search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு கிரகப்பிரவேச நிகழ்ச்சி"

    • பழைய வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அசோக்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25), டிரைவர் . இவர் தீத்தாம்பாளையம் பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார் .நேற்று கிரகப்பிரவேசம் முடிந்த நிலையில் மதியம் அவர் குடியிருந்த பழைய வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அசோக்குமாரின் தம்பி சிரஞ்சீவி பழைய வீட்டிற்கு சென்ற போது அசோக்குமார் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அசோக்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அசோக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்துபோன அசோக்குமாருக்கு சுவாதி என்ற மனைவியும் 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×