search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி உயிரிழப்பு"

    • கூலித் தொழிலாளியான மோகன் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
    • கணவனை கண்டித்த மனைவி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன், (வயது 47). கூலித் தொழிலாளியான இவர் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். மனைவி கண்டித்து பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இந்த நிலையில் மோகன் மன வேதனையில் விஷம் குடித்தார். அவரை மீட்டு திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார்.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×