என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "7-ம் வகுப்பு"
- போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை
- குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இங்கு அஞ்சு கிராமம் புது குடியிருப்பை சேர்ந்த ஆம்ஸ் நல்லதம்பி (வயது 45) என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் ஆம்ஸ்நல்லத்தம்பி 7-ம் வகுப்பு மாணவியிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த மாணவி சக ஆசிரியையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வகுப்பறையில் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது.
இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஆம்ஸ் நல்லதம்பி மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் ஆசிரியர் சில்மிசத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு உள்ள செங்கல் சூளை ஒன்றில் பெண் ஒருவர் குளிப்பதை வாலிபர் ஒருவர் எட்டிப் பார்த்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் செங்கல்சூலை உரிமையாளரிடம் நடந்த தகவலை கூறியுள்ளார். செங்கல்சூளை உரிமையாளர் இது குறித்துஅந்த வாலிபரிடம் தட்டி கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த வாலிபரை செங்கல் சூளை உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் செங்கல்சூளை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்