என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலை விதி"
- 7 வாகனங்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் எச்சரிக்கை
- ஆட்டோக்களில் அதிகளவு ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகரில் அனுமதி இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படு வதாகவும். ஆட்டோக்களில் அதிகளவு ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு நடத்தி, விதிகளை பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் காளியப்பன் மேற்பார்வையில், திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் குழுவினர் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிக அளவு ஆட்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்களையும், அனுமதி, உரிமம் மற்றும் பர்மிட் இல்லாமல் இயங்கி வந்த 4 சரக்கு வாகனங்கள் என மொத்தம் 7 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூரில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும்நடவடிக்கை எடுப்பதுடன், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- போக்குவரத்து மாற்றி விடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு, வடசேரி பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது
- ஒரு வழி பாதையில் வந்த 50 ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.600 அபராதம் விதித்தனர்
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகரில் பிரதான சாலையாக கருதப் படும் வேப்பமூடு-டதி பள்ளி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரு கிறது.
இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றி விடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு, வடசேரி பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்க போக்குவரத்து போலீ சார் பல்வேறு அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் வாகன ஓட்டிகள் மீனாட்சிபுரம் சாலை, வேப்பமூடு பகுதி களில் ஒரு வழிச்சாலையில் அத்துமீறி சென்று வரு கிறார்கள். ஒரு வழி பாதை யில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.
போக்குவரத்து இன்ஸ் பெக்டர் அருண் தலைமை யிலான போலீசார் வேப்பமூடு, மணிமேடை, செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார் பகுதி களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு வழி பாதையில் வந்த 50 ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.600 அபரா தம் விதித்தனர். இன்று காலையில் அபராதம் விதிக் கும் பணியில் போக்கு வரத்து போலீசார் ஈடுபட்ட னர்.
வேப்பமூடு பகுதியில் நடந்த சோதனையின் போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேர்கள் வந்தவர்களும் சிக்கினார்கள். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்கள் பலரும் இந்த சோதனையில் சிக்கி தவித்தனர். அவர்க ளுக்கும் அபராதம் விதிக்கப் பட்டது. இதே போல் மாவட்டம் முழுவதும் சாலை விதிகளை கடைபிடிக்காத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்