என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆறுக்குட்டி"
- கடந்த 24-ந் தேதி பொள்ளாச்சியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆறுக்குட்டி தி.மு.க.வில் இணைந்தார்.
- துடியலூரை சேர்ந்த நாகராஜ் என்ற அ.தி.மு.க. தொண்டர் தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை:
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுக்குட்டி.
இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்து வந்தார்.
மேலும் இவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு சென்று ஜமாப் அடித்து நடனம் ஆடுவார்.
அவருக்கு கவுண்டம்பாளையம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2 முறை போட்டியிட்ட ஆறுக்குட்டி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் குழப்பம் ஏற்பட்ட போது ஓ.பி.எஸ். அணிக்கு தாவினார். அதன் பின்னர் வந்த சட்டமன்ற தேர்தலில் ஆறுக்குட்டிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலாவுக்கு ஆதரவாளராக மாறினார்.
இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி பொள்ளாச்சியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆறுக்குட்டி தி.மு.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில் துடியலூரை சேர்ந்த நாகராஜ் என்ற அ.தி.மு.க. தொண்டர் தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அ.தி.மு.க. தொண்டர் நாகராஜ்: அண்ணா வணக்கம்னா...
ஆறுக்குட்டி: வணக்கம் யாருங்க..
நாகராஜ்: நான் துடியலூர் நாகராஜ் பேசுறங்க.. துடியலூர் பகுதிங்க..
ஆறுக்குட்டி: சொல்லுங்க..
நாகராஜ்: அண்ணா ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க..
நாகராஜ்: உங்களுக்காக விடிய, விடிய பாடுபட்டோம்ல.... இந்தமாதிரி பண்ணி போட்டீங்களே.. நயவஞ்சகம் பண்ணிட்டீங்கண்ணா.. உங்க சூழ்நிலை எப்படினு எனக்கு தெரியாது. ஆனா நீங்க பண்ணுனது தப்புங்க...
நாகராஜ்: நீங்க டேய் அத பண்ணுங்க, இதை பண்ணுங்க என சொல்லும் போது உரிமைக்கு கட்டுப்பட்டு வேலை செய்தோம்ல...
ஆறுக்குட்டி: இதுவரைக்கும் டேய்னு கூப்பிட்டு இருப்பனா.....
நாகராஜ்: இல்லீங்க.. உங்களுக்காக நாங்க உயிரே கொடுத்து பாடுபட்டோம்ல அண்ணா... நல்லா யோசிங்க அண்ணா.. நீங்க பேசாம இருந்து இருந்தால் நாங்க என்ன வேணுமானாலும் பண்ணிருப்போம்ல.
உங்களுக்காக உயிர் கொடுத்தது தொண்டர்கள் தான்.... அம்மா 2 தடவ எம்.எல்.ஏ. பதவி கொடுத்து அழகு பாத்துச்சுல அண்ணா....
ஆறுக்குட்டி: எனக்கு துரோகம் பண்ணுனா ஏத்துக்கணுமா......
நாகராஜ்: தொண்டர் கிட்ட நீங்க குமுறி இருக்கணும்ல அண்ணா.... நீங்க எங்க யாரையாவது தொடர்பு கொண்டீங்களா நீங்களே ஒரு முடிவு எடுத்து செய்துடீங்களே....
ஆறுக்குட்டி: டேய் நீ யாரு... நீ யாருனு கேட்கிறேன் நானு....
நாகராஜ்: அண்ணா நான் உங்களுக்காக பாடுபட்டவண்ணா...
ஆறுக்குட்டி: பாடுபட்டவண்ணா நேருல வா..... 2 பேரும் பேசிக்கலாம். போன்ல பேசாத நல்லா இருக்காது.
நாகராஜ்: அண்ணா நீங்க உரிமையா....
ஆறுக்குட்டி: நா என்னா கேட்கிறேன் இங்க பாரு.. நேருல வந்து பேசு....
நாகராஜ்: நேருல வந்து பேசவா அண்ணா, ஆனா அண்ணா நீங்க பண்ணுனது தப்புண்ணா....
ஆறுக்குட்டி: நேருலவான்னு சொல்லிட்டனுல....
நாகராஜ்: நயவஞ்சகம் அம்மாக்கு நயவஞ்சகம் பண்ணீட்டீங்கண்ணா.. நான் சொல்லுற ஓரே வார்த்த அதான்..
நாகராஜ்: டேய்னு பேசக்கூடாதுங்க.. ஒருமையில் பேசினால் ஒத்துக்கமாட்டன் நானு.....
ஆறுக்குட்டி: எடப்பாடி சசிகலாவுக்கு துரோகம் பண்ணுனாரு, அவர போயி பாரு..
நாகராஜ்: ஏண்ணா சசிகலாவுக்கு நீங்களும் தான துரோகம் பன்னுணீங்க..
நாகராஜ்: நீங்க.. அப்புறம் எதுக்கு ஓ.பி.எஸ். கிட்ட வந்தீங்க..
ஆறுக்குட்டி: நா எதுக்குடா... டேய்... போன வைடா....
நாகராஜ்: அண்ணா வாடா போடானு பேசாதீங்கண்ணா...
என பேசிக்கொண்டு இருக்கும் போதே செல்போன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்