என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லோடு ஆட்டோ"
- ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் படுகாயம்
- போலீசார் கார் ஓட்டி வந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
தக்கலை அருகே பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). ஆட்டோ டிரைவர்.நேற்று மாலை தக்கலை மேட்டுகடையில் உள்ள ஒரு மண்டபத்தில் பொருள்கள் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அழகிய மண்டபத்தில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வேகமாக ஒரு சொகுசு கார் வந்தது.
அந்த கார் நிறுத்தியிருத்த லோடு ஆட்டோ மீது மோதியது. மேலும் முன்னால் சென்ற 2 மோட்டார் சைக்கிள் மீது மோதி தக்கலை பஸ் நிலையம் அருகே ஒரு மின் கம்பத்தில் மோதி நின்றது.
இதனால் லோடு ஆட்டோவில் இருந்த பத்மனாபபுரம் பகுதியை சேர்ந்த மணி (70), காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மாகின் வயது (42), மோட்டார் சைக்கிளில் வந்த தக்கலை ராமன்பறம்பை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் காயமடைந்தனர் .
காயமடைந்த 3 பேரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
இது சம்பந்தமான ஆட்டோ டிரைவர் நாக ராஜன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் சொகுசு கார் ஓட்டி வந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அஸ்வத் பெஞ்சமின் (37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்