search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐம்பெரும் விழா"

    • சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா உள்பட ஐம்பெரும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    கம்பத்தில் நண்பர்கள் சமூக இலக்கிய பேரவை மற்றும் சீர் மரபினர் நலச்சங்கம் இணைந்து நடத்திய கம்பத்தின் முதல் நகரத் தலைவர் ராமசாமி நூற்றாண்டு விழா, பேராசிரியர் புதியவனின் நூல் வெளியீட்டு விழா, சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேராசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சமூக இலக்கிய பேரவை செயலாளர் சேகர் வரவேற்றார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உரையாற்றினார். கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் நகர தி.மு.க. செயலாளர் வீரபாண்டியன், ராயப்பன்பட்டி எஸ்.யு.எம் பள்ளி தாளாளர் பிரபாகர், கம்பம் ஜமாத் கமிட்டி தலைவர் ஜெயினுலாபுதீன், கம்பம் தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ், கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ராஜாங்கம், த.மு.எ.க.ச. மாநில குழு சிவாஜி, வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம் பாவெல் பாரதி, தொழிலதிபர் அன்பழகன், கவிஞர் பாரதன் உட்பட பலர் பேசினர்.

    தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா நூல் வெளியிட ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஓய்வு பெற்ற எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி உதவி பேராசிரியர் முகமது ரபிக் என்ற மானசிகன் நூலை அறிமுகம் செய்து பேசினார். கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா நடக்கிறது.
    • ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் 100 பேர் பங்கேற்கின்றனர்.

    கீழக்கரை

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாள ருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 2004-ல் தொகுப்பூதியத்தில் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்பட்ட 53 ஆயிரம் ஆசிரியர்கள் இணைந்து ஆசிரியர் பேரவை என்ற சங்கம் உருவாக்கப்பட்டது.அன்றைய தமிழக அரசு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரப்படுத்த மறுத்தது.

    இதனால் ஆசிரியர் பேரவை தலைவர் தியாகராஜன் தலைமையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியை சந்தித்தனர். அவரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என உறுதியளித்தார்.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கருணாநிதி முதல்- அமைச்சரானார்.ஆசிரியர் பேரவைக்கு உறுதியளித்தபடி ஆட்சிக்கு வந்தவுடன் 53 ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.பணி நிரந்தரம் பெற்ற ஆசிரி யர்கள் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தினர்.அந்த விழாவில் கலந்து கொண்ட அன்றைய முதல்-அமைச்சர் ஆசிரியர் பேரவை என்று இருந்த சங்கத்தின் பெயரை மாற்றி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்று பெயரிட்டார்.

    நாளை (29-ந் ேததி) சென்னை கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட உள்ள ரங்கத்தில் சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் மாநிலச்செயலாளர் ரமேஷ் படத்திறப்பு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, பள்ளிகளில் படித்து சிறப்பிடத்தை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் பணியையும், இயக்கப்பணியையும் செய்யும் இயக்க பொறுப்பா ளர்களுக்கு விருது வழங்கும் விழா என்ற அடிப்படையில் இந்த விழா நடக்கிறது.சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளருமான தியாகராஜன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இதில் கலந்து கொண்டு 53 ஆயிரம் மாணவர்களுக்கு பேனா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    மேலும் ஆசிரியர்க ளுக்கும், இயக்க நிர்வாகி களுக்கும் விருதுகளை வழங்குகிறார்.விழாவில் அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, அன்பரசன், முத்துச்சாமி, செந்தில்பாலாஜி, கணேசன், தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பாடநூல் கழத் தலைவர் திண்டுக்கல் லியோனி மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் 100 பேர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது
    • ஆரோக்யலஷ்மிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது

    வாலாஜா:

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 18-வது ஆண்டு வருஷாபிஷேக விழா, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 62-வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம் திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா நேற்று தொடங்கி வருகிற 11-ம் தேதி முடிய நடைபெறுகிறது.

    விழாவில் முதல் நாளான நேற்று மங்கள இசையுடன் கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, மஹா கணபதி, நட்சத்திர நவக்கிரக பூஜை, ஸ்ரீ தன்வந்திரி, ஏகாதச ருத்ர ஹோமம் உள்பட 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனையுடன் ஸ்வாமிகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் 62 சுமங்கலிகள், 62 கன்னி பெண்கள் பங்கேற்ற சுமங்கலி, கன்யா பூஜைகள் நடைபெற்றது.விழாவில் ஸ்தல வரலாறு நூல் வெளியிடப்பட்டு சாதுக்களுக்கு வஸ்திரம், 5கிலோ அரிசி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர் மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    மாலையில் வாலாஜா ஸ்ரீ நடராஜ பெருமான் நாட்டிய பள்ளி எம்.ஷன்மதி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு.கூனம்பட்டி ஆதினம், கலவை சச்சிதானந்த சுவாமிகள், நங்க நல்லூர் காமாட்சி ஸ்வாமிகள், பெலாகுப்பம் ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் ஸ்வாமிகள், வாலாஜா தாசில்தார் நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது
    • மாணவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து துளிர் இல்லம் தொடக்க விழா, அண்ணா பிறந்த நாள் விழா, உலக பொறியாளர் தினம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு என ஜம்பெரும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். ஆத்தங்கரைவிடுதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா வட்டார செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட தலைவர் வீரமுத்து, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதற்கு மாணவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் புதுக்கோட்டை மாவட்ட இணை செயலாளர் சிவானந்தம், கந்தரவகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல் லா, வட்டார செயலாளர் சின்ன ராஜா, தலைமை ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.

    இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஆகியோர் செய்து இருந்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் நன்றி கூ றினார்.

    • மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை திடலில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டி கடந்த 25-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
    • வெற்றி பெறும் அணியினருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்க உள்ளார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை திடலில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டி கடந்த 25-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    ஆண், பெண் என இருபிரிவுகளாக நடைபெற்று வரும் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெறுகின்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்க உள்ளார்.

    முன்னதாக கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் போட்டிகளை காண தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெறும் போட்டி என்பதால் அந்த பகுதியே மின்னொளியால் பகல் போல் காட்சி அளிக்கின்றது. இதைத் தொடர்ந்து கபடிப் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா இன்று (28-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி அறிவித்தல், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், மணப்பாறை ஒன்றிய தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபாடி போட்டி, தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நிறைவு மற்றும் மணப்பாறை ஒன்றிய தி.மு.க. அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழாவாக நடைபெறுகிறது.

    விழாவுக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்குகிறார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். விழாவல் ஒன்றிய செயலாளர் சி.ராமசாமி வரவேற்கிறார். விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி, விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஜோதிமணி எம்.பி., ப.அப்துல் சமது எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இதில் மாநில, மாவட்ட, நகர, பேரூர், வட்டம், வார்டு, கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி பிரநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள்.

    நகர செயலாளர் மு.ம.செல்வம், வக்கீல் கிருஷ்ணகோபால் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள். தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வருகையையொட்டி மணப்பாறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு இடங்களில் வரவேற்பு வளைவுகள், அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    • திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (28-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மணப்பாறை ஒன்றியம் உள்ள தியாகேசர் ஆலை மைதானத்தில், ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.
    • விழாவில் கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.

    திருச்சி:

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (28-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மணப்பாறை ஒன்றியம் உள்ள தியாகேசர் ஆலை மைதானத்தில், ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.

    இதையடுத்து மணப்பாறை ஒன்றிய தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார். மணப்பாறை ஒன்றிய தி.மு.க. அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா, கழகத் தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நிறைவு விழா, மணப்பாறையில் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×