search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் வழிபாடு"

    • மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும்.
    • விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.

    ஞானப் பழத்திற்காக விநாயகரும், முருகப்பெருமானும் போட்டி போட்டபோது, 'இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்' என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.

    அந்த முடிவைக் கேட்ட முருகப்பெருமான், மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், 'பெற்றோரை சுற்றி வந்தால், உலகத்தைச் சுற்றியதற்கு சமம்' என்று கூறி, பழத்தைப் பெற்றுக்கொண்டார், விநாயகர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில், கனியை கையில் ஏந்தியிருக்கும் விநாயகரை நாம் தரிசிக்க முடியும்.

    இந்த விநாயகரை வழிபட்டால், மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும். போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற நினைப்பவர்கள், இந்த விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.

    வாழ்வை வளமாக்கும் அரச மரம்

    எத்தனை மரங்கள் இருந்தாலும், 'மரங்களின் அரசன்' என்று போற்றப்படுவது அரசமரம் தான். இந்த மரத்தில் மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்வதாக சொல்கிறார்கள். இந்த மரத்தை 'தேவலோகத்து மரம்' என்றும் வர்ணிப்பார்கள். இம்மரத்தைச் சுற்றி வலம் வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் அருள் நமக்குக் கிடைக்கும்.

    அக்னி பகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி அரச மரத்தில் புகுந்து கொண்டதால், இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன்படுத்துகிறோம். பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரச மரக் காற்றை நாம் சுவாசித்தால், ஆயுள் வளரும்; ஆரோக்கியம் சீராகும்.

    அரச இலைகளின் சல சலப்பு ஆலய மணி போல இருக்கும். அரச மரத்தடியில் விநாயகப்பெருமானையும், நாகராஜரையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். கனிவான வாழ்க்கை அமையும்.

    • பிள்ளையாருக்கு ‘விக்னகர்த்தா’ என்ற பெயரும் உண்டு.
    • `விக்னம்’ என்பதற்கு ‘இடையூறு’ என்று பொருள்.

    விநாயகரை கும்பிட்டால் விக்கினம் தீரும் என்பது நம்பிக்கை. 'விக்னம்' என்பதற்கு 'இடையூறு' என்று பொருள். இந்த இடையூறுகளை நீக்குவதற்கு, விநாயகர் வழிபாடு முக்கியமான ஒன்று.

    எந்த காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையாரை வழிபட்டு தான் தொடங்குகிறோம். அப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது, இந்து சமயம் சொல்லும் ஆகம விதி. பிள்ளையாருக்கு 'விக்னகர்த்தா' (விக்னங்களை உண்டாக்குபவர்), 'விக்னேஸ்வரன்' (விக்னங்களை நீக்குபவர்) என்ற பெயரும் உண்டு.

    நாம் ஒரு காரியத்தை தொடங்கும் போது அந்த காரியம் எந்த தடையும் இன்றி நன்கு நடைபெற வேண்டும் என்று நினைப்போம். அந்த நினைப்பை வணங்குதலாக, விநாயகரை நோக்கி வைக்க வேண்டும். விநாயகரை வழிபடாது தொடங்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படும் என்பதை பல புராணக் கதைகள் நமக்கு சொல்கின்றன.

    வள்ளியை மணம் முடிக்கச் சென்ற முருகப்பெருமான் கதை நம்மில் பலருக்கும் தெரியும். வள்ளியை மணம் முடிக்கும் அவசரத்தில், அவர் தன் அண்ணனான விநாயகரை வணங்காமல் சென்று விட்டார். வள்ளியை மணம் முடிக்க அவர் வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக என்று பல உருவங்கள் எடுத்தும் அவரது முயற்சி பலிக்கவில்லை.

    அப்போது நாரதரின் மூலமாக தன் அண்ணனை வழிபடாமல் வந்த விஷயம் தெரியவர, உடனடியாக விநாயகரை நினைத்து வழிபட்டார் முருகப் பெருமான். அப்போது யானை வடிவில் வந்த விநாயகர், முருகப்பெருமானையும், வள்ளியையும் சேர்த்து வைத்தார்.

    இதேபோல ஒவ்வொரு கடவுளரும், விநாயகரை வணங்க மறந்த போதெல்லாம் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதை நமது புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    விநாயகரை திருப்திப்படுத்த ஒரு அச்சுவெல்லம், ஒரு கை பொரி, ஒரு பிடி அவல் மட்டுமே போதுமானது. இவற்றைக் கொண்டு விநாயகரை நினைத்து, தலையில் குட்டிக்கொண்டு 'சுக்லாம் பரதரம்..' என்ற சுலோகத்தை சொல்லி வழிபட்டால், அவர் உடனடியாக நம்மை தேடி வந்து நன்மைகளைச் செய்வார்.

    • தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார்.
    • சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

    விஷ்ணு பகவான் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று தான் சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு பகவான் வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.

    அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றுவிட்டார். இதனால் விஷ்ணு பகவான் மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு பகவான், சிவபெருமானை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

    இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கர படைப்பை விஷ்ணு பகவானுவுக்கு கொடுத்தார். விஷ்ணு பகவான் சுதர்சனசக்கரத்தை வாங்கிக்கொண்டு வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணு பகவானின் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.

    அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு பகவான், தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.

     அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சன சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசிபெற்றார் விஷ்ணு பகவான். (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சிபுரம் கோவிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.

    • 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது.
    • அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்.

    விநாயகர் சதுர்த்தி அல்லது சங்ககடஹர சதுர்த்து அல்லது சதுர்த்தி திதி அன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. 21 பதிரங்களைத் தெரிந்து கொள்வது நலம் பல பயக்கும் என்பர். அவ்வாறான பதிரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-

    1. முல்லை இலை: அறம் வளரும்

    2. கரிசலாங்கண்ணி இலை: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

    3. விஸ்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

    4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடையலாம்.

    6. ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும்.

    7. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

    8. நாயுருவி இலை: முகப் பொலிவும், அழகும் கூடும்.

    9. கண்டங்கத்திரி இலை: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.

    10. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

    11. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.

    12. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்

    13. விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும்.

    14. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

    15. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.

    16. மரிக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

    17. அரச இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

    18. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.

    19. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.

    20. அகத்தி இலை: கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

    21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.

    • தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி.
    • சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம்.

    கல்வியை வழங்கும் தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி ஆவார். உலகில் உள்ள பெரிய புத்தகமாக மகாபாரதத்தை தம் கைப்பட எழுதி பெருமை சேர்த்தவர். அவர் அனேக அன்பர்களுக்கு ஞானத்தை போதிக்கும் குருபிரானாக இருப்பதை காண்கிறோம். தமிழ் வேதமான திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிக்கு அவர் ஆசிரியனாக இருந்து கல்வி கற்பித்ததை அவருடைய வரலாறு கூறுகிறது. சில தலங்களில் அவருக்குப் பள்ளிக்கூட விநாயகர் என்ற பெயரும் வழங்குகிறது.

    அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் வாழ்ந்து வீடுபேறு பெற்றதால், திருச்செங்காட்டாங்குடி. அதற்கும் அதன் அருகிலுள்ள தலமான மருகலுக்கும் இடையே சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம் உள்ளது. அந்த இடத்தில் இப்போது விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அது பள்ளிக்கூட பிள்ளையார் கோவில் என வழங்குகிறது.

    ஆவுடையார் கோயில் எனப்படும் திருப்பெருந்துறை தலத்தில் பூஜித்து வந்த அந்தணர்கள், குழந்தைகளுக்கு வேத ஆகமங்களைப் பயிற்றுவிக்க நல்ல குருமாரைத் தேடி வந்த அவர்களின் பெருமைகளை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் தானே வயோதிக ஆசிரியனாகத் தோன்றினார்.

    அத்தலத்து சிறார்களுக்கு அவர் உயர்ந்த பாடங்களை நடத்தி ஞானமூட்டினார். அப்படி அவர் வீற்றிருந்து பள்ளிக்கூடம் நடத்திய இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பள்ளிக்கூடப் பிள்ளையார் என்றே பெயர் பெற்றது. இப்படி தமிழக மெங்கும் பல ஊர்களில் பள்ளிக்கூடப் பிள்ளையார் எனும் பெயரில் பல விநாயகர் ஆலயங்கள் இருந்து வந்துள்ளன.

    விநாயகரின் அகன்ற காதுகள் நிறைய விஷயங்களை விடாமல் கேட்க வேண்டும் என்பதையும் துதிக்கையால் மூடியவாய் அதிகமாகப் பேசாமல் ஞானத்தைச் சிந்திக்க வேண்டும் என்பதையும், அவரது உடைந்த கொம்பு எழுதும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு நல்ல விஷயங்களைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதையும், கையிலுள்ள மோதகம் எப்போது அறிவில் நிறைவாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பதாகக் கூறுவர். அவர் கையிலுள்ள பாச, அங்குசம் மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்தி அடக்கி ஒருமுக சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த மனஅடக்கம் ஒருமுக சிந்தனை எழுதும் ஆற்றல், ஆசிரியர்கள் சொல்வதை ஒன்றுவிடாமல் கேட்டுக் கொள்ளுதல், நன்கு சிந்தித்தல் எப்போது அறிவைத் தேடுவதில் கவனம் கொள்ளுதல் ஆகியவை ஒவ்வொரு பள்ளி மாணவனுக்கும் தேவையான குணங்களாகும். அவற்றை நினைவூட்டலே ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அவர் வீற்றிருந்து அவர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    • விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள்.
    • சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு.

    விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள். அதுவும் சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு. கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர். மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும்.

    `சங்கட' என்றால் துன்பம் `ஹர' என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் வீட்டிலேயோ வீட்டின் அருகில் உள்ள பிள்ளையாருக்கோ அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்பர். குறிப்பாக, இந்த 21 மூலிகைகளால் விநாயகரை அர்ச்சிக்க குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

    `அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்

    பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,

    நல்ல குணமதிகமாம் அருணை

    கோபுரத்துள் மேவும்

    கணபதியைக் கைதொழுதக் கால்!'

    • அறுகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும் கிடைக்கும்.
    • கரிசலாங்கண்ணி- இல்வாழ்க்கைக்கு தேவையானபொருள்

    வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்டமனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.

    பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.

    மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-

    1) முல்லை- அறம்

    2) கரிசலாங்கண்ணி- இல்வாழ்க்கைக்குத் தேவையானபொருள்

    3) வில்வம்- இன்பம்; விரும்பியவை அனைத்தும்

    4) அறுகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும்

    5) இலந்தை -கல்வி

    6) ஊமத்தை - பெருந்தன்மை

    7) வன்னி - இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்

    8) நாயுருவி - முகப்பொலிவு, அழகு

    9) கண்டங்கத்திரி - வீரம்

    10) அரளி- வெற்றி

    11) எருக்களம்- கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு

    12) மருதம் - குழந்தைப்பேறு

    13) விஷ்ணுக்ராந்தி - நுண்ணறிவு

    14) மாதுளை- பெரும்புகழ்

    15) தேவதாரு - எதையும் தாங்கும் இதயம்

    16) மருவு - இல்லற சுகம்

    17) அரசு - உயர் பதவி, மதிப்பு

    18) ஜாதி மல்லிகை - சொந்த வீடு, பூமி பாக்கியம்

    19) தாழம் இலை - செல்வச்செழிப்பு

    20) அகத்திக் கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை

    21) தவனம் - நல்ல கணவன்-மனைவி அமைதல்

    இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவை நைவேத்யம் செய்ய வேண்டும். மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை விநாயகருக்கு பிடித்தமானது.

    • பூக்களை கிள்ளி விநாயகருக்கு அர்ச்சனை செய்தத கிளிகள்.
    • ரஜினி நிற்பது போன்று ஜெயிலர் விநாயகர் செய்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊத்துக்குளி சாலை, புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் வசித்து வரும் மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி கன்ட்ரோலராக பணியாற்றி வருகிறார். மனைவி கிருத்திகாதேவி டிவைன் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் நுண்கலை பயிலகம் நடத்தி வருகிறார். மகன் தர்ஷன் 11ம் வகுப்பும், மகள் சாய்ஸ்ரீ 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் அம்முலு-ராதா என்ற 2 கிளிகளை வளர்த்து வருகின்றனர். 2 கிளிகளுக்கும் மகள் சாய்ஸ்ரீ பேசவும், பாடவும் பயிற்சி அளித்துள்ளார். 2 கிளிகளும் விநாயகர் சதுர்த்தி அன்று குடும்பத்தினர்கள் விநாயகரை வழிபாடு செய்ததைப் பார்த்து தாங்களும் பூக்களை கிள்ளி விநாயகருக்கு அர்ச்சனை செய்தது. இதைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    சாய்ஸ்ரீ கூறுகையில், கடந்த4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் முன் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் இருந்த கிளியை எடுத்து வந்து சிகிச்சை அளித்து, குணப்படுத்தினோம். "அம்முலு" எனும் பெயர் சூட்டி வீட்டில் வளர்க்க ஆரம்பித்தேன். அதன்பின் கிளி வெளியே சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும். இன்னொரு கிளியை நான் தினமும் பள்ளிக்குச் செல்லும்போது, கணக்கம்பாளையம் அருகே உள்ள ஒரு இறைச்சிக் கடையில் கோழிகளுக்கு நடுவே இருந்ததைப் பார்த்தேன். கறிக்கடைக்காரர் கோழியை போல் கிளியையும் ஏதாவது செய்து விடுவார் என்ற அச்சத்தில் அழுது, புலம்பி எனது பெற்றோருடன் நேரில் சென்று அந்தக் கிளியை தனக்கு தருமாறு கேட்டு வாங்கி வந்தேன். இதற்கு "ராதை" எனும் பெயரை சூட்டினேன். அதன்பின் இரண்டு கிளிகளும் எங்களது வீட்டில் நண்பர்களாக வளர்ந்து வருகிறது. இரு கிளிகளுக்கும் பேசவும், பாடவும் பயிற்சியளித்துள்ளேன். விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரும் வழிபடுவதைப் பார்த்து அம்முலுவும், ராதையும் பூக்களைத் தூவி அர்ச்சனை செய்தது எங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என்றார்.

    அத்திக்கடவு விநாயகர்

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும் வகையிலும் 1,045 குளம், குட்டைகள் நிரம்பும் வகையிலும், அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி நடந்து வருகிறது.

    திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் போராட்டக் குழு சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அத்திக்கடவு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் ஒழலகோவில் என்ற இடத்தில், 5½ அடி உயரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

    போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறுகையில், இத்திட்டம் மூலம் குளம், குட்டைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து அத்திக்கடவு விநாயகர் சிலை வைத்து வழிபடுகிறோம். தற்போது 96 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சிய பணிகளும் வேகமாக முடிந்து திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும். விடுபட்ட குளம், குட்டைகளை இணைத்து இரண்டாவது திட்டம் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இம்முறை சிலை வைத்து பூஜை செய்தோம் என்றார்.

    ஜெயிலர் சிலை

    திருப்பூர் மாவட்டம்உ டுமலை அருகே உள்ள பூளவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மந்திராச்சலம் - காளியம்மாள் தம்பதி. இவர்கள் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு 4 மகன்கள். இதில் 3பேர் பெயிண்ட்டிங் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    4-வது மகன் ரஞ்சித் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு அதன் பிறகு சரியாக படிக்க முடியாததால் படிப்பை நிறுத்தி விட்டு தனது தந்தையுடன் இணைந்து மண்பாண்டம் செய்வதை கற்றுக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக பானை, உருவார பொம்மைகள், அகல் விளக்கு ஆகியன செய்து வருகிறார். தனது ஓய்வு நேரத்தில் நாடகம், நடிப்பு என உள்ளூர் விழாக்களில் ரஜினி வேடமிட்டு பங்கு பெறுவது என இருந்த இவர் ரஜினியின் தீவிர ரசிகர் எனக் கூறப்படுகிறது.

    அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை களிமண்ணில் செய்து பழகி கடந்த 2016 -ம் ஆண்டு படையப்பா சிலையை தனது திறமையால் களிமண்ணால் செய்து சென்னையில் அதனை‌ ரஜினியிடம் கொடுக்க பலமுறை முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. ரஜினியை சந்திக்க முயற்சித்தது பற்றி ரஞ்சித், பூளவாடி டூ போயஸ் கார்டன் ரசிகனின் பயணம் என்ற குறும்படத்தையே இயக்குமளவு சென்றுள்ளது.

    அதன்பின்னர் ஒரு வழியாக 2016-ல் முதலில் லதா ரஜினிகாந்தை சந்தித்து தான் செய்த சிலையை அவரிடம் காண்பித்து, சூப்பர் ஸ்டாரை சந்திக்க வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கையாக படையப்பா சிலையை அவரிடம் ஒப்படைத்துள்ளார். இதனை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ரஞ்சித்துக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் " வணக்கம் ரஞ்சித் நீங்க செஞ்ச என்னுடைய அருமையான பொம்மையை பார்த்தேன். என்ன ஒரு கை வண்ணம். நீங்க ரொம்ப ரொம்ப மிக பெரிய திறமைசாலி. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நான் ஆண்டவனை வேண்டுகிறேன். நிச்சயமா நான் உங்களை ஒருநாள் சந்திக்கிறேன் நல்லா இரு கண்ணா ,நன்றி என அவர் ஆடியோ அனுப்பியிருந்தார். தற்போது விநாயகர் சதுர்த்தியையொட்டி பெரிய அளவு விநாயகர் சிலைகளை செய்து கொடுத்துள்ளார்.மேலும் ரஞ்சித் தனது கதாநாயகன் ரஜினி நடித்து வெளிவர உள்ள ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரஜினி நிற்பது போன்று ஜெயிலர் விநாயகர் செய்துள்ளார்.இவர் செய்துள்ள களிமண்ணால் ஆன இந்த விநாயகர் சிலை படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×