என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாழைத்தார் விற்பனை ஜோர்"
- அனைத்து ரக வாழைத்தார்க–ளுக்கும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
- விஷேச நாட்களையட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை வாங்குவதற்காக கேரள, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.
அவ்வப்போது பருவமழையால், வெளி மாவட்டங்களில் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
கடந்த மாதம் துவக்கத்தில் வரத்து குறைவாக இருந்தாலும், முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழைத்தார் விற்பனை மந்தமாக இருந்துள்ளதுடன், குறைவான விலைக்கு விற்பனையானது.
தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார் வாங்கி செல்கிறார்கள். இதனால் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த வாரத்திலிருந்து முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருந்ததால், அனைத்து ரக வாழைத்தார்க–ளுக்கும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த ஏலத்தின்போது, சுற்று–வட்டார பகுதியிலிருந்து சுமார் 1900 க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
8-ந் தேதி ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதால் அனைத்துரக வாழைத்தார்களும் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது.
இதில்செவ்வாழைத்தார் ரூ.55க்கும், பூவந்தார் ரூ.40க்கும், சாம்ராணி ரூ.40க்கும், மோரீஸ் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் ஒருகிலோ ரூ.45க்கும், கேரள ரஸ்தாளி ஒருகிலோ ரூ.50க்கும் என, கூடுதல் விலைக்கு விற்பனையானது.
அதுபோல்ல, நேற்று தேர்நிலையில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாழை இலைகட்டுகள், தொடர்ந்து விஷேச நாட்களையட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்