என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராஜகோபுரம்"
- ராஜ கோபுரத்தின் அஸ்திவார பகுதி நில அளவீடு செய்து முதல் கட்ட பூர்வாங்க பணி தொடங்கப்பட்டது.
- ராஜகோபுரத்துக்கான கல்காரத்தின் ஸ்திரத் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜ கோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. எனவே இந்த கோவிலுக்கு மிக பிரம்மாண்டமான வகை யில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நின்று போன ராஜ கோபுரத்தின் அஸ்திவார பகுதி நில அளவீடு செய்து முதல் கட்ட பூர்வாங்க பணி தொடங்கப்பட்டது. அங்கு வளர்ந்திருந்த மரங்கள் வெட்டிஅகற்றப்பட்டன. ராஜகோபுரத்துக்கான கல்காரத்தின் ஸ்திரத் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே மிக உயரமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டிய சிவப்பிரகாசம் ஸ்தபதியின் மகனும் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதியுமான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் ஸ்தபதி, இந்து அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி செந்தில் ஸ்தபதி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு இந்த ஆய்வு பணி களை மேற்கொண்ட னர். இந்த ஆய்வின் போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது
- பிரபா ராம கிருஷ்ணன் சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானஉள்நாட் டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டுசெல் கிறார்கள்.
இந்தகோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி அஸ்திவாரத்தோடு நின்று போய் விட்டது. ராஜகோபுரம் கட்டுமான பணி நின்று போய் பல நூற்றாண்டுகளை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
எனவே இந்த கோவிலுக்குமிகப் பிரம்மாண்டமானவகையில் ராஜகோபுரம் கட்டவேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்கான முயற்சிகள் பல கட்டமாக எடுக்கப்பட்டு கடைசியில் தோல்வியில் முடிந்ததுஉள்ளது.
கடைசியாக கடந்தசிலஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாசல் மற்றும் கோவிலின் கிழக்குப் பக்கம் கடற்கரையையொட்டி அமைந்துள்ள கிழக்கு வாசல் ஆகிய இடங்களில் இரட்டை ராஜகோபுரம் கட்டுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அந்த இரட்டைராஜகோபுரம் கட்டும் பணியும் முதல்கட்ட ஆய்வோடு கிடப்பில் போடப்பட்டது.
இந்தநிலையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் தி.மு.க.அரசு பொறுப் பேற்ற பிறகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற் கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இது சம்பந்தமாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்கட்டநடவடிக் கை மேற்கொள்ளும்படி அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் பயனாக குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறிவுரையின் பேரில் நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை ஸ்தபதி செந்தில், குமரிமாவட்ட திருக்கோவில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், அறநிலையத்துறை சர்வேயர் அய்யப்பன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவது தொடர்பாக ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நின்று போன ராஜகோபுரத்தின் அஸ்திவார பகுதியை நிலஅளவீடு செய்து முதல் கட்டபூர்வாங்க பணியை தொடங்கினர்.
இந்த புதிய ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்தில் அமைய உள்ளது.
- அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது.
- அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
அவினாசி, ஆக.2-
அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது. இங்கு ஸ்ரீ கருணாம்பிகை உடனமர்அவினாசி லிங்கேசஸ்வரர் அமைந்து ள்ளார். இக்கோவில் கும்பாபி ஷேகம் நடத்துவதற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதி விமானங்களுக்கு ஹோமம் நடத்தி பாலாலயம் செய்யப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர். அதன்படி நாளை 4ந்தேதி காலை 9 மணியளவில் சிறப்பு வழிபாடு, ஹோமம் மற்றும் பாலாலயம் நடைபெற உள்ளது.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தகவல்
- கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட அறங்கா வலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் பகவதி அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதன்பிறகு கோவிலை ஆய்வு செய்த அவர், கோவிலில் நடைபெறும் அன்னதான திட்டம் எப்படி நடைபெறுகிறது என்று நேரில் பார்வையிட்டார். அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை சாப்பிட்டு ருசித்துப் பார்த்தார்.
ஆய்வு முடிந்த பிறகு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் வலியுறுத்துவேன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 10ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இதுபற்றி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்திக்கும் போது வலியுறுத்துவேன். பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கண்டிப்பாக தேவையான ஒன்று. இது தொடர்பாகவும் பேசி ராஜகோபுரம் கட்ட ஏற்பாடு செய்வேன்.
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு கீழ் உள்ள முக்கியமான கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் யானை பயன்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது தேவசம் போர்டு நிர்வாகத்துக்கு சொந்தமான யானை இல்லாததால் வாடகைக்கு யானை அமர்த்தி திருவிழா காலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் அறநிலை யத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமாக யானை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் அமர்ந்து இளைப்பாருவதற்கு வசதியாக திருச்செந்தூர் கோவிலில் இருப்பது போல சுற்றுப்பிரகார மண்டபம் கட்டுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சேதம் அடைந்த தேர்கள் மற்றும் வாகனங்களை சீரமைப்ப தற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி அடுத்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது.
- நவதானியங்களை கோபுர கலசத்தில் இட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர்க்கு, உமையம்மை ஞானபால் வழங்கிய இத்தலத்தில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கோவிலில் உள்ள நான்கு கோபுரங்கள், பிரகாரங்கள், அனைத்து சுவாமி சன்னதிகள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டும் கருங்கல் சன்னதி மற்றும் கருங்கல் பிரகாரம் அமைக்கப்பட்டும் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிறது.
இக்கோவிலில் உள்ள ருணம் தீர்த்த விநாயகர் விமானத்தில் தர்மபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருகரத்தால் கோபுர கலசம் வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது. முன்னதாக கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டு கிழக்கு ராஜகோபுர திருப்பணி உபயதாரர் மார்கோனி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்தர்கள் நவதானியங்க ள்கோபுர கலசத்தில் இட்டு கலசத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் கோபுர கலசங்கள் கிழக்கு ராஜகோபுரத்தில் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
- இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.
இக்கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின், திருப்பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
- கோவில் உற்சவா் மண்டபத்தில் உள்ள உற்சவா்கள் பாதுகாப்பு அறையில் வைத்தனா்.
- இத்திருப்பணி மாா்ச் 24-ந் தேதி தொடங்கப்படவுள்ளது.
அவினாசி :
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரா் பதிகம் பாடி உயிருடன் மீட்டெடுத்த தலமாகவும் கருணாம்பிகை யம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் விளங்குகிறது.
இக்கோவிலில் திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, கருணாம்பிகையம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணிக்காக பாலாலய சிறப்பு பூஜை நேற்று இரவு நடைபெற்றது.
இதில் சா்வசாதகா் சிவகுமாா் சிவாச்சாரியாா் தலைமையிலானோா், தெய்வங்களின் சக்திகளை கும்ப கலசங்களில் கலாஹா்ஷணம் செய்து கண்ணாடியில் ஆவாஹணம் செய்து நித்யபடி பூஜைக்காக கோவில் உற்சவா் மண்டபத்தில் உள்ள உற்சவா்கள் பாதுகாப்பு அறையில் வைத்தனா்.இத்திருப்பணி மாா்ச் 24-ந் தேதி தொடங்கப்பட வுள்ளது.பாலாலய சிறப்பு பூஜையில் கோவில் செயல் அலுவலா் பெரியமருதுபா ண்டியன், ஆய்வாளா் செல்வபிரியா, அவிநாசி வாகிசா் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்
- சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- கோவிலில் உள்ள ராஜகோபுரம், விமானங்கள், திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலயப் பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது.
சங்கரன்கோவில்:
தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் முடிந்தும் கும்பாபிஷேகம் நடைபெறாததால் திருப்பணி வேலைகளை விரைவில் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஆன்மீக அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கோவிலில் உள்ள ராஜகோபுரம், விமானங்கள், திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலயப் பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது.யாகசாலை அமைக்கப்பட்டு பூர்ணாஹூதி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், ரஷாபந்தம், கும்பஅலங்காரம், ராஜகோபுரம், விமானங்கள், கலாகர்ச்சணம், மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலையில் பூஜைகள் மீண்டும் தொடங்கியது.
யாக சாலையில் மரத்தி–லான ராஜகோபுரம் மாதிரி வடிவத்திற்கு பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 11 கலசங்கள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கும்ப நீர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பாலாலய பூஜைகள் அனைத்தும் அதிகாலை 5.40 மணிக்குள் முடிவுற்றது. இதில் ராஜா எம்.எல்.ஏ., கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்