என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 263194"
- கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது.
- சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது புனிதவெள்ளியை தொடர்ந்து வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இதன்காரணமாக அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நுழைவுவாயில் பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மூஞ்சிக்கல், உகாதே நகர் , ஏரிச்சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.
காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது. போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள் உள்பட பொதுமக்கள் தாங்களாகவே போக்குவரத்தை சீரமைத்துக்கொண்டனர். மேலமலையில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போதுமான போக்குவரத்து போலீசார் பணியமர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைந்த அளவே போலீசார் பணியில் உள்ளதால் வேலைபளு அதிகரித்து மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- “பார்க்கிங்” வசதி இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல்
- பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு பூங்கா அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு பூங்கா அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சீசன் முடிவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 5நாட்களாக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பஸ், கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களில் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாகஇருந்தனர்.
இங்கு சீசன் காலங்களில் வரும் சுற்றுலா வாக னங்களை நிறுத்துவதற்கு கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதி யில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் நாள்தோறும் வழக்கத்துக்கு அதிகமாக சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்கு வருவதால் அந்த வாகனங்க ளை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் கடற்கரை சாலையிலும் மற்ற வீதிகளிலும் சுற்றுலா வாகனங்களை தாறுமாறாக கொண்டு நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள்.
இதனால் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதில் சுற்றுலா வாகனம் ஒன்றை டிரைவர் தாறுமாறாக ஓட்டியதால் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள பூங்காவி ல் அமைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட சாலையோர பூந்தொட்டிகள் மற்றும் சாலையோரமாக நடப்பட்டு இருந்த நிழல்தரும் அலங்கார மரங்களை பாதுகாக்க சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு சுவரையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.எனவேகன்னியா குமரிக்கு வரும்சுற்றுலா வாகனங்களைநிறுத்து வதற்கு கூடுதலாக "பார்க்கிங்" வசதி ஏற்படுத்த வேண்டும் என்றுசுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
- மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி கல்லட்டி சாலை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதை ஆகும்.
இந்த பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட சுற்றுலா வேன் கவிழந்து ஒருவர் பலியானார்.
தொடர்ந்து இந்த சாலையில், விபத்துகளும் உயிரிழப்புகளும் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் தடையை மீறியும் வெளிமாநில வாகனங்களும் இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகமான வெளிமாநில, வெளிமாவட்ட வாகனங்கள் இந்த வழியாக வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த சாலையில் விபத்து அடிக்கடி நடந்து வந்தது.
இதன் காரணமாக உள்ளூர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊட்டி நகரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது இதனிடையே இந்த சாலையில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தற்பொழுது இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விகுறியே. கல்லட்டி சாலையில் விபத்துகளை தடுக்க சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதித்தும் அந்த சாலையில் தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்