என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி மையம்"

    • டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர்.
    • கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மைய விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

    டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டனர். ஆனால் இதுகுறித்த புகாரை காவல்துறை எடுத்துக்கொள்ள மறுப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகான் காரணம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும்.

    பாகுபாடு, ராகிங் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். கல்வி நிறுவன வளாகத்துக்குள் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வது கட்டாயக் கடமையாகும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து, முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உயர்கல்வி, சமூக நீதி மற்றும் சட்ட விவகாரங்கள் துறையின் செயலாளர்கள் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களைக் கண்டறிந்து, தற்போதுள்ள விதிமுறைகளை பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை செயற்குழு தயாரிக்கும் என்று தெரிவித்தனர்.

    மேலும், தனது அறிக்கையைத் தயாரிக்கும் பணியில், எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் திடீர் ஆய்வு நடத்த செயற்குழுவுக்கு அதிகாரம் உண்டு. இந்தப் செயற்குழு நான்கு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதே நேரத்தில் இறுதி அறிக்கை எட்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • கரூர் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது
    • நிகழ்ச்சியில் ரூ.29ஆயிரத்து 482 மதிப்பில் போட்டி தேர்வு நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

    கரூர்

    இனாம் கரூர் கிளை நூலகத்தில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி மாவட்ட தலைவர் வடிவேல் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெரால்டு தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் 5 இரும்பு நூல் அடுக்குகள், ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி, பீரோ, போட்டித் தேர்வு மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து படிக்கும் வகையில் மேைசகள் மற்றும் ரூ.29ஆயிரத்து 482 மதிப்பில் போட்டி தேர்வு நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. முடிவில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மோகனசுந்தரம் செய்திருந்தார்.


    • தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டுபுதிய புலன்விசாரணை பயிற்சி மையத்தை திறந்துவைத்தார்.
    • புலன் விசாரண பயிற்சிமையம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீசாருக்கான புலன் விசாரணை பயிற்சி மையம்பண்ருட்டியில்அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்தலைமையில் நடந்தது. பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா வரவேற்று பேசினார்.பண்ருட்டி- கும்பகோணம் சாலை யில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில்நடந்ததிறப்புவிழாவில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டுபுதிய புலன்விசாரணை பயிற்சி மையத்தை திறந்துவைத்துபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது :- இந்த புலன் விசாரண பயிற்சிமையம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.இதுபோன்ற பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் போலீசார் புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட முடியும். இந்த பயிற்சிகளின் மூலம் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும்.சமீபத்தில் காடாம்புலியூரில் நடந்த கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து 36 மணி நேரத்தில் முறையான ஆவண ங்களுடன் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல்செய்து போலீசாருக்கு பெருமை சேர்த்த பண்ருட்டிபோலீசாரைபாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரை பாண்டி யன்,நந்தகுமார், சீனிவாசன், பரமேஸ்வரபத்மநாபன், பண்ருட்டி வர்த்தக சங்க பிரமுகர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வட கரையாத்தூர் ஊராட்சி ஜேடர்பாளையம் அருகே பள்ளாபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    பயிற்சி மையம்

    பயிற்சி மையத் தொடக்க விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து

    கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கி ணைப்பாளர் ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா குணசேகரன், கபிலர்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்கல்வி

    பயிற்சி மையத்தில் வடகரையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பு ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையத்தில் தொடர் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பயிற்சி மைய தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை வட்டார பள்ளி செல்லா குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.

    • பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.
    • தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் ஜெயப்பிரதா (வயது 19). இவர் மடப்பட்டு நேதாஜி காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். கடந்த 20-ந் தேதி காலை 8 மணிக்கு பயிற்சி மையத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை ஜெயராமன் புகார் கொடுத்தார்.

    அதில், அதே ஊரை சேர்ந்த சுந்தர் (எ) தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன காவலர் பயிற்சி பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.
    • நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்க கூடாது.

    தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எந்த ஒரு பயிற்சி மையமும் பட்டப்படிப்பை விட குறைவான தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது. பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.

    மாணவர்களைச் சேர்ப்பதற்காக பயிற்சி நிறுவனங்கள் தவறான வாக்குறுதிகளை அளிக்கவோ, ரேங்க் அல்லது நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்கவோ கூடாது.

    பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள், பயிற்சி மையத்தால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தொடர்பான எந்தவொரு தவறான விளம்பரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • இந்தியாவின் 22 விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய நிறுவனம்.
    • 158-க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை வெற்றிகரமாகக் கையாண்டது.

    விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.

    பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே, 8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

     


    விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன்- விமானப் பள்ளி, கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாகத் திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட விமானப் பயணத்தின் பல்வேறு அம்சங்களை கற்றுத்தருகிறது.

    இதில் ஸ்மார்ட் கிளாஸ் அறை, ஆய்வகம், கேபின் க்ரூ பயிற்சிக்கான மாக் செட், நூலகம் மற்றும் க்ரூமிங் அறை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.

    புதிய பயிற்சி மையம் குறித்து பேசிய அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, "கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு விமானத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் தேவை. இந்த பயிற்சி மையம் சென்னை விமான நிலையத்திற்கு அருகில், அமைந்துள்ளதால் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
    • கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 5-ந்தேதி நடை பெறவுள்ளது.

    இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும், சென்னையில் 827 மாணவா்களும், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா்.

    அவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீா் மற்றும் மதிய உணவு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறுகின்றன.

    • பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
    • ரத்லாம் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இந்த தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது

    மத்தியப் பிரதேசத்தில் காவலர் சீருடை அணைத்தவாறு தனியார் பயிற்சி மைய விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் இயங்கி வரும் போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் மேலதிகாரிகளின் கவனத்துக்கு இது சென்றுள்ளது. எனவே அவரை தற்போது இடைநீக்கம் செய்து காவல் கண்கணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.   

    • அரசியலில் இணைவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதே எனது நோக்கம்
    • வரலாறு, அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கிறார்.

    டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்து 10 ஆண்டுகள் அவரை ஆளும் கட்சியாக உள்ளது ஆம் ஆத்மி. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலும் வெற்றிக்கான பணிகளை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் பிரபல யுபிஎஸ்சி ஆசிரியர் அவத் ஓஜா டெல்லியில் கட்சோ ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துள்ளார். அரசியலில் சேர்ந்து கல்விக்காக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்ததற்காக கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு ஓஜா நன்றி தெரிவித்தார்.

    கல்வி என்பது குடும்பம், சமூகம் மற்றும் தேசத்தின் ஆன்மாவாக இருக்கும் ஒரு ஊடகம். இன்று, எனது அரசியல் இன்னிங்ஸின் தொடக்கத்தில், நான் அரசியலுக்கும் கல்விக்கும் இடையில் எதை தேர்வு செய்யவீர்கள் என்று கேட்டால், அரசியலில் இணைவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதே எனது நோக்கம் என கூறுவேன் என்று தெரிவித்தார்.

    யார் இந்த அவத் ஓஜா ?

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அவத் ஓஜா [வயது 40] சிறுவயதிலிருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் ஆசைப்பட்டார். அதற்காக அவரது தந்தை சொந்த நிலத்தை விற்று மகனை டெல்லியில் படிக்கச் வைத்தார். யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி ஓஜா வெற்றி பெற்றார்.

    ஆனால் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. வேறு வேலைக்கு போக பிடிக்காமல் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியரானார். டெல்லி முகர்ஜி நகரில் சொந்தமாக பயிற்சி மையத்தை தொடங்கினார். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகிறார். 2019  இல் புனேவில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை தொடங்கினார்.

    வரலாறு, அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பாடங்களில் ஓஜாவின் பயிற்சி வீடியோக்கள், புத்தகங்கள் பிரசித்தி பெற்றவை ஆகும். யுபிஎஸ்சி மாணவர்கள் மத்தியில் பிரபாலாக அறியப்பட்ட ஓஜா தற்போது திடீரென அரசியலில் குதித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
    • நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்

    கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் கோட்டாவில் நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்த 2 மாணவர்கள் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக கோட்டா பயிற்சி மையத்தில் பயின்று வந்த 20 வயது மாணவன் கடந்த புதன்கிழமை தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    இறந்தவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணாவைச் சேர்ந்த அபிஷேக் லோதா என அடையாளம் காணப்பட்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் "என்னால் படிக்க முடியவில்லை.நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்" என்று எழுதி வைத்துள்ளார்

    24 மணி நேரத்திற்குள் கோச்சிங் சென்டர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்கு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த அரியானவை சேர்ந்த நீரஜ் என்ற 19 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார்.

    கோச்சிங் சென்டர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் அழுத்தம் மாணவ மாணவிகளை மன ரீதியான நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும். 

    • தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • கடந்த ஆண்டில் கோட்டா பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

    கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

    இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

    அந்த வகையில் ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மனன் சர்மா என்ற மாணவர், கடந்த 3 ஆண்டுகளாக கோட்டா நகரில் தங்கியிருந்து, அங்குள்ள உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. தேர்வுக்காக தயாராகி வந்தார்.

    இந்நிலையில், ஜே.இ.இ. தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் நடப்பு மாதத்தில் கோட்டா நகரில் நடந்துள்ள 4-வது தற்கொலை சம்பவம் இது. கடந்த ஆண்டில் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

     

    இந்நிலையில் மாணவர்கள் காதல் விவகாரங்களால் தற்கொலை செய்துகொள்வதாக ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு பற்றி அழுத்தம் கொடுக்கக்கூடாது. எனது வார்த்தைகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    மாணவர்கள் தற்கொலைக்கு பயிற்சி மையங்களின் பங்கு கொஞ்சம் இருக்கலாம். சில சமயங்களில் காதல் விவகாரங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் பெற்றோர்கள் கட்டுப்படுத்த தவறினால் மாணவர்கள் தவறான திசையில் செல்வார்கள் என்று தெரிவித்தார்.  

    ×