search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் அருவிகள்"

    • குற்றாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் சுற்றுலா பயணிகள் குண்டாறு அணைக்கு வந்துவிடுவார்கள்.
    • சில வாலிபர்கள் நடந்து சென்ற பெண்கள் மீது மோதுவதுபோல் காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே குண்டாறு அணைக்கட்டு உள்ளது. மாவட்டத்தில் மிகச்சிறிய, 36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது பருவமழை தொடங்கி நன்றாக பெய்தால், சில நாட்களிலேயே நிரம்பி வழியும்.

    சீசன் காலங்களில் குற்றாலத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்கு தண்ணீர் குறைவாக விழுந்தாலோ அல்லது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாலோ குண்டாறு அணைக்கு வந்துவிடுவார்கள். அவ்வாறு வருபவர்கள் குண்டாறு அணையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு விழும் நெய் அருவியில் குளித்து மகிழ்வார்கள்.

    இந்தநிலையில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க சென்றனர். அப்போது சில வாலிபர்கள் நடந்து சென்ற பெண்கள் மீது மோதுவதுபோல் காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

    மேலும் குளிக்க சென்ற இடத்திலும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 2 தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அவர்கள் தாக்கிக்கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை அறிந்த செங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இந்த பகுதியில் தனியார் அருவிகள் ஏராளமானவை உள்ளன. அங்கு சென்று குளிக்க, குண்டாறு அணை பகுதியில் இருந்து இயக்கப்படும் தனியார் ஜீப்களில் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் கூறுகின்றனர். மேலும் மோதல்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே பாதுகாப்புக்கு போலீசாரை நியமிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீரோடைகளில் அணை கட்டி அதை நீர்வீழ்ச்சிகளாக கட்டண அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்தனர்.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணி தொடங்கியது.

    கடையநல்லூர்:

    செங்கோட்டை தாலுகாவில் உள்ள மேக்கரை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகளில் அணை கட்டி அதை நீர்வீழ்ச்சிகளாக கட்டண அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்தனர்.

    இதனால் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நீர் மாசடைந்து காணப்படு வதாக விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நீரோடைகளை மறித்து கட்டப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து, கடந்த 1-ந் தேதியில் இருந்து பல கட்டங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த பணியில் அதிகாரிகள் பாரபட்சம். காட்டுவதாகவும், கடந்த 2 தினங்களாக எந்த பணியும் நடைபெறாமல் இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக சில முக்கிய பிரமுகர்களின் அழுத்தத்தின் காரணமாக அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணி சிவகிரி மற்றும் செங்கோட்டை தாசில்தார்கள் முன்னி லையில் தொடங்கியது.

    பாதுகாப்பு பணியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட 35 நீர்வீழ்ச்சிகளில் இதுவரை 25 நீர்வீழ்ச்சிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று திடீரென கலெக்டர் ஆகாஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்.

    அப்போது கலெக்டர் பாரபட்சம் இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்பு நீர்வீழ்ச்சிகளையும் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    ×