என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமூக ஆர்வலர்"
- அதிகமாக வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வடலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
- ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேலாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
வடலூர் மாருதிநகரை சேர்ந்தவர் விமல் ராஜா. இவரது மனைவி வேளாங்கண்ணி இவரிடம் இவரது பெரியப்பா மகள் எஸ்தர் ராணி கடந்த ஆண்டு வட்டிக்கு ரூ.4,40,000 கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணி கொடுத்த பணத்தை எஸ்தரிடம் கேட்டுள்ளார். அதற்கு எஸ்தரோ பணத்தை க்கேட்டு வேளாங்கண்ணி தன்னை மிரட்டுவதாகவும் அளவுக்கு அதிகமாக வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வடலூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் வடலூர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் வேளாங் கண்ணி் வடலூர் ஆபத்தாரணபுரத்தைச்சேர்ந்த சமூக நல ஆர்வலரார் தனக்கேசவமூர்த்தி (55) கமலநாதன் அறிமுகமானர்கள்.
இருவரும் வேளாங்கண்ணிக்கு பணத்தை மீட்டு தருவதாகவும், மேலும் போலீஸ் நிலையத்தில் இந்த பிரச்சனையை போலீசாரிடம் பேசி சுமுகமாக தீர்த்து வைப்பதாக கூறி ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேலாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கேசவ மூர்த்தி மற்றும் கமலநாதன் பணத்தை வாங்கி ஏமாற்றி யதை அறிந்த வேளாங்கண்ணி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் இரு வரும் பணத்தை திரும்பிக் கொடுக்க முடியாது என்றும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி வடலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனக்கேசவமூர்த்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான கமல நாதன் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
- விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
பல்லடம் :
பல்லடம் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில் பல்லடம் கிராம சாலைகள் உதவி பொறியாளர் பழனிகுமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் கூட அவசரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புறவழிச் சாலை திட்டப்பணி அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும், புறவழிச் சாலை திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய திட்டத்தை கிடப்பில் போட்டு வருவதை ஏற்க முடியாது. அடுத்த 10 நாட்களுக்குள் புறவழிச் சாலை திட்டத்தை துவங்காவிட்டால்,பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்