என் மலர்
நீங்கள் தேடியது "ஏடிஎம் கொள்ளை"
- 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருவண்ணாமலை:
சென்னை பெரம்பூரில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் நகைக்கடையை உடைத்து 9 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கியாஸ் வெல்டிங் மூலமாக நகை கடையின் இரும்பு ஷட்டரை சத்தமில்லாமல் உடைத்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக கை வரிசை காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
வடசென்னை கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் கொள்ளை சம்பவத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே உள்ளது. இதனால் வடசென்னை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் பகுதியில் தேனிமலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாரியம்மன் கோவில் தெரு ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்தனர்.
பின்னர் அதில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டினர். இதையடுத்து தேனிமலை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற கொள்ளை கும்பல் இதே பாணியில் அங்கும் கைவரிசை காட்டியது.
கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.30 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனர். இதன் பின்னர் கொள்ளை கும்பல் வேலூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தது.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள கலசப்பாக்கத்துக்கு கொள்ளையர்கள் சென்றனர். கலசப்பாக்கம் மெயின் ரோட்டில் 'இண்டியா ஒண்' வங்கி ஏ.டி.எம். மையத்தில் புகுந்த கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டினர்.
இதன்பிறகு போளூர் சென்ற கொள்ளையர்கள் அங்கு மீண்டும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்தனர். அதிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. போளூர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
மொத்தம் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த கொள்ளையர்கள் ரூ.75 லட்சம் பணத்தை மிகவும் துணிச்சலாக வாரி சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாள் இரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையர்கள் சாவகாசமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் மர்ம கொள்ளை கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளது.
கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக கொள்ளையர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் தான் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை உடனடியாக கூண்டோடு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகிய இருவரின் மேற்பார்வையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். கொள்ளைபோன 4 ஏ.டி.எம்.களில் 3 ஏ.டி.எம்.கள் 'ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமானவையாகும். ஒருவங்கி கிராமப்பகுதிகளில் அதிகமாக உள்ள 'இண்டியா ஒன்' ஏ.டி.எம். ஆகும்.
இந்த 4 ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகள் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது. ஏ.டி.எம். மையங்களில் உள்ள கேமரா மற்றும் கேமரா காட்சிகள் பதிவாகும் ஐ.வி.ஆர். பெட்டி ஆகியவற்றை கொள்ளையர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
பின்னர் ஐ.வி.ஆர். பதிவான பெட்டியை தீவைத்து எரித்து தடயங்களை அழித்துள்ளனர். இதனால் கொள்ளையர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை கூட போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.
- கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வேலூர் லாட்ஜிகளிலும் போலீசார் திவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோட்டில் திருப்பத்தூர் சாலையிலும் அதே போல் வாணியம்பாடியில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையிலும், வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுரோடு பகுதியில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள், கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பேரணாம்பட்டு பத்திரபல்லி, பனமடங்கி, சேர்க்காடு, சோதனை சாவடி மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.வேலூர் லாட்ஜிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும்.
- கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்த டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக டி.ஜி.பி.சைலேந்திர பாபு காவல் துறையினருக்கு கூறியிருப்பதாவது:
* திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும்.
* மாநில எல்லை சுங்கச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டும்.
* அண்டை மாநில போலீசாருடன் இணைந்து தீவிர வாகன தணிக்கை சோதனை நடத்த வேண்டும்.
* கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
* திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- சென்னையிலும் அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இதுபோன்று ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
- ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் எல்லைப்பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அரியானா போன்ற வடமாநிலங்களில் ஏற்கனவே நடைபெற்றுள்ளது.
சென்னையிலும் அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இதுபோன்று ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைதானார்கள்.
ஆனால் இந்த சம்பவம் வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அரங்கேற்றப்பட்டு உள்ளது. இதில் கை தேர்ந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு பல நாட்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளனர்.
இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் வடமாநிலத்துக்கு தப்பி சென்றுவிட்டார்களா? அல்லது திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பதுங்கி இருக்கிறார்களா? என்பது பற்றியும் கண்காணித்து வருகிறோம்.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் எல்லைப்பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மீண்டும் இது போன்று இன்னொரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஏ.டி.எம். மையங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் அங்கேயே முகாமிட்டு விசாரித்து வருகிறார்கள். கை தேர்ந்த கை ரேகை நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யும் தலைசிறந்த நிபுணர்கள் சென்னை மற்றும் கோவையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.
வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.
- கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரு எந்திரத்தை மட்டும் வெல்டிங் எந்திரத்தால் வெட்டி அதில் இருந்த ரூ.32 லட்சத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
- கொள்ளையர்கள் எதிரில் இருந்த மற்றொரு எந்திரத்தை எந்தவித கொள்ளை முயற்சியும் செய்யாமல் விட்டு விட்டு சென்று உள்ளனர்.
திருவண்ணாமலை:
கொள்ளை சம்பவம் நடைபெற்ற திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் 2 வெவ்வேறு பணம் எடுக்கும் எந்திரங்கள் இருந்தன.
கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரு எந்திரத்தை மட்டும் வெல்டிங் எந்திரத்தால் வெட்டி அதில் இருந்த ரூ.32 லட்சத்தை கொள்ளையடித்து உள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு எதிரில் இருந்த மற்றொரு எந்திரத்தை எந்தவித கொள்ளை முயற்சியும் செய்யாமல் விட்டு விட்டு சென்று உள்ளனர்.
அதில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் அதில் இருந்தது என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
- நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன.
- ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.
இந்த 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.72 லட்சம் பணம் கொள்ளை போனது.
நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை கியாஸ் வெல்டிங் மூலம் கும்பல் எரித்துள்ளனர். அதை தொடர்ந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு ஏடிஎம் எந்திரங்களுக்கு தீ வைத்து சென்று விட்டனர்.
ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க 13 நிமிடங்கள் மட்டுமே கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
போளூர் ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கேமராக்கைளை ஆய்வு செய்தபோது அதிகாலை 3.50 மணிக்கு காரில் தொப்பி அணிந்தபடி 4 பேர் கும்பல் வந்ததும் அடுத்த 13 நிமிடத்தில் அவர்கள் கொள்ளையை முடித்து விட்டு திரும்பி சென்றதும் பதிவாகி உள்ளது.
அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.
கொள்ளை நடந்த ஏடிஎம் மையங்களை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பந்தமாக பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக ஆந்திராவுக்கு கும்பல் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது.
இதனை தொடர்ந்து ஆந்திர எல்லைகளில் போலீசார் நேற்று காலை முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது.
இதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா கர்நாடக மாநில எல்லைகளில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
வேலூரில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் விடுதிகளில் தங்கியுள்ளனர். இன்று 2-வது நாளாக லாட்ஜிகளில் சோதனை நடத்தப்பட்டது.
இது போன்ற கொள்ளையில் அனுபவம் வாய்ந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை போளூர் கலசப்பாக்கம் நகர பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக டி.ஐ.ஜி முத்துசாமி கூறுகையில்:-
கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.
நாகர்கோவில்:
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதில் ஈடுபட்ட நபர்கள் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு தீ வைத்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் கொள்ளையர்கள் சிவப்பு நிற காரில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
போலீசார் அந்த காரின் எண்ணை சோதனை செய்தபோது குமரி மாவட்ட பதிவு எண்ணை கொண்ட கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசாரின் சோதனை தீவிர படுத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் அடையாளங்கள் மற்றும் காரின் எண்ணை குறிப்பிட்டு வாகன சோதனை நடந்தது.
நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர்.அனைத்து கார்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.
நாகர்கோவிலில் வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம், கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கார்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அஞ்சு கிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இரண்டு ஷிப்டுகளாக போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.ஆனால் யாரும் சிக்கவில்லை. இன்று காலையிலும் சோதனை நீடித்தது. மாவட்டத்திலுள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் பதிவு எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த காரின் எண் உண்மையான பதிவு எண்ணா ?போலி பதிவு எண்ணை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி வந்தார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் தற்பொழுது எங்கு உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொள்ளையர்களை பிடிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
- விசாரணையின் முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பகோணம்:
திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.72 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் அனைத்து எல்லைகள் உள்பட 48 இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.
அதன்படி கும்பகோணம் அருகேதிருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாசநல்லூர் அபிராமி நகரில் திருவிடைமருதூர் போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து விசாரணை நடத்திய பிறகே செல்ல அனுமதித்தனர்.
அப்போது வெள்ளை நிற இண்டிகா கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை போலீசார் வழிமறித்தனர். உடனே காரில் இருந்த 4 பேரும் காரை விட்டு இறங்கி தப்பி ஓடினர். அதில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து காரை சோதனையிட்டனர். அதில் முகமூடி, மூன்று செல்போன், இரண்டு டைரி, கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அந்த மர்ம நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் கும்பகோணத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 26) என்பதும், பூட்டிய வீடுகளில் சிலருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவரிடம், திருவண்ணாமலை ஏ.டி.எம். பணம் கொள்ளையில் தொடர்பு உள்ளதா ? காரில் இருந்து தப்பி ஓடியவர்கள் யார் ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட முகமூடியை பயன்படுத்தி வேறு எங்கையாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா ? எனவும் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் கைதேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளனர்.
- 9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏ.டி.எம். கொள்ளையில் துப்பு துலங்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்.
கைதேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டுள்ளனர். 4 ஏ.டி.எம்.களையும் சேர்த்து 2 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தை திருட்டு கும்பல் அரங்கேற்றியுள்ளது.
குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம்.களை தெரிந்து கொண்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அறிவியல் ரீதியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை பிடிக்க விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை நடந்த ஏ.டி.எம்.களின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மும்பையில் பெறப்பட்டுள்ளது. அவற்றை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.
- தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த 4 ஏடிஎம் மையங்களில் இருந்தும் ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினரை மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து நவீன முறையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது.
- ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை தெளிவாக காட்டும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்த வேண்டும்.
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து நவீன முறையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது.
அரியானா போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்த கொள்ளையர்கள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் செயல்படும் 50 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் 3 முக்கிய அறிவுரைகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்துமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த அறிவுரைகள் பின்வருமாறு:-
* அனைத்து ஏ.டி.எம். மையங்களையும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுடன் இணைத்து போலீஸ் நிலையங்களில் அலாரம் கருவிகள் பொருத்த வேண்டும். ஏ.டி.எம். மையங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் அபாய சத்தம் ஒலிக்கும். எனவே போலீசார் உடனடியாக அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.
* ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை தெளிவாக காட்டும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்த வேண்டும்.
* இவ்வாறு பொருத்தப்படும் கேமராக்கள் வெளிப்படையாக தெரியாமல் ரகசியமாக இருக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது, "மேற்கண்ட பாதுகாப்பு வசதிகளை ஏ.டி.எம். மையங்களில் செயல்படுத்துவதற்கு வங்கிகளுக்கு பெரியளவில் செலவுகள் ஏற்படாது. எனவே இந்த 3 அறிவுரைகளையும் உடனடியாக செயல்படுத்த வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
- திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
- வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், நகை அடகு கடை உள்ளிட்டவை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10-வது தெரு, திருவண்ணாமலை தேனி மலை பகுதி, திருவண்ணாமலை-வேலூர் சாலை, கலசப்பாக்கம், போளுர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். எந்திரங்களை வெல்டிங் மெஷினால் உடைத்து அதிலிருந்த ரூ.75 லட்சத்தை நேற்று முன்தினம் கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகள், மாவட்ட, மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை எதிரொலியாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதில் காவலாளிகள் உள்ள ஏ.டி.எம். மையங்கள் எத்தனை உள்ளது? காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் எத்தனை என இருபிரிவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், நகை அடகு கடை உள்ளிட்டவை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மேலும் விரைவில் ஏடிஎம் மையங்களில் உள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் எஸ்பி ஆலோசனை நடத்த உள்ளார் என்றனர்.