search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவோயிஸ்டு தீவிரவாதி"

    • மஹாராஷ்டிரா போலீசார் தர்மபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வனை சந்தித்தனர்.
    • செல்போன் டவர் மூலம் மாவோயிஸ்டு இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

    திருப்பூர் :

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் சிவக்குமார், மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் இருளப்பட்டி தேர் திருவிழாவுக்கு திருப்பூரில் இருக்கும் தன் சித்தி மகள் அஞ்சலியை அழைத்திருந்தார். இதையடுத்து அவர் கணவர் சீனிவாச முல்லாகெவுடு(வயது23) மற்றும் தன் இரு குழந்தைகளுடன் பாப்பம்பாடி சென்றார்.

    இந்நிலையில் கடந்த 19-ந்தேதி நள்ளிரவில் மஹாராஷ்டிரா போலீசார் தர்மபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வனை சந்தித்தனர். அப்போது, மஹாராஷ்டிராவில் இருந்து தப்பித்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் பாப்பம்பாடியில் பதுங்கியிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி போலீசார், செல்போன் டவர் மூலம் சிவக்குமார் வீட்டில் மாவோயிஸ்டு இருப்பதை உறுதிப்படுத்தினர்.அங்கு சென்ற போலீசார் மாவோயிஸ்டு சீனிவாச முல்லாகெவுடுவை கைது செய்தனர்.

    மஹாராஷ்டிரா மாநிலம், களிரோலி மாவட்டம், தாமராஜா அடுத்த பங்காரப்பேட்டையை சேர்ந்த முல்லா என்பவரின் மகன் சீனிவாச முல்லாகெவுடு என்பதும், தாமராஜா போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரியில் அவர் மீது மாவோயிஸ்டுகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தது, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர், தன் மனைவி அஞ்சலி, மற்றும் குழந்தைகளுடன் தமிழகத்திற்கு தப்பி வந்து திருப்பூரில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.5 மாதமாக அவர் திருப்பூர் முதலிபாளையத்தில் குடியிருந்து வந்துள்ளார்.

    திருப்பூரில் தொழிலாளர் போர்வையில் ஏற்கனவே பதுங்கியிருந்த மாவோயிஸ்டு தம்பதி, தீவிரவாதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தினரையும் கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் 5 மாதமாக மாவோயிஸ்டு தீவிரவாதி பதுங்கியிருந்தது திருப்பூர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வெளி மாநில தொழிலாளர்கள் விவரங்களை சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×