என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செல்லியம்மன் கோவில் திருவிழா"
- வீட்டு மாரியம்மனுக்கு கரகம் எடுத்தல், காளியம்மன் சுவாமிக்கு நீர் மற்றும் பால் குடம் எடுத்தல், சக்தி அழைத்து கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சுவாமிகள் குதிரை மீது அமர்ந்து அரூர் பெரிய ஏரியின் கரையில் எழுந்தருளியுள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்துக்கு ஊர்வலமாக சென்றது.
அரூர்,
அரூரில் காளியம்மன், சின்ன செல்லியம்மன் மற்றும் பெரிய செல்லியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
அரூரை அடுத்த பிச்சன்கொட்டாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன், சின்ன செல்லியம்மன் மற்றும் பெரிய செல்லியம்மன் கோவில் திருவிழா 11 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.
தொடர்ந்து, வீட்டு மாரியம்மனுக்கு கரகம் எடுத்தல், காளியம்மன் சுவாமிக்கு நீர் மற்றும் பால் குடம் எடுத்தல், சக்தி அழைத்து கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், வர்ணதீர்த்தம் வர்ணீஸ்வரர் கோவில் இருந்து சுவாமி வீதி உலா சென்று, அரூர் பெரிய ஏரியில் சின்ன செல்லியம்மன் மற்றும் பெரிய செல்லியம்மன் ஆகிய சுவாமிகள் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, சுவாமிகள் குதிரை மீது அமர்ந்து அரூர் பெரிய ஏரியின் கரையில் எழுந்தருளியுள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்துக்கு ஊர்வலமாக சென்றது.
இதையடுத்து, ஏரிகரை மீது பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆட்டு கிடா பலியிட்டும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
இந்த திருவிழாவில், கோவில் தர்மகர்த்தா செல்லன், விழாக்குழுத் தலைவர் மணி, செயலர் பழனி, பொருளர் சுப்பிரமணி, பூசாரி மனோகரன், நிர்வாகிகள் தனபால், பெருமாள், மூர்த்தி உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்