என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராஜா எம்.எல்.ஏ"
- நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
- நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இதுவரை நிரந்தர பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதியில் மின்சார துறையில் உள்ள தேவைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே தென்காசி மின் பகிர்மான வட்டமாக அறிவித்திட வேண்டும். நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் கேங்மேன் பற்றாக்குறை உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கேங்மேன்கள் பிற மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை தென்காசி மாவட்டத்தில் பணி அமர்த்திட வேண்டும். குருக்கள்பட்டி கிராம மின் நிலையத்தில் நிரந்தர களப்பணியாளர்கள் நியமனம் செய்திட வேண்டும். மேலும் குருக்கள்பட்டி கிராமத்தில் உப மின் நிலையத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்னும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. அப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இதுவரை நிரந்தர பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. விரைந்து நிரந்தர பணியாளர்கள் நியமித்திட ஆணை பிறப்பித்திட வேண்டும். குருக்கள்பட்டி மின் அலுவலகத்தில் பொறியாளர் நியமனம் செய்திட ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்