பகுதிகளில் தண்ணீர் வருவதில்லை என பொதுமக்களிடம் புகார் எழுந்துள்ளது. குடிநீர் இல் லாததால் இப்பகுதி பொது–மக்கள் தனியார் லாரிகளில் குடிநீர் குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள–னர்.
மேலும் புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிய–டைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாந–கராட்சி நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் வார்டு எண் 97, 98 மற்றும் 99-ல் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்கள் போதிய அளவு இல்லாததால், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், மாநகராட்சி தண்ணீர் வழங்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது சுழற்சி முறையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் என்ற மாநகராட்சியின் உறுதிமொழிக்கு மாறாக, ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகி–றது.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கி–றது. கடந்த இரண்டு மாதங்க–ளில், எஸ்.மேட்டுத்தெரு, பள்ளர் மேட்டுத்தெரு, சக்கி–லியர் மேட்டுத்தெரு, கூடல் மலைத்தெரு, படப்பை மேட் டுத்தெரு ஆகிய பகுதி–களில் குடிநீர் விநியோகம் என்பது வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக அப்பகு–தியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மாநகரில் நல்ல மழை பெய்தபோதிலும், நீரேற்று நிலையங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை–களாலும், தண்ணீர் வரத்து குறைந்ததாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்த மூன்று வார்டுக–ளுக்கும் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தாலும், இப்பகுதிகள் பலர் மாடி வீடுகளில் இருப் பதால் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை.
மேலும் பக்கத்து தெருக்க–ளில் உள்ளவர்களும், வயதா–னவர்களும் நடக்க முடியாத நிலையில் தண்ணீர் பிடிக்க அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மூலக்கரை அருகே உள்ள பம்பிங் ஸ்டேஷனில் 2 மின் மோட்டார்களில் ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் நீர் அழுத்தம் குறைந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் சுவிதாவிமல் கூறுகையில், வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகிப்பது தடை பட்டுள்ளது. தற்காலி–கமாக லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.
லாரிகள் செல்ல–முடியாத பகுதிகளில் சிறிய–ரக வாக–னங்களில் தன்னார் வலர் கள் மூலமும், எங்களது சொந்த செலவிலும் பொது–மக்களுக்கு குடிநீர் விநியோ–கம் செய்து வருகி–றோம். இதேபோல பொதுமக்கள் புழக்கத்திற்கு மாடக்குளம் மற்றும் மூலக்கரை பகுதியில் இருந்து தண்ணீர் விநியோ–கிக்கப்பட்டு வந்தது.
அப்பகு–தியில் இருந்து மின்மோட்டார்கள் பழுது ஆனதால் தண்ணீர் விநியோ–கிக்க முடியமல் போனது. மின் மோட்டார்கள் சரி–செய்யப்பட்டு இன்னும் ஓரிருநாள்களில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பரங்குன்றம் பகு–திக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி–களில் தண்ணீர் தேக்கி வைத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற் றாக்குறையை சமாளிக்க முடியும் என்றார்.
மாநகராட்சி உயர் அதி–காரி ஒருவர் கூறுகை–யில், மேற்கண்ட மூன்று வார்டுக–ளுக்கும் ஒரு நாளைக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும், அதிகப்படியான தண்ணீரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு வழங்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் குடிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்க–ளுக்கு மாற்று நாட்களில் திருநகரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். மூலக்கரை பம்பிங் ஸ்டே–ஷனில் உள்ள 60 ஹெச்பி மோட்டார் பம்ப் அடுத்த இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என்று தெரி–வித்தார்.