என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாக்கடை அடைப்பு"
- நவீன எந்திரம் மூலம் சாக்கடை அடைப்பை அகற்றும் பணிைய மேயர் நேரில் ஆய்வு செய்தார்.
- இதில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாநகரின் இதய பகுதியாக, மேலமாசி வீதி உள்ளது. தெற்குமாசி-மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள டி.எம்.கோர்ட் அருகில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடி வந்தது. இதனால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் மதுரை மாநகராட்சியிடம் புகார் கொடுத்தனர்.
அதன்படி ஊழியர்களும் சாக்கடையை அடைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்து கொடுத்தனர். ஆனாலும் அந்த பகுதியில் சாக்கடை அடைப்பு தொடர்கதையாக நீடித்து வந்தது. இதற்கிடையே மதுரை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் பாதாள சாக்கடை அடைப்பை உறிஞ்சி அகற்றும் வகையில், அதிநவீன எந்திரத்துடன் கூடிய வாகனங்களை கொள்முதல் செய்து உள்ளது.
நவீன எந்திரம் மூலம் இன்று காலை டி.எம்.கோர்ட்டு சாக்கடை அடைப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் வாயிலாக அங்கு தொடர்கதையாக நீடித்து வந்த சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த பணியை மாநகராட்சி மேயர் இந்திராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் ரோட்டில் சென்றது.
- வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடையில் நேற்று மாலை பெய்த மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் ரோட்டில் சென்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றதோடு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.மேலும் அப்பகுதி வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்தது.சாலையோரம் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளின் கடைகளின் முன்பு சாக்கடை நீர் தேங்கியது.
சாக்கடை அடைப்பை நீக்க கோரி பலமுறை அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்