என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி"
- 100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தடகள பயிற்சி பெற்று வருகிறார்கள்.
- மாநில ஜூனியர் ஓபன் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் நடந்தது.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி, திருநீலகண்டர் வீதியில் செயல்பட்டு வரும் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது. இதில்100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தடகள பயிற்சி பெற்று வருகிறார்கள். இதன்மூலம் இவர்கள் மாவட்ட மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக தடகள சங்கம் சார்பில் 35 -வது மாநில ஜூனியர் ஓபன் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் நடந்தது. இதில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் பாரதி தலைமையில் 23 பேர் கலந்து கொண்டனர். இதில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவி சவுமியா 3000 மற்றும் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் இவர் தென்னிந்திய அளவிலான தடகள போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவி சவுமியாவுக்கு சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் டாக்டர் எஸ் .சுந்தரன், செயலாளர் கார்த்திகை சுந்தரன், பொருளாளர் செங்கோடன் ,பயிற்சியாளர் பாரதி மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்