search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 262000"

    • 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.
    • மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டி கர்நாடக தோட்டக்கலை துறை பூங்காவில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசனையொட்டி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலர் பாத்திகளில், 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள், தொங்கு பாலத்தில் நடந்து சென்று 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர். பூங்கா நடுவே அமைக்கப்பட்ட கட்டமைப்பு வளையத்தில் பள்ளி குழந்தைகள், சுற்றுலா பயணிகள் விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த பிரபலமான இந்த பூங்கா சுற்றிலும் காணப்படும் அழகால் சூழப்பட்ட சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

    புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் மகிழ்ச்சிதரும் இடமாக கர்நாடக பூங்கா அமைந்துள்ளது. பசுமைக்கு மத்தியில் அமைதியை இங்கு அனுபவிக்கலாம். 38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் கர்நாடக தோட்டக்கலைத் தோட்டம், ரோஜா தோட்டம், இத்தாலியத் தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம், எனப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.

    நீலகிரிக்கு வரும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மலர் படுக்கைகளுடன் பல புல்வெளிகளும் உள்ளன. இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பூங்காவின் முக்கிய சிறப்பம்சமாக பூங்காவின் நர்சரி குடிலில் 50 ஆயிரம் வெவ்வேறு தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ணமயமான மற்றும் அழகான மனதை கவரும் மலர்கள் உள்ளன. இங்கு மூலிகைகளுக்கான தனி பிரிவுவும் உள்ளது. பூங்காவின் நர்சரி குடிலில் உள்ள மலர்கள் அழகாய் அனைவரின் மனதையும் கவர்ந்து இழுகின்றது.

    • பண்டாரவாடை கிராமத்தில் அமைந்துள்ள புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் தேர்பவனி விழா கொண்டாடப்பட்டது.
    • தேர் பவனியின் போது, பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை கிராமத்தில் அமைந்துள்ள புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் தேர்பவனி விழா கொண்டாடப்பட்டது.

    பாபநாசம் புனித செபஸ்தி யார் ஆலய பங்கு தந்தை கோஸ் மான் ஆரோக்கியராஜ் தலைமையிலும் இணை பங்கு தந்தை தார்தீஸ் முன்னிலையிலும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றன.

    வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனித காணிக்கை மாதா ஆடம்பர தேரில் எழுந்தருளி தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.

    தேர் பவனியின் போது, பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த நிகழ்வில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடை பெற்றது.

    விழாவையொட்டி தின மும் காலையில் யாக சாலை பூஜையும் அதைத் தொடர்ந்து அபிஷேகமும் பின்னர் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது. இரவு யாகசாலை பூஜையும் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு அருட்பிர சாதம் வழங்குதலும் நடை பெற்றது.

    10-ம்திருவிழாவான நேற்று காலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு பல வண்ண மலர்களால்அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். மறுநாளான இன்று காலை விவேகானந்தபுரம் கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை சிவஸ்ரீ டாக்டர் சங்கர் பட்டர் தலைமையில் 6 அர்ச்சகர்கள் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பால கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, பொதுச் செயலாளர் பானுதாஸ், நிர்வாகச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மூத்த ஆயுட்கால ஊழியர்கள் அங்கிராஷ், கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×